Warning: Constant WP_HOME already defined in /home/jobsffqw/rishardnajimudeen.com/wp-config.php on line 94

Warning: Constant WP_SITEURL already defined in /home/jobsffqw/rishardnajimudeen.com/wp-config.php on line 95

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/jobsffqw/rishardnajimudeen.com/wp-config.php:94) in /home/jobsffqw/rishardnajimudeen.com/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 89

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/jobsffqw/rishardnajimudeen.com/wp-config.php:94) in /home/jobsffqw/rishardnajimudeen.com/wp-includes/feed-rss2.php on line 8
Rishard Najimudeen https://rishardnajmudeen.com Mon, 03 Nov 2025 07:51:06 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 Ramadan & Reforming Religious Thought Among Sri Lankan Muslims https://rishardnajmudeen.com/2025/02/28/ramadan-amp-reforming-religious-thought-among-sri-lankan-muslims/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=ramadan-amp-reforming-religious-thought-among-sri-lankan-muslims https://rishardnajmudeen.com/2025/02/28/ramadan-amp-reforming-religious-thought-among-sri-lankan-muslims/#respond Fri, 28 Feb 2025 09:42:54 +0000 https://rishardnajimudeen.com/?p=9086 The Month of Ramadan and the Appropriate Time for Reconstructing Religious Thought Among Sri Lankan Muslims (Originally published in the Colombo Telegraph on April 13, 2021) The Easter Sunday terror attack created an unprecedented atmosphere in which Islam and Muslims became scapegoats for the tragedy. Numerous accusations and suspicions have been directed toward them, despite [...]

The post Ramadan & Reforming Religious Thought Among Sri Lankan Muslims first appeared on Rishard Najimudeen.

]]>

The Month of Ramadan and the Appropriate Time for Reconstructing Religious Thought Among Sri Lankan Muslims

(Originally published in the Colombo Telegraph on April 13, 2021)

The Easter Sunday terror attack created an unprecedented atmosphere in which Islam and Muslims became scapegoats for the tragedy. Numerous accusations and suspicions have been directed toward them, despite the fact that both Islam and Sri Lankan Muslims have historically been far removed from such allegations. The history of Sri Lankan Muslims serves as compelling evidence that coexistence with other religious communities has been a defining principle for centuries. Even in contemporary Sri Lanka, Muslims predominantly adhere to the belief in peaceful coexistence. However, despite this rich history of harmony and contribution, the brutal terror attack has inflicted significant damage on the community as a whole.

In response to this crisis, Sri Lankan Muslims must prioritize two critical actions. First, they must courageously address and respond to the accusations leveled against them. Second, they must return to their religious sources to develop interpretations that align with the contemporary context. Through this approach, they can formulate a conceptual framework that demonstrates how a “Sri Lankan Muslim” can simultaneously uphold the constitution of the nation and remain faithful to their religious principles without contradiction.

The Role of Ramadan in the Reform Process

This process of reform should begin with a profound internal review of the societal structure of the Muslim community, with a particular focus on the religious ideologies and approaches they espouse. The month of Ramadan, during which Muslims observe fasting, presents an opportune moment to initiate this discussion on internal reform.

Ramadan is widely regarded by Muslims as the “Month of Reform” for numerous reasons. Notably, the Quran, the primary religious source, was first revealed during this sacred month, marking a pivotal moment in the reformative mission of Prophet Muhammad. Moreover, Ramadan is a time when Muslims significantly alter their daily routines by engaging in fasting and special prayers that extend late into the night. Fasting, according to Islamic belief, entails more than mere abstinence from food and drink; it also involves refraining from sinful behavior in both speech and action. Additionally, it encourages the practice of virtue and good deeds.

In the following discussion, I will highlight two key areas related to Islamic references, the Quran and Prophetic traditions, that require critical reflection and dialogue among Sri Lankan Muslims in general, and religious scholars and institutions in particular, as part of the internal reform process.

A Comprehensive Understanding of Islam and the Quran

Islam has often been portrayed—whether intentionally or unintentionally—as a rigid legal system characterized by severe punishments, such as the killing of innocent people, the oppression of women, and the amputation of thieves’ hands. As a student of Islamic studies, I strongly reject this misrepresentation. A holistic and unbiased reading of Islam’s primary sources, namely the Quran and the traditions of the Prophet, yields a vastly different perspective. A thorough engagement with the Quran—comprising 114 chapters—and an informed interpretation of prophetic traditions, while considering the historical and social context of revelation, provides a nuanced understanding of Islam.

Throughout Islamic history, scholars have exerted great effort in interpreting these sources, leading to the gradual emergence of numerous Islamic disciplines. These scholarly contributions represent interpretations rather than absolute decrees. Among the disciplines directly connected to the primary sources, two are fundamental: the “Science of the Quran” and the “Science of Hadith.” These fields have been developed to establish systematic methodologies for understanding both the Quran and the traditions of the Prophet.

Beyond these two fields, four major disciplines have evolved as interpretative frameworks for religious texts: theology, jurisprudence, Sufism, and ethics. Theology primarily addresses Islamic beliefs, including monotheism, prophethood, religious scriptures, the afterlife, and the existence of angels. Additionally, it encompasses philosophy and logic. Sufism focuses on spiritual purification and self-discipline, with the ultimate goal of fostering a deeper connection with God. This discipline emphasizes both inner purification and ethical conduct in interactions with fellow human beings and nature. Jurisprudence (Fiqh) is often misunderstood and misrepresented. Islamic jurisprudence is categorized into two domains: acts of worship (e.g., daily prayers, almsgiving, fasting, and pilgrimage) and social affairs (e.g., financial transactions, family law, and governance). Scholars have established a vast body of legal maxims and principles to guide the application of Islamic law, recognizing that worship-related rulings are fixed, whereas rulings on social matters allow for human interpretation and adaptation to changing circumstances. Ethics examines individual behavior in relation to God, oneself, family, neighbors, and society. Contemporary Muslim scholars have given significant attention to this field, establishing dedicated academic departments in universities to explore ethical philosophy in conceptual and applied contexts. Topics such as euthanasia, suicide, abortion, medical ethics, animal rights, and sexuality are actively studied within this discipline.

One of the most important distinctions in Islamic jurisprudence is the classification of religious texts into clear-cut (definitive) and ambiguous (open to interpretation) verses. Scholars do not have the authority to reinterpret definitive verses, whereas ambiguous verses allow for differing scholarly interpretations. Many of the punishments mentioned in Islamic texts fall into the latter category, leading to diverse scholarly opinions. For example, the Quran prescribes the amputation of a thief’s hand, but scholars have debated the precise criteria for defining theft, the minimum threshold for this punishment, and its applicability in different contexts. Moreover, Islam firmly establishes that the enforcement of legal rulings is the responsibility of the state, not individuals. The overarching purpose of Islamic laws is to cultivate a disciplined society and promote peace and harmony, with punishments serving as a means to achieve these objectives rather than as ends in themselves.

An Objective-Based Approach to Islam

An objective-based approach to Islamic interpretation has been an integral part of scholarly thought since the early Islamic period. This method contrasts with literalist interpretations by prioritizing the ultimate objectives (maqasid) of religious texts. Scholars engage in thorough analysis to discern the underlying purposes of Quranic verses—some of which are explicitly stated, while others require reasoned inference. Traditional scholars unanimously agree that Islam’s higher objectives encompass the preservation of five fundamental values: Religious freedom, Life, Intellect, Property, Lineage. In contemporary times, scholars have expanded the scope of these objectives and proposed additional ones, such as social justice, peace, mercy, human rights, environmental protection, and public health. This approach seeks to bridge Quranic principles with universal ethical norms and evolving societal needs.

Conclusion

As discussed, a comprehensive and objective-based approach to Islamic interpretation is crucial for addressing contemporary challenges. Sri Lankan Muslims have a responsibility to engage in self-reflection and reassess the interpretative methodologies they employ in understanding religious texts. Furthermore, they must strive to be a contributing and progressive community in the modern era. In addition to these two approaches, greater emphasis should be placed on concepts such as pluralism, multiculturalism, and inclusivity in the reform process. I intend to explore these themes in detail in a subsequent article.

The post Ramadan & Reforming Religious Thought Among Sri Lankan Muslims first appeared on Rishard Najimudeen.

]]>
https://rishardnajmudeen.com/2025/02/28/ramadan-amp-reforming-religious-thought-among-sri-lankan-muslims/feed/ 0
பெண்களை நடாத்தும் முறை  _ நாகரிகத்தினதும்  பண்பாட்டினதும் அளவு கோலாகும் https://rishardnajmudeen.com/2025/02/12/the_way_women_are_treated/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=the_way_women_are_treated https://rishardnajmudeen.com/2025/02/12/the_way_women_are_treated/#respond Wed, 12 Feb 2025 14:11:16 +0000 https://rishardnajimudeen.com/?p=9076 ஷெய்க் அஹ்மத் ரைசூனி மொழிபெயர்ப்பு -ஷெய்க் ஷாகிப் அப்துல் ஹலீம் இமாம்களான புகாரியும் , முஸ்லிமும்  நீண்டதொரு ஹதீஸில் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதை அறிவித்துள்ளனர்:- குறைஷிக் கூட்டத்தவர்களான நாங்கள் பெண்கள் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற ஓர் சமூகமாக இருந்தோம். நாம் மதீனாவுக்கு வந்தபோது பெண்கள் மேலாதிக்கம் செலுத்துகின்ற ஒர் சமூகத்தை கண்டோம் .எமது பெண்கள் மதீனா பெண்களிடமிருந்து கற்றுக்கொள்ளலானார்கள். ஒரு நாள் நான் என் மனைவி மீது கோபம் கொண்டேன். உடனே அவள் என்னை [...]

The post பெண்களை நடாத்தும் முறை  _ நாகரிகத்தினதும்  பண்பாட்டினதும் அளவு கோலாகும் first appeared on Rishard Najimudeen.

]]>
ஷெய்க் அஹ்மத் ரைசூனி

மொழிபெயர்ப்பு -ஷெய்க் ஷாகிப் அப்துல் ஹலீம்

இமாம்களான புகாரியும் , முஸ்லிமும்  நீண்டதொரு ஹதீஸில் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதை அறிவித்துள்ளனர்:- குறைஷிக் கூட்டத்தவர்களான நாங்கள் பெண்கள் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற ஓர் சமூகமாக இருந்தோம். நாம் மதீனாவுக்கு வந்தபோது பெண்கள் மேலாதிக்கம் செலுத்துகின்ற ஒர் சமூகத்தை கண்டோம் .எமது பெண்கள் மதீனா பெண்களிடமிருந்து கற்றுக்கொள்ளலானார்கள். ஒரு நாள் நான் என் மனைவி மீது கோபம் கொண்டேன். உடனே அவள் என்னை எதிர்த்துப் பேசினாள். நான் என்னை எதிர்த்துப் பேசுவதை தடுத்தேன். “நான் உங்களை எதிர்த்துப் பேசுவதை ஏன் தடுக்கின்றீர்கள்? என்று கேட்டாள். அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவிமார்கள் அவரை எதிர்த்துப் பேசுகின்றனர். அவர்களில் ஒருவர் நாள் முழுதும் அவரை  புறக்கணிக்கின்றார்” என்று கூறினாள். எனவே நான் உடனே சென்று (அவரது  மகள்) ஹப்ஸாவை  சந்தித்தேன். அல்லாஹ்வின் தூதரை எதிர்த்துப் பேசுகின்றீர்களா? என்று கேட்டேன். ஆம் என்று கூறினார் . உங்களில் ஒருவர் அவரை நாள் முழுதும் புறக்கணிக்கின்றீர்களா? என்று கேட்டேன். “ஆம்”என்று கூறினார். அப்படியாயின்   உங்களில் இதை செய்தவர்  நஷ்டம் அடைந்து விட்டார்! நாசம் அடைந்து விட்டார்! அல்லாஹ்வின் தூதரோடு கோபம் கொண்டதற்காக அல்லாஹ் அவரோடு  கோபம் கொள்வான், அதன் காரணமாக அவள் அழிந்து விடுவாள் என்ற நம்பிக்கை அவளுக்கு இருக்கிறதா? நீ அல்லாஹ்வின் தூதரை எதிர்த்துப் பேசாதே! அவரிடம் எதையும் கேட்காதே! உனக்கு தோன்றுவதை என்னிடம் கேள்………… என்று நான் கூறினேன்.

இந்த ஹதீஸ் பல விடயங்களை சுட்டிக்காட்டுகின்றது:-

1. மக்காவாசிகளான குறைஷிகளிடத்தில் இல்லற பந்தமானது  பெண்கள் மீதான ஆண்களின் மேலாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டது.   ஆணே தீர்மானம் எடுப்பவனாக இருந்தான். அவனே அந்தஸ்து மிக்கவனாக திகழ்ந்தான். அவனது குரல், பெண்ணின் குரலை  விட ஓங்கியிருந்தது.எதனை செய்ய வேண்டும், எதனை விட்டு விடவேண்டும் என்பதை அவனே முடிவு செய்தான். பெண்ணுக்கு அதில் தலையீடு செய்ய முடியாதிருந்து.

2. மதீனாவாசிகளிடத்தில் இவ்விடயம் இதற்கு நேர்மாறானதாகவிருந்தது . அன்சாரிப்  பெண்கள் ஆண்கள் மீது  ஆதிக்கம் செலுத்தினர்.   அல்லது அன்சாரிகள் தமது பெண்களிடம் ஆதிக்கத்தை விட்டுவிட்டார்கள் என்று கூறலாம் . எனவே அவர்களுக்கென ஓர் உயர் அந்தஸ்து இருந்தது. அவர்களது கருத்துக்கள் செவிசாய்க்கப்பட்டன. தமது கணவன்மார்களிடம் அவர்களுக்கு  செல்வாக்கு இருந்தது. புகாரியின் ஒர் அறிவிப்பில் இருப்பது  போல, “அன்சாரிப் பெண்களின் பண்பாடு” என்று உமர் விவரித்த நடத்தை இதுவாகும். மதீனத்து அன்சாரி பெண்களுக்குரிய இந்த மதிப்புமிகு அந்தஸ்தின் காரணமாக, வெட்கம், கூச்சம், சங்கடம் மிக்க விவகாரங்களில் புதிய மார்க்கத்தின் தீர்ப்புகளை கேட்பதிலும் ஆராய்வதிலும் அவர்களது துணிவின் மூலம்  அன்சாரிப் பெண்கள் தனித்துவம் பெற்று விளங்கினர். இதோ குறைஷியரான, இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே, அன்சாரிப்  பெண்களை பற்றி சாட்சி பகர்கின்றார் : “அன்சாரிகளின் பெண்கள் எவ்வளவு நல்ல பெண்கள்; அவர்களின் கூச்சம் மார்க்கத்தை பற்றி கேட்பதற்கும் அதைப் பற்றி ஆழ்ந்த விளக்கம் பெறுவதற்கும் அவர்களைத் தடுக்கவில்லை”.

3. மதீனாவிற்கு இடம்பெயர்ந்த குறைஷிப் பெண்கள், அன்சாரிப் பெண்களின் மூலம் தாக்கமுறலாயினர். அவர்களை பின்பற்றத் தொடங்கினர். ஒரு வகையான ஆதிக்கம் அல்லது எதிர்ப்பை கடைப்பிடிப்பதினூடாக கருத்துக்கள், முடிவுகள் மற்றும் நடத்தையில் தங்கள் கணவருக்கு நிகராக நின்றனர்.

4. அல்லாஹ்வின் தூதரின்,  மனைவிமார்களுடான நடத்தையும் உறவும்  அன்சாரிகளின் முறைப்படியும் “அன்சாரிப் பெண்களின் பண்பாடு” க்கு ஏற்பவும் இருந்தது. அல்லது இன்னும் சரியாகச் சொல்வதானால்,  அன்சாரிகளதும் அன்சாரிப் பெண்களினதும் பண்பாடு, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கொண்டு வந்த வழிகாட்டுதலுக்கும் பண்பாட்டுக்கும் ஏற்பவே இருந்தது.  அவரது மனைவிமார்கள் அனைவருக்கும்  அவரோடு கலந்தாலோசிப்பதற்கும்; அவரது கருத்து, நடத்தை தொடர்பாக மாற்றுக் கருத்து சொல்வதற்கும்; கோபம், வெறுப்பை அல்லது பதிலளிக்கப்படாத கோரிக்கைக்காக அதிருப்தியை வெளிகாட்டும் வகையில்  பகல் முழுதும் அவரை புறக்கணித்து நடப்பதற்கும் அவர் அனுமதித்ததோடு, பொறுத்தும் கொண்டார்.

5. உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மனைவி, நபி அவர்களின் முன்மாதிரியையும் மதீனாவின் முன்மாதிரியையும் பின்பற்றிநடக்கலானார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவியும் தனது மகளுமான ஹப்ஸாவிடமிருந்து தான் கேள்விப்பட்டவற்றை அதற்கு ஆதாரமாகக் கொண்டார். அதன் காரணமாக அவர் ஊக்கமடைந்து, உமரின் விவகாரங்களில் – அவர் கடும் போக்கிற்கு பெயர்பெற்றவர் – அவள், அவர்  மீது கோபம் கொண்டு, சப்தமிட்டு  அவரை எதிர்த்துப் பேசுவதற்கு முன் வந்தாள்.

பொதுவாக நாம் கூற முடியும்:- பெண்களை அணுகுவதில் நபிகளாரின் வழிமுறை; மரியாதை செலுத்துதல், கண்ணியப்படுத்துதல், சகிப்புத்தன்மையுடனும், விட்டுக் கொடுப்புடனும் நடந்து கொள்ளுதல் என்பவற்றின் மூலம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. பெண்களுடான அன்சாரிகளின் பண்பாடும் அவ்வாறுதான் காணப்பட்டது. நபிகளாரின் வழிமுறைக்கு ஏற்பவே  அது அமைந்திருந்தது. இது  பெண்கள் மீதான ஆண்களின் மேலாதிக்கம் நிலவி வந்த அரபு சூழலில் பெண்களை அணுகுவதில் ஓர் மடைமாற்றத்தை ஏற்படுத்தியது.

மாறாக, பெண்களின் மீது ஆண்களின் ஆதிக்கமும்  ஆக்கிரமிப்பும்  பண்டைய மற்றும் நவீன காலங்களில் அனைத்து சமூகங்களிலும் மக்களிடையேயும் நிலவும் எளிதான சூழ்நிலையாகும். இதில் எவ்வித சிறப்போ, தனித்துவமோ, உயர்வோ இல்லை. மாறாக சிறப்பு, தனித்துவம், உயர்வு ஆகியவை எதிர்நிலையில் அடையப்படுகின்றன. அதனால்தான் இஸ்லாம் வந்து மக்களை அதன்பால் நகர்த்தியது. சிறப்பு, தனித்துவம், உயர்வு  இருப்பவற்றை நோக்கி பயிற்றுவித்தது. ஆணாதிக்கத்தை வழக்காகாக் கொண்ட தனி மனிதனுக்கோ,  அதிலிருந்து வெளிவருவது எளிதானது அல்ல. இது உமரின் நிலைப்பாட்டிலும் அவர் தனது சமூகத்தை பற்றியும் தன்னைப் பற்றியும் கூறியவற்றிலும் தெளிவாகிறது. எனவே அவர் இறைத்தூதருக்கும் அவரது மனைவிமார்ளுக்கும் இடையே நிலவும் உறவு முறையின் யதார்த்தத்தை அறிந்தபோதும், அவரது மனைவி (ஆத்திகா) தனது வாக்குவாதத்தின் வலிமையால் அவரை “தோற்கடித்தபோதும்”, அந்த விடயத்தை அவர் ஜீரனிக்கவில்லை.

குறிப்பாக, தனது மகள் தங்கள் இல்லற வாழ்வில் கூட, அல்லாஹ்வின் தூதரை விமர்சிக்கவும் கோபப்படுத்தவும் துணிவதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

உமர்  பின் கத்தாபின் மனைவியான ஆதிகா பின்த் ஜைத் பின் அம்ர் பின் நுஃபைலிடமிருந்து  இமாம் மாலிக் தனது முவத்தாவில்  அறிவித்துள்ளார்- அவர் மஸ்ஜிதுக்கு செல்ல உமர் பின் அல்-கத்தாபிடம் அனுமதி கேட்பார். அவர் அமைதியாக இருப்பார்.  அதனால் அவள் கூறுவாள்: அல்லாஹ்வின் மீது ஆணையாக, நீங்கள் என்னைத் தடுக்காவிட்டால் நான் வெளியேறிச் செல்லுவேன்”. அவர் அவளைத் தடுக்கவில்லை.  அவர் கடைபிடிக்க ஆரம்பித்த புதிய தர்க்கமாகவும் நடத்தையாகவும் அது இருந்தது. வலிமையையும் கடுமையும்கொண்டு பிறரை மிகைப்பதற்கு  பதிலாக நீதியுடனும் கருணையுடனும் மிகைப்பதற்கு  மக்களுக்குக் கற்பிக்கின்றது. 

சிறப்பின் அளவுகோல்

இந்தமாற்றத்தையும், அதன் பெறுமானங்கள் மற்றும் அதன் கலாச்சாரத்தையும் உறுதிப்படுத்தும்  வகையில், ஆயிஷாவின் ஹதீஸையும் நாங்கள் காண்கிறோம்: அல்லாஹ்வின் தூதர் –  – கூறினார்:  “உங்களில் சிறந்தவர் அவருடைய குடும்பத்திற்கு சிறந்தவர், நான் என் குடும்பத்திற்கு உங்களில் சிறந்தவன்”. சிறந்தவர், நல்லவர் என்பதற்கான அளவுகோல் ஒரு நபர் தனது குடும்பத்தை, அதாவது அவரது மனைவி மற்றும் குடும்பத்தாரை நடத்துவதில் தான் உள்ளது. மார்க்கத்திலும் ஒழுக்கத்திலும் சிறந்தவர், தனது குடும்பத்தை சிறப்பாக நடத்துபவர்; தனது குடும்பத்துடன் நல்ல முறையில் நடந்து  கொள்பவரே. 

இந்த ஹதீஸ்  ஒரு சீர் கெட்ட சமூகச் சூழலைக் குறிக்கிறது.என்றாலும் அதுதான் தற்போது  நிலவிக்கொண்டிருக்கிறது. நண்பர்களுடான, தோழர்களுடனான உறவுகளில் குறிப்பிடத்தக்க அளவு நன்னடத்தையுடனும் நல்லொழுக்கத்துடனும் பழகும்  பல மனிதர்களை காண்கிறோம். நீங்கள் அவர்களிடம் நிறைய மென்மை, மகிழ்ச்சி, பணிவு, ஒழுக்கம்,விட்டுக் கொடுப்பு, சகிப்புத்தன்மை ஆகியவற்றைக் காண்பீர்கள். ஆனால் அவர்கள் தமது குடும்பத்துடனும், வீட்டுக்குள்ளும் இதற்கு மாற்றமாக இருப்பதைக் காண்பீர்கள்.

பல ஆண்கள் இன்னும் தங்கள் விருப்பங்களையும்,எதேச்சை அதிகாரத்தையும் ,கடுமையையும்  பெண்கள் மீது திணிப்பதை  தங்கள் முழு ஆண்மையினதும் குடும்ப நிருவாகத்தினதும  ஒரு பகுதியாக   நம்புகிறார்கள். அவர்களது கருத்துக்களோடு முரண்படக்கூடிய பெண்ணின் கருத்துக்களை கவனத்தில் கொள்வதும், அவளது விருப்பங்களுக்காக அவர்களது விருப்பங்களை விட்டும் இறங்கி வருவதும், அவள் மீது இரக்கம் காட்டுவதும்  அவர்களின் ஆண்மைக்கும் அந்தஸ்துக்கும் பொருந்தாத குறைபாடு, பலவீனம் என்று அவர்கள் நம்புகிறார்கள். இதற்காகவும் இவர்களுக்காகவும் தான் நபி அவர்கள் கூறினார்கள்: “உங்களில் சிறந்தவர் அவருடைய குடும்பத்திற்கு சிறந்தவரே, நான் என் குடும்பத்திற்கு சிறந்தவன்.” 

எவ்வாறாயினும்,   எமது இஸ்லாமிய சமூகங்களில் தொடர்ந்தும் பாதுகாக்கப்பட்டுவருகின்ற எமது அழகிய ஒழுக்க மரபுகளின் எச்சங்கள் சிலவற்றில் ஒன்றுதான்: உதவி, உபகாரத்தில் பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பது. உதாரணமாக – இதனை நாம்  சனநெரிசலில், காத்திருக்கும் சூழ்நிலைகளில், ரயில்கள், பேருந்துகள் மற்றும் அதுபோன்றவற்றில் அமர்வதற்கு ஓர் இருக்கை தேவைப்படும் வேளையிலும்,கடைகளில் பொருட்கள் கொள்வனவுசெய்யும் வேளையிலும் கண்டுகொள்கின்றோம்.

இந்த கண்ணியமிகு நடத்தைக்கான அடிப்படை  நபிமார்களின் வழிமுறைகளில் உள்ளது. மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றி அல் குர்ஆன் கூறுவது போல:-*((அவர் (மூஸா) மத்யன் நகரிலுள்ள ஓர் கிணற்றின் அருகே வந்த போது அங்கு ஓர் மக்கள் கூட்டத்தை கண்டார். அவர்களைத் தவிர தடைபட்டிருக்கும் இரு பெண்களையும் கண்டார். உங்கள் இருவரது விடயம் என்ன? என்று கேட்டார். இடையர்கள் வெளியேறும் வரை எமக்கு தண்ணீர் புகட்ட முடியாது. எமது தந்தையோ ஒரு பெரிய முதியவராக இருக்கின்றார் என்று கூறினார்கள். எனவே அவர் ( மூஸா) அவர்களுக்கு தண்ணீர்புகட்டிக் கொடுத்தார். பிறகு நிழலின் பக்கம் திரும்பி “என் இரட்சகனே! நீ எனக்கு இறக்கிவைத்த நலவுகளுக்கு நான் தேவை உடையவனாகவே இருக்கின்றேன்.))* ( கஸஸ் : 23 -24)

The views and opinions expressed in this article are those of the author and do not necessarily reflect the official policy or position of rishardnajimudeen.com.

The post பெண்களை நடாத்தும் முறை  _ நாகரிகத்தினதும்  பண்பாட்டினதும் அளவு கோலாகும் first appeared on Rishard Najimudeen.

]]>
https://rishardnajmudeen.com/2025/02/12/the_way_women_are_treated/feed/ 0
இலங்கை அரபு மத்ரசா கல்வி- கலந்துரையாடப்பட வேண்டிய சில‌ விடயப்பரப்புகள் https://rishardnajmudeen.com/2025/01/24/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25b2%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2588-%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25ae%25aa%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25b0%25e0%25ae%259a%25e0%25ae%25be-%25e0%25ae%2595%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25ae%25bf-2 https://rishardnajmudeen.com/2025/01/24/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-2/#comments Fri, 24 Jan 2025 01:15:55 +0000 https://rishardnajimudeen.com/?p=9019 இலங்கை மத்ரசா வரலாறு 19ம் நூற்றாண்டு தொடக்கம் ஆரம்பித்து, இன்று வரை நீட்சி பெற்று வந்திருக்கிறது. இலங்கை முஸ்லிம் வாழ்வொழுங்கை நெறிப்படுத்துவதிலும், இஸ்லாத்துடனான தொடர்பையும் உணர்வையும் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதிலும் அரபு மத்ரசாக்கள் நியாயமாக‌ பங்களிப்பு செய்திருக்கின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. நீண்ட வரலாற்றுப் பங்களிப்பைக் கொண்ட மத்ரசா கல்வியொழுங்கு பற்றிய ஆழமான உரையாடல் ஒன்றின் அவசியத்தையே இக்கட்டுரை சுட்டிக் காட்டும் விடயப்பரப்புக்கள் விளக்குகின்றன. இங்கு முன்வைக்கப்படும் கலந்துரையாடலுக்கான பரப்புக்கள் எதிர்கால சீர்திருத்ததை யாசிக்கும் அதேநேரம், [...]

The post இலங்கை அரபு மத்ரசா கல்வி- கலந்துரையாடப்பட வேண்டிய சில‌ விடயப்பரப்புகள் first appeared on Rishard Najimudeen.

]]>

இலங்கை மத்ரசா வரலாறு 19ம் நூற்றாண்டு தொடக்கம் ஆரம்பித்து, இன்று வரை நீட்சி பெற்று வந்திருக்கிறது. இலங்கை முஸ்லிம் வாழ்வொழுங்கை நெறிப்படுத்துவதிலும், இஸ்லாத்துடனான தொடர்பையும் உணர்வையும் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதிலும் அரபு மத்ரசாக்கள் நியாயமாக‌ பங்களிப்பு செய்திருக்கின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. நீண்ட வரலாற்றுப் பங்களிப்பைக் கொண்ட மத்ரசா கல்வியொழுங்கு பற்றிய ஆழமான உரையாடல் ஒன்றின் அவசியத்தையே இக்கட்டுரை சுட்டிக் காட்டும் விடயப்பரப்புக்கள் விளக்குகின்றன. இங்கு முன்வைக்கப்படும் கலந்துரையாடலுக்கான பரப்புக்கள் எதிர்கால சீர்திருத்ததை யாசிக்கும் அதேநேரம், எதிர்கால கற்கைகளுக்கான ஓர் எட்டாகவும் அமையலாம் எனக் கருதுகிறோம்.

1- மத்ரசாக்களது வரலாறு

இலங்கை மத்ரசாக்கள் பற்றிய ஏற்கனவே எழுதப்பட்டிருக்கும் ஆய்வுகள், புத்தகங்களைத் தேடிப்பார்க்கும் போது போதாமை நிலவுவதை அவதானிக்கலாம். நூற்றாண்டு கடந்த நிறுவன ஒழுங்கின் வரலாறு தொகுக்கப்படல் எமது முதன்மையான பணிகளில் ஒன்றாக அமைதல் பல வகைகளிலும் பயன் தரக்கூடியது. ஆய்வாளர் MMM மஹ்ரூப் போன்றவர்கள் இது பற்றிய உரையாடலை ஆரம்பித்து வைத்தார்கள். உதாரணமாக, 1995 இல் பிரசுரிக்கப்பட்ட அவரது The ‘Ulama’ in Sri Lanka 1800-1990: Form and Function எனும் கட்டுரை மிக முக்கியமான ஒன்று. துரதிஷ்டவசமாக, தொடர்ந்து வந்த காலப்பகுதியில் இவ்வகையான அறிவுபூர்வமான உரையாடல்களை மிக அரிதாகவே கண்டு கொள்ள முடிகிறது.

மத்ரசா கல்வி நிறுவனம் எவ்வகையான சூழமைவில் கருக்கொண்டது, தோற்றம்பெற்றது, அது சுமந்திருந்த பாடத்திட்டம், இலக்கு, அது எதிர்கொண்ட சவால்கள், அதனது சாதனைகள் மற்றும் மத்ரசா கல்வி ஒழுங்கின் வளர்ச்சிக்கு பங்களித்தவர்கள் என பல விடயங்களையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. தோற்றம் பெற்ற மத்ரசா ஒழுங்கு காலப்போக்கில் எவ்வாறான மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டது, ஏற்பட்ட மாற்றங்கள், சீர்திருத்த முயற்சிகள் என இன்னொரு பக்கமும் அது நீள வேண்டியுள்ளது. ஆய்வாளர் ARM இம்தியாஸுடைய “Islamic Identity Formation, Madrasas, and Muslims in Sri Lanka” போன்ற கட்டுரைகள் மேலே கூறப்பட்ட வரலாற்றெழுதுகையில் துணைநிற்கக்கூடிய கட்டுரைகள் எனலாம்.

2- சிந்தனை முகாம்களுக்கிடையிலான உரையாடல்

இலங்கை முஸ்லிம் சமூகத்தினுள் வித்தியாசப்பட்ட போக்குகள், சிந்தனைகள், அமைப்புக்கள், இயக்கங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக, இஸ்லாமிய இயக்கங்களின் தோற்றப்பாட்டோடு மத்ரசா ஒழுங்கிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தன எனலாம். இயக்கங்கள் தாம் பற்றிக் கொண்ட சமூக மாற்ற முறைமையை தலைமைதாங்கி கொண்டு செல்லும் மார்க்க அறிஞர் பரம்பரை பற்றி சிந்தித்ததன் விளைவாக, இயக்கங்கள் பின்பற்றிய சிந்தனை முறைமையை அடியொட்டிய மத்ரசாக்கள் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் தோற்றம்பெற ஆரம்பித்தன. குறிப்பாக, சூபித்துவ சிந்தனை, தப்லீக் சிந்தனை, சலபிய சிந்தனை மற்றும் நடுநிலை சிந்தனை என்ற நான்கு வகை சிந்தனைப் பள்ளிகளினதும் பரவல் மிக அதிகமாக இருப்பதை அவதானிக்கலாம். அத்துடன் சேர்த்து ஷீஆ கொள்கை சார்ந்த மத்ரசாக்களும் ஓர‌ளவில் தோற்றம்பெற ஆரம்பித்தன.

இலங்கை முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதவர்களுடனான தொடர்பு, சகவாழ்வு பற்றி வலியுறுத்திக் கூறியளவு முஸ்லிம்கள் மத்தியிலான உறவு பற்றி பேச மறந்து விட்டதாகவே எண்ணத் தோன்றுகிறது. இங்குதான், மத்ரசாக்களுக்கிடையிலான உரையாடல் தொலைந்து போகிறது. ஒரு கட்டத்தில் அமைப்புகள், இயக்கங்களுக்கிடையிலான முருகல்நிலை உக்கிரமடைந்து, சண்டை, கத்தி எனும் பாவநிலைக்கு வந்தடைந்ததை நாம் மறந்துவிடக் கூடாது. தொழிநுட்ப காலத்தில் இருக்கும் நாம், முகப்புத்தகம் போன்ற உரையாடல் தளங்களில் விவாதம் என்ற பெயரில் பரப்பப்படும் வெறுப்பு மற்றும் எதிர்ப்பை எவ்வாறு கையாள்வது என்பதில் முஸ்லிம் சமூகம் தடுமாறிக் கொண்டிருப்பதைக் காணலாம். இங்கு, மத்ரசாக்களுக்கிடையிலான கலந்துரையாடல், ஒரு சாராரை இன்னொரு சாரார் புரிந்துகொள்ளல் என்பன அவசியப்படுகின்றன. குறிப்பிட்டதொரு சிந்தனைப் பள்ளியைச் சார்ந்தவர்கள் எவ்வாறான ஆய்வுமுறைமையைப் பின்பற்றுகின்றனர், மத்ரசா சுவர்களுக்குள்ளாள் அவர்களது அன்றாட கற்றல், கற்பித்தல் உள்ளடங்களான இதர செயற்பாடுகள் எவ்வாறிருக்கின்றன போன்ற விடயங்கள் பற்றிய அறிவு பரஸ்பர புரிந்துணர்வை தோற்றுவிக்கும் எனக கருதலாம். உதாரணமாக, மத்ரசா கல்வி பற்றிய உரையாடலில் அதிக ஈடுபாடுகாட்டிவரும் பேராசிரியர் இப்ராஹிம் மூஸாவுடைய “What is Madrasa?” என்ற புத்தகம் இந்திய துணைக்கண்டத்தின் தேவ்பந்த் சிந்தனைப் பள்ளி மத்ரசாக்கள் பற்றிய அழகானதொரு புரிதலைத் தருகிறது. இலங்கையிலிருந்தும் இவ்வாறான ஆய்வுகள், எழுத்துக்கள் உருவாக வேண்டியுள்ளது போல, குறிப்பிட்ட சிந்தனைப் பள்ளியைச் சார்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் இன்னொரு சிந்தனைப் பள்ளியைச் சார்ந்த மத்ரசாக்களுக்கான தற்காலிக பரிமாற்றமும் இடம்பெறுவது பற்றியும் சிந்திக்கலாம். கல்வித்துறை சார்ந்த நிபுணர்கள் கல்வி நிறுவனங்களுக்கு மத்தியிலான தற்காலிக பறிமாற்றம் எனும் கருத்தாக்கத்தை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர்.

3- உள்ளக சீர்திருத்தம் ஒன்றின் தேவை

மத்ரசா சீர்திருத்தம் பற்றி பேசும் அறிஞர்கள் இரு வகை சீர்திருத்தங்களை விளக்குகின்றனர். அரசு, அதன் மத விவகார அமைச்சு புறத்திலிருந்து வரும் சீர்திருத்தம் அல்லது மேலிருந்து நிர்ப்பந்திக்கும் சீர்திருத்தம் எனவும் இதனைக் கூறலாம். இக்கட்டத்தில் மத்ரசாக்கள் விரும்பியோ விரும்பாமலோ கட்டளைகளை, சட்டங்களை நடைமுறைப்படுத்த நிர்ப்பந்திக்கப்படுகின்றன. இவ்வகையான சீர்திருத்தம் ஆரோக்கியமான, எதிர்பார்க்கும் விளைவுகளைத் தரப்போவதில்லை என ஆய்வாளர் முஹம்மத் அபூ நிமர் போன்றவர்கள் கருதுகின்றனர். வெளியிலிருந்து வரும் அழுத்தம் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளடங்களாக மத்ரசா சூழலிலும் அதன் கலாச்சாரத்திலும் நிலையான மாற்றத்தை ஏற்படுத்தாது என அவர்கள் வாதாடுகின்றனர். மாற்றமாக, பொய்யான தரவுகள் கொண்ட அறிக்கைகளே சமர்ப்பிக்கப்படும் எனவும் கூறுகின்றனர்.

அடுத்த வகை சீர்திருத்தம் உள்ளக சீர்திருத்தமாகும். மத்ரசா தன்னையே மீள்வாசித்துக் கொள்ளும் பொறிமுறையினூடாக இவ்வகை சீர்திருத்தம் தோற்றம் பெறுகிறது. அது இயல்பாக நடைபெறும் ஒரு செயற்பாடு. தனிமனிதன் தன்னை மீள்வாசித்துக் கொள்வதுபோல இங்கு நிறுவனமொன்று தன்னை மீள்வாசித்து, மீலொழுங்குபடுத்திக் கொள்கிறது. நிறுவனம் உருவாக்கப்பட்டதன் நோக்கம், அதன் அடைவுகள், ஆசிரியர்களது நிலை, நிறுவனம் வழங்கும் கற்கை மீதான மாணவர்களது ஆர்வம், ஈடுபாடு, அண்மையில் பட்டம்பெற்று வெளியேறிய மாணவர்களது நிறுவனம் பற்றிய மனோநிலை போன்ற பல பகுதிகளையும் ஆய்வுக்குட்படுத்துவது உள்ளக சீர்திருத்தத்துக்கு வழிவகுக்கிறது.

4- இஸ்லாமிய மூலாதாரம் மற்றும் நடைமுறை சார்ந்த உரையாடல்

மத்ரசாக்களது பாடத்திட்டம் சார்ந்த கலந்துரையாடல் உள்ளக சீர்திருத்தத்தின் மையப்புள்ளி எனலாம். பெரும்பாலான மத்ரசாக்கள் ஆரம்ப கால அறிஞர்களது புத்தகங்களை அடிப்படையாக வைத்தே பாடங்களை போதிக்கின்றன. சில மத்ரசாக்கள் நவீன கால அறிஞர்களையும் உள்வாங்கியிருக்கின்றன. இங்கிருக்கும் பிரச்சினை கற்பிக்கப்படும் விடயங்களுக்கும் வாழும் சூழமைவு, உலக ஒழுங்குக்கும் இடையிலான பாரிய இடைவெளி. உதாரணமாக, அல்குர்ஆன் போதனையை எடுத்துக் கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட சில சூராக்கள் கற்பிக்கப்படுகின்றன. தப்சீர்களான இப்னு கசீர், ஜலாலைன் போன்ற தப்சீர்கள் போதிக்கப்படுகின்றன. அல்குர்ஆன் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை முன்வைக்கின்றது, அது அனைத்து விவகாரங்களையும் விளக்குகிறது என்ற கருத்தும் வலியுறுத்திக் கூறப்படுகிறது. எனினும், கற்கும் மாணவர்களிடத்தில் இன்றிருக்கும் சூழல்மாசடைதல் சார்ந்த பிரச்சினைக்கு அல்குர்ஆன் முன்வைக்கும் தீர்வு என்ன? இன்று மேற்குலகில் ஆதிக்கம் பெற்று வரும் குடும்பக் கட்டமைப்பு சார்ந்த உரையாடல்களை அல்குர்ஆனின் ஒளியில் எவ்வாறு புரிந்துகொள்ளலாம்? போன்ற கேள்விகளை முன்வைக்கும் போது அல்குர்ஆன் மீதான ஒட்டுமொத்தப்பார்வை மாணவர்களுக்கு வழங்கப்படுவதில் பாரிய போதாமை நிலவிவதை அவதானிக்கலாம். நவீன கால அறிஞரான தாஹா ஜாபிர் அல்வானியுடைய புத்தகங்கள் இவ்வகையான சிக்கலை விரிவாக விளக்குகின்றன.

இஸ்லாமிய கற்கையில் கற்பிக்கப்படும் ஹதீஸ், பிக்ஹ், உசூல் அல்-பிக்ஹ், அகீதா, சீரா போன்ற பாடங்கள் மாணவர்களை எமது வரலாறு நோக்கிக் கூட்டிச் செல்வதுபோல, இன்றிருக்கும் நாம் வாழும் சூழமைவு நோக்கியும் பயணிக்கத் தூண்ட வேண்டும். உசூல் அல்-பிக்ஹில் “இஜ்மா” என்ற கருத்தாக்கம் இன்றைய தொழிநுட்ப காலத்தில் எவ்வகையில் சாத்தியமானது? சீராவில் இறைத்தூதரது (ஸல்) “ஆட்சியாளர்” எனும் பாத்திரத்தை எமது சூழமைவில் எங்கு பொருத்துவது? ஹதீஸ் பாடப்பரப்பில் வரும் “இறைநிராகரிப்பாளர்களுக்கு மத்தியில் வாழும் முஸ்லிம்களுக்கு நான் பொறுப்பாளரல்ல” என்ற கருத்தில் வரும் அறிவிப்பை எமது நாட்டில் எவ்வாறு புரிந்துகொள்வது? போன்ற கேள்விகள் சில உதாரணங்கள் மாத்திரமே. சுருக்கமாகக் கூறுவதாக இருந்தால், இஸ்லாமிய மூலாதாரங்களை எமது சூழமைவுடன் உரையாட வைத்தல் எனலாம். அவ்வகையான உரையாடலுக்கு மாணவர்களைப் பயிற்றுவிக்கும் களமாக மத்ரசா கல்வியை ஒழுங்குபடுத்தலே இங்கு வலியுறுத்தப்படும் கருத்தாகும்.

5- விமர்சன ரீதியான சிந்தனை

விமர்சன சிந்தனை என்பது இன்று கல்வியலாளர்களால் அதிகம் பேசப்படும் ஒரு கருத்தாக்கம். இதனை இஸ்லாமிய கற்கைகளில் பிரயோகிப்பது எவ்வாறு என்பதே இங்குள்ள கேள்வி. இஸ்லாத்தில் திட்டவட்டமாக நிறுவப்பட்ட விடயங்களில் விமர்ச ரீதியான சிந்தனையைப் பிரயோகிக்க வேண்டிய தேவை இருக்காது எனலாம். அதன் கருத்து அறிவைப் பிரயோகிக்கக் கூடாது என்பதல்ல. உதாரணமாக, அல்லாஹ் இருக்கிறான் என நம்புதல், மறுமை நாளின் அவசியம் போன்ற இஸ்லாத்தின் மிக அடிப்படை நம்பிக்கைகளை ஒரு மனிதன் அறிவுபூர்வமாக ஏற்றுக்கொள்ளும்போதே அவனது நம்பிக்கை ஆழம் காண்கிறது. இப்பகுதிகளை விட கிளைப்பகுதிகளில், வித்தியாசப்பட்ட கருத்துக்களைக் கொடுக்க முடியுமான பகுதிகளில் விமர்சன ரீதியான சிந்தனையின் தேவை அதிகமாக உணரப்படுகிறது. குறிப்பாக, இலங்கை போன்ற முஸ்லிம்கள் மிக சிதரிய சிறுபான்மையாக வாழும் சூழமைவில், இஸ்லாமோபோபியா அதன் வீச்செல்லையை விரிவாக்கியிருக்கும் தருணத்தில் இஸ்லாத்தின் தூதை எவ்வாறு முன்வைப்பது என்ற கேள்வியிலிருந்து அவ்விமர்சன சிந்தனை துளிர்விடுகிறது. ஒரு சமூகமாக இஸ்லாத்தின் எப்பகுதியை முதன்மைப்படுத்த வேண்டும், முஸ்லிம் சமூகத்துக்குள்ளால் நிலவும் கருத்துவேறுபாடுகளை எவ்வாறு கையாள்வது, சிறுபான்மைக்கான வாழ்வொழுங்கு எவ்வாறு அமையப்பெற வேண்டும், முஸ்லிம் தலைமைத்துவத்தின் தீர்மானங்கள் எவ்வாறான பின்விளைவுகளைத் தோற்றுவிக்கின்றன, இஸ்லாமிய இயக்கங்களது சிந்தனை, நடைமுறைகளை எவ்வாறு விமர்சன ரீதியாகப் புரிந்துகொள்வது போன்றன சில கேள்விகள்.

இதனை இஸ்லாமியப் பரிபாஷையில் கூறுவதாக இருந்தால் ஒரு வகை “இஜ்திஹாத்” எனலாம். விமர்சன சிந்தனையை சிலர் அவசியமற்றதாகவும், குழப்பம் விளைவிப்பதாகவும் கருதுகின்றனர். இதனை அவ்வாறு பார்க்க வேண்டியதில்லை. விமர்சன சிந்தனை இன்னொரு பார்வை. கருத்துக்களும் சிந்தனைகளும் ஒன்றோடொன்று உறவாடும் போதுதான் புதிய பாதைகள் தோற்றம்பெறுகின்றன. மத்ரசா மாணவர்கள் விமர்சன சிந்தனைக்கு பயிற்றுவிக்கப்படுவதில் அவர்களது சிந்திக்கும் ஆற்றல் விருத்தியடைவது போல, முரன்பட்ட சிந்தனைகளை ஆரோக்கியமான உரையாடலுக்கு உள்ளாக்கும் மனோநிலையும் அவர்களினுள்ளால் பாய்ச்சப்படுகிறது.

இங்கு சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் ஐந்து விடயங்களும் இலங்கை மத்ரசா கல்வியமைப்பு சார்ந்து கவனம் குவிக்க வேண்டிய விடயப்பரப்புக்களுள் சில மாத்திரமே. மத்ரசா கல்வியமைப்பு பற்றிய மிக சீரியசான உரையாடலொன்றை துவக்கி வைப்பதற்கான ஆரம்ப எட்டுக்கான கவனக் குவிப்புக் கட்டுரையாகவே இவ்வெழுத்துக்கள் அமைகின்றன‌ என்பதையும் கருத்திற் கொள்வோம்.

The post இலங்கை அரபு மத்ரசா கல்வி- கலந்துரையாடப்பட வேண்டிய சில‌ விடயப்பரப்புகள் first appeared on Rishard Najimudeen.

]]>
https://rishardnajmudeen.com/2025/01/24/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-2/feed/ 3
பெண்கள் மாதவிடாய் காலத்தில் குர்ஆன் ஓதலாமா? https://rishardnajmudeen.com/2025/01/02/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25af%2586%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25a4%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%259f%25e0%25ae%25be%25e0%25ae%25af%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4 https://rishardnajmudeen.com/2025/01/02/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/#respond Thu, 02 Jan 2025 14:44:49 +0000 https://rishardnajimudeen.com/?p=8858 பெண்கள் மாதவிடாய் காலத்தில் அல்-குர்ஆனை ஓதலாமா என்ற கேள்வியை சமீபத்தில் பலர் கேட்டிருந்தனர். இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீட மாணவிகளுக்கும் குர்ஆனை மனனம் செய்த பெண்களுக்கும் ஏனைய பல சந்தர்ப்பங்களில் பொதுவாக பெண்களுக்கும் இது குறித்து தெளிவான விளக்கம் தேவைப்படுகிறது.  ‘மாதவிடாய் பெண்கள்’ குர்ஆனை ஓதுவது குறித்து அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுவதால் குறித்த விடயத்தை எப்படி அணுக வேண்டும் என்ற ஒரு தெளிவை பெறுவதற்காக இந்த ஆக்கத்தை முன்வைக்கின்றோம். பெண்கள் மாதவிடாய் [...]

The post பெண்கள் மாதவிடாய் காலத்தில் குர்ஆன் ஓதலாமா? first appeared on Rishard Najimudeen.

]]>

பெண்கள் மாதவிடாய் காலத்தில் அல்-குர்ஆனை ஓதலாமா என்ற கேள்வியை சமீபத்தில் பலர் கேட்டிருந்தனர். இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீட மாணவிகளுக்கும் குர்ஆனை மனனம் செய்த பெண்களுக்கும் ஏனைய பல சந்தர்ப்பங்களில் பொதுவாக பெண்களுக்கும் இது குறித்து தெளிவான விளக்கம் தேவைப்படுகிறது. 

‘மாதவிடாய் பெண்கள்’ குர்ஆனை ஓதுவது குறித்து அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுவதால் குறித்த விடயத்தை எப்படி அணுக வேண்டும் என்ற ஒரு தெளிவை பெறுவதற்காக இந்த ஆக்கத்தை முன்வைக்கின்றோம்.

பெண்கள் மாதவிடாய் காலத்தில் குர்ஆன் ஓதுவது சம்பந்தமாக மூன்று சிந்தனைகள் உள்ளன.

ஒன்று : மாதவிடாய் காலத்தில் குர்ஆனை ஓதுவது கூடாது.

இரண்டு : மாதவிடாய் பெண்கள் அல்-குர்ஆனை ஓதலாம்

மூன்று : ஒரு ஆயத்தை விட குறைவாக ஓதலாம்



1. மாதவிடாய் காலத்தில் குர்ஆனை ஓதுவது கூடாது

பெண்கள் மாதவிடாய் காலத்தல் குர்ஆனை ஓதுவது கூடாது என்பதே இமாம் ஷாபிஈ மற்றும் இமாம் ஹனபி சிந்தனைப் பிரிவுகளின் தீர்ப்பாக உள்ளது.

ஆனால் குர்ஆனை கற்றுக் கொடுக்கும் ஆசிரியையாக இருந்தால் ஒவ்வொரு வார்த்தை வார்த்தையாக ஓதிக் கொடுப்பதற்கு ஹனபி மத்ஹபில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஹன்பலி மத்ஹபின் பிரபல்யமான கருத்து ஓதக் கூடாது என்பதே. அதன் பொருள் மாதாந்த உபாதைக்குள்ளான காலத்தில் குர்ஆனை ஓதுவது ஆகும் என்ற சிந்தனையும் அந்த மத்ஹபின் அறிஞர்களிடம் காணப்படுகிறது. 

மாதவிடாய் காலத்தில் குர்ஆன் ஓதுவது கூடாது என்ற சிந்தனை முகாமைச் சேர்ந்தவர்கள் அதற்கு ஆதாரமாக பல ஹதீஸ்கள் முன்வைக்கின்றனர்.

அதில் மிகவும் பிரபல்யமானது இப்னு உமர் ரழி அவர்கள் அறிவிக்கும்

இது பலவீனமானதொரு ஹதீஸாகும். இதே கருத்துடைய இன்னும் பல ஹதீஸ்கள் வெவ்வேறு வழிகளில் வந்துள்ளன. அவை அனைத்தும் ஆதாரம் காட்ட முடியாத பலவீனமான ஹதீஸ் என்பதே ஹதீஸ் கலை வல்லுனர்களின் கருத்தாகும்.

இந்த ஹதீஸின் அனைத்து அறிவிப்பாளர் வரிசையும் பலவீனமாதே என இப்னுல் ஹஜர் (ரஹ்) அவர்கள் பத்ஹூல் பாரியில் பதிவு செய்துள்ளார்கள்.(1/409) மேலும் ‘இந்த ஹதீஸ் அறிஞர்களின் ஒட்டுமொத்த கருத்துப்படி பலவீனமான ஹதீஸ்’ என இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (பதாவா 21/460) நவீன காலத்தில் அல்லாமா அல்பானி (ரஹ்) அவர்களும் இந்த ஹதீஸ் ‘முன்கர்’ என்ற தரத்திலுள்ள பலவீனமான ஹதீஸ் என கூறியுள்ளார்.(அல்இர்வா 495)

ஜனாபத் எனும் குளிப்பு கடமையானவர் அல் குர்ஆன் ஓதக் கூடாது என்பது பெரும்பான்மை அறிஞர்களின் கருத்தாகும். எனவே ஜனாபத் உடையவரின் சட்டமே மாதவிடாய் ஏற்படும் பெண்ணுக்குமுரிய சட்டமாகும் என மேற்குறித்த அறிஞர்கள் கூறுகின்றனர். இது குளிப்பது கடமை எனும் விடயத்தில் ஜனாபத் உடையவரும் மாதவிடாய் உடைய பெண்ணும் ஒன்றாவர் என்ற ஒப்பீட்டு அடிப்படையில் கூறப்படும் ஆதாரமாகும்.

இந்த ஒப்பீடு குறித்து சட்ட அறிஞர்களின் விமர்சனங்கள் பின்வருமாறு உள்ளது:

மாதவிடாய் பெண்ணையும் குளிப்புக் கடமையானவரையும் வேறுபாடுகள் உள்ள நிலையில் சமமாக ஒப்பிடுவது தவறாகும். இருவருக்கும் வித்தியாசங்கள் பல உள்ளன. குளிப்பு கடமையானவருக்கு உடனே குளித்து விடலாம். அல்லது தொழுகை நேரம் வந்தவுடன் தொடக்கை நீக்கி விடலாம். ஆனால் மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் குறிப்பிட்ட சில நாட்கள் காத்திருக்க வேண்டும். இந்நிலையில் இருவரையும் ஒப்பிடுவது சட்ட ஒழுங்கிற்கு முரணாகும்.

மேலும் குளிப்பு கடமையான ஒருவர் குர்ஆன் ஓத முடியும் என்ற சிந்தனையை முன்வைக்கும் அறிஞர்களும் உள்ளனர். உமர் ரழி அவர்கள் ஜனாபத் உடையவர் குர்ஆன் ஓதுவது வெறுக்கத்தக்கது (மக்ரூஹ்) என்றும் இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் குளிப்பு கடமையானவர் குர்ஆனை ஓதுவது பரவாயில்லை என்றும் கூறியுள்ளனர். ழாஹிரி சிந்தனை முகாமில் உள்ளவர்கள் குளிப்பு கடமையானவர் குர்ஆனை ஓதுவது ஆகும் என்றே பத்வா வழங்கியுள்ளனர். 

இத்தகைய வேறுபாடுகள் உள்ள நிலையில் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் குளிப்பு கடமையானவரையும் ஒப்பிட்டு ஆதாரம் காட்டுவது சட்ட மூலாதாரங்களின் மரபுக்கு புறம்பானதாகும்.

ஜம்இய்யாவின் பத்வா

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பத்வா குழுவானது பெண்கள் மாதவிடாய் காலத்தில் அல் குர்ஆன் ஓதுவது பற்றிய மார்க்கத் தீர்ப்பை கூறும் போது, அல் குர்ஆன் ஓதும் விடயத்தில் மார்க்க அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. மாலிக் மத்ஹபின் கருத்து மாதவிடாய் காலத்தில் குர்ஆன் ஓத முடியும் என்பதை ஜம்இய்யாவின் பத்வா உதாரணமாக எடுத்துக் கூறுகிறது. தொடர்ந்து ஏனைய மத்ஹப்களின் கருத்துக்களை முன்வைத்ததன் பின்னர் மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் அல் குர்ஆன் ஓதுவது கூடாது என ஜம்இய்யாவின் பத்வா குழு தீர்ப்பு வழங்கியுள்ளது. இருப்பினும் பெண்கள் தாம் குர்ஆனில் மனனம் செய்த பகுதி மறந்து போகும் என்பதைப் பயந்தால் மாதவிடாயுடைய காலத்தில் குர்ஆனை மீட்டிக்கொள்வதற்கு பின்வரும் வழிமுறைகளைக் கையாளலாம் என நான்கு வழிமுறைகளை தந்துள்ளது. குர்ஆனை அதிகமாகச் செவிசாய்த்தல், தான் ஓதும் சப்தம் தன் காதுகளுக்குக் கேட்காத விதத்தில் உதடுகளை மாத்திரம் அசைத்து ஓதுதல், மனதால் ஓதுதல், குர்ஆனுடைய நிய்யத்திலன்றி, துஆ மற்றும் திக்ருடைய நிய்யத்தில் ஓதுதல் என்பதே அந்த வழிமுறையாகும் என அந்த பத்வா கூறுகிறது.

2. பெண்கள் மாதவிடாய் காலத்தில் குர்ஆனை ஓத முடியும்

பெண்கள் மாதவிடாய் காலத்தில் குர்ஆன் ஓதுவதை விட்டும் ஒருபோதும் தடுக்கப்பட மாட்டாள் என்பதே அநேகமான அறிஞர்களின் சிந்தனையாகும்.

இந்த சிந்தனையை ஸஹாபாக்கள் காலம் தொட்டு நவீன காலம் வரையுள்ள அறிஞர்கள் ஆதரித்தே வந்துள்ளனர்.

பெண்கள் மாதவிடாய் காலத்தில் எந்த நிபந்தனைகளுமின்றி குர்ஆனை ஓதலாம் என இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் ஈராக்கில் வாழும் காலத்தில் பத்வா வழங்கியுள்ளார்கள்.(மஜ்மூ2/387)

இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்களின் ஒரு அறிவிப்பு குர்ஆன் ஓதலாம் என்ற சிந்தனையை ஆதரித்தே வந்துள்ளது. (இஃலாமுல் முவக்கிஈன் 3/25) குர்ஆன் ஓதலாம் என்ற இந்த கருத்தை இமாம் இப்னு ஹஸம் தனது அல்முஹல்லாவில் பதிவு செய்துள்ளார்கள். (1/77)

நபித் தோழரான முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்களிடம் அப்துர் ரஹ்மான் பின் கனம் (ரழி) அவர்கள் மாதவிடாய் காலத்தில் பெண்கள் குர்ஆனை ஓதலாமா? என்று கேட்டபோது, ஆம் ஓதலாம். யார் அதனை தடுக்கின்றாரோ அவர் இந்த விடயம் குறித்து அறிவில்லாமல் அதனை செய்கிறார் என்றார்கள். (புகாரியின் விரிவுரை: இப்னு பத்தால் (1/423)

இமாம் ஸஈத் இப்னு முஸய்யப் (ரஹ்) அவர்கள் தாபியீன்கள் காலத்தில் வாழ்ந்த பிரபல்யமான ஓர் அறிஞராவார். அவரது சிந்தனையும் மாதாந்த உபாதைக்குள்ளான பெண்கள் குர்ஆனை ஓதுவது ஆகுமானது என்பதே.(முஃனி 1/106)

இமாம் இப்னு தைமியா அவர்கள் மாதாந்த உபாதைக்குள்ளான பெண்கள் குர்ஆனை தாரளமாக ஓதலாம் என்ற சிந்தனையையே தனது விருப்பத் தெரிவாக எடுத்துள்ளர்கள். மாதவிடாயின் போது ஒரு பெண் குர்ஆனில் மனனம் செய்த பகுதிகள் மறக்கும் என பயந்தால் குர்ஆனை ஓதுவது வாஜிபாகும் என்ற சிந்தனையையும் அவர்கள் முன்வைத்துள்ளார்கள்.

கலாநிதி ஜாஸிர் அவ்தா அவர்கள் ‘பெண்களும் பள்ளிவாசல்களும்’ என்ற தனது ஆய்வு நூலில் மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் குர்ஆனை ஓதுவது சம்பந்தமாக ஆய்வு செய்துள்ளார்கள். அவருடைய வாசிப்பில் இந்த தலைப்பு குறித்து மிக அழகான முறையில் தெளிவான விளக்கம் தந்தவர் இமாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்களே என அவ்தா குறிப்பிடுகிறார். 

இறுதியாக ஜாஸிர் அவ்தா அவர்கள் தனது ஆய்வின் முடிவில் மாதவிடாய் எற்பட்டுள்ள பெண்கள் குர்ஆன் ஓதுவதை தடுப்பதற்கு மிகச் சரியான தெளிவான எந்த ஆதாரமும் இஸ்லாமிய சட்டப்பரப்பில் இல்லை என்பதை உறுதி செய்துள்ளார். (பக்கம் 62)

இமாம் ஜவ்ஸி, இமாம் ஷவ்கானி ஆகியோரும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் அல்குர்ஆனை ஓதுவது ஆகும் என்பதையே ஆதரித்து பேசியுள்ளார்கள். இவ்வாறே அஷ்ஷெய்க் முஹம்மத் உஸைமின், ழாஹிரி மத்ஹபினர், மற்றும் சவுதியை தளமாக கொண்டு இயங்கும் பத்வாவுக்கான நிலையான கமிட்டியும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் குர்ஆனை ஓதுவது ஆகும் என்றே பத்வாக வழங்கியுள்ளனர்.

அவ்வாறே அல்-குர்ஆனை பார்க்கலாம், மனனமிட்ட பகுதியை தாரளமாக ஓதலாம் என இமாம் நவவி அர்கள் தனது முஸ்லிம் ஹதீஸ் கிரந்தத்தின் விரிவுரையில் தெளிவாகவே கூறியுள்ளார். (4/290)

இமாம் மாலிக் ரஹ் அவர்கள் ‘ஒரு பெண் மாதவிடாயின் போது அல் குர்ஆன் ஓத முடியும் என்றும், அதே நேரத்தில், அப்பெண்ணுக்கு மாதவிடாய் நின்று விட்டால் குளித்து சுத்தமாகும் வரை அல் குர்ஆன் ஓதுவது கூடாது’ என்றும் கூறியுள்ளார்கள்.

ஆயிஷா ரழி அவர்கள் நபிகளாருடன் ஹஜ் கடமைகளில் இருக்கும் போது மாதாந்த உபாதைக்குள்ளானார்கள். அப்போது நபியவர்கள் தவாப் செய்வதை தவிற ஏனைய அனைத்து கிரியைகளையும் செய்யுமாறு ஏவினார்கள்.

(புகாரி 1/68)

பல நாட்கள் தங்கியிருந்து ஹஜ் கடமையை செய்யும் பெண்கள் விடயத்தில் குர்ஆன் ஓதுவது பற்றி நபிகளார் தெளிவான சட்டத்தை கண்டிப்பாக குறிப்பிட்டிருக்க வேண்டும். இருந்தும் தவாப் மாத்திரம் கூடாது என்று உறுதியிட்டு கூறியிருப்பது அல்குர்ஆனை ஓத முடியும் என்பதையே சுட்டுகிறது.

மேற்குறிப்பிட்ட கருத்துக்களை நோக்கும் போது ஸஹாபாக்கள், தாபியீன்கள், இமாம்கள், நவீன கால அறிஞர்கள் என பலரும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் குர்ஆன் ஓதுவது கூடும் என்ற சிந்தனையை ஆதரித்தே கருத்து வெளியிட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. இதற்கு பிரதானமான காரணம் மாதவிடாய் காலத்தில் பெண்கள் குர்ஆனை ஓதுவதை விட்டும் தடுக்கக் கூடிய மிகச் சரியான தெளிவான நேரடியான எந்த சட்ட ஆதாரங்களும் ஷரீஆ சட்டப்பரப்பில் இல்லாமையாகும்.

அவ்வாறே ஸஹாபாக்களின் காலத்தில் மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் குர்ஆன் ஓதக் கூடாது என்பதற்கான எந்தப் பதிவுகளும் கிடையாது.

எனவேதான் அதிகமான அறிஞர்கள் பெண்கள் மாதவிடாய் காலத்தில் தொழுவது ஹராம் என்றும் குர்ஆன் ஓதுவது ஆகும் என்றும் தேவைப்படும் போது குர்ஆனை தொடுவதும் ஆகும் என்றும் அபிப்பிராயங்களை தெரிவித்துள்ளனர்.

மூன்றாவது சிந்தனை ஒரு ஆயத்திற்கு குறைந்த பகுதியை ஓதலாம் என்ற அபிப்பிராயமாகும். இது இமாம் அபூ ஹனீபாவின் கருத்தாகும். (பதாஇஉஸ் ஸனாஇஉ 1/38)

மேற்கூறிய சிந்தனைகளை அவதானிக்கும் போது மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் குர்ஆனை ஓதுவது குறித்து அறிஞர்கள் மத்தியில் வித்தியாசமான கருத்துக்கள் நிலவுகிறது என்பது தெளிவாகிறது. எனவே ஒருவர் தான் விரும்பிய ஒரு கருத்தை தெரிவு செய்யலாம். தான் தெரிவு செய்த சிந்தனைக்கு மாற்றமான கருத்தை கொண்டவருடன் விதண்டாவாதங்கள் செய்யத் தேவையில்லை. மாற்றமாக அடுத்த தரப்பின் கருத்துக்களை மதிக்கும் வகையில் நடந்து கொள்வதே பண்பாடாகும். 

இஸ்லாமிய ஷரீஆவின் கிளை அம்சங்களில் அனைவரையும் ஒரே கருத்தில் கொண்டு வரவேண்டும் என நினைப்பது இறை ஏற்பாட்டுக்கே முரணாகும். சட்டப்பகுதியின் கிளைப் பிரிவு என்பது ஒரு நந்தவனம். அங்கு வித்தியாசமான மலர்கள் இருப்பதுவே அழகு. அந்த அழகை கெடுப்பதற்கு யாரும் முயற்சிக்கக் கூடாது.

பாடசாலைகளிலும் அறபுக் கலாசாலைகளிலும் கல்வி பயிலும் மாணவிகளுக்கும், இஸ்லாமிய கற்கைகள் துறையில் உள்ள மாணவிகளுக்கும் பெண் ஹாபிழ்களுக்கும் அல்லது வேறு சூழ்நிலைகளில் உள்ள பெண்மணிகளுக்கும் மேலே கூறப்பட்ட இரண்டாவது சிந்தனையை தெரிவு செய்வதே மிகவும் பொருத்தமானது. இஸ்லாமிய வழிகாட்டல்கள் ஒருபோதும் மக்களை கஷ்டப்படுத்துவதில்லை. மார்க்கம் இலகுவானது. இலகுபடுத்துவதையே அது தூண்டுகிறது. இலகுவானதை தெரிவு செய்வதற்கே வழிகாட்டியுள்ளது. 

அவ்வாறே புனித ரமழான் காலங்களில் மாதாந்த உபாதைக்குள்ளாகும் பெண்கள் குறிப்பிட் சில நாட்கள் குர்ஆன் ஓதாமல் இருப்பது நிச்சயமாக சங்கடமான ஒரு விடயமாகும். இத்தகைய சந்தர்ப்பங்களில் அறிஞர்களின் கருத்து வேறுபாடுகள் அருளாவே காணப்படுகிறது.

இங்கு வாசகர்கள் சில அடிப்படை உண்மைகளை புரிந்து கொள்ள வேண்டும். கருத்து வேறுபாடுள்ள விடயங்கள் நெகிழ்ந்து கொடுக்க முடியுமான விவகாரங்களாகும். அதில் விட்டுக் கொடுத்து சகிப்புத்தன்மையுடன் நடப்பதே பண்பாடாகும். மேலும் கருத்து வேறுபாடுள்ள விடயங்கள் தடுக்கப்பட வேண்டிய தீமையாகாது. சட்டப்பரப்பில் வித்தியாசமான கருத்துக் கொள்வதற்கு இடம்பாடு இருந்தால் மாற்றுக் கருத்துக் கொண்டோரை ஒருபோதும் மறுதளிக்க முடியாது.

குறித்த ஒரு மத்ஹபின் வட்டத்தில் மாத்திரம் வெறித்தனமாக பிடிவாதம் பிடிப்பது நிச்சயமாக சமூகத்தில் பேரழிவையே கொண்டுவரும். மார்க்கத்தின் கிளை அம்சங்களில் கருத்து முரண்பாடுகள் இருக்கவே செய்யும். அது இஸ்லாமிய சட்டப்பரப்பின் கிளை விவகாரங்களில் காணப்படும் இயல்பாகும்.

அனைவரும் ஒரு கருத்தில் இருக்க வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது நிச்சயமாக குழப்பங்கள் உருவாகுவதற்கே வித்திடும். அவ்வாறு செயற்படுவது இறை நியதிகளுக்கு முரண்பட்ட போக்காகும்.

இஸ்லாமிய சட்டப்பரப்பில் இத்தகைய கருத்து வேறுபாடுள்ள விடயங்களில் யாருடைய ஆதாரம் மனதிற்கு திருப்தி தரும் வகையில் உள்ளதோ அந்த வகையில் செயற்படுவதற்கு சுதந்திரம் உண்டு. காரணம் அது தனிமனித வழிபாடாகும். இது ரமாழான் நோன்பு அல்லது பெருநாள் தினத்தை நிர்ணயித்தல் போன்ற சமூகக் கடமைகள் அல்ல.

மேற்படி கருத்து வேறுபாடுள்ள சமூக கடமைகளை நிறைவேற்றும்போது தனிமனிதர்களோ பள்ளிவாயல்களோ ஊர்களோ அமைப்புக்களோ தனித்து தீர்மானம் எடுத்துத் தொழிற்படுவது சட்ட மரபுக்கு முரணாகும்.

ஆனால் பெண்கள் மாதவிடாய் காலத்தில் குர்ஆன் ஓதுவது சமூகக் கடமையன்று. அது தனிமனித வழிபாடாகும். எனவே இத்தகைய விவகாரங்களில் ஒருவர் தான் விரும்பிய சிந்தனையை சுதந்திரமாக தெரிவு செய்து பின்பற்றலாம். பொது மக்கள் இத்தகைய கருத்து வேறுபாடுகளில் உள்ள நன்மைகளை பெற முடியாமல் கதவடைப்பது தான் கூடாது. தகுதிவாய்ந்த ஒவ்வொரு அறிஞரின் கருத்திலும் சிந்தனையிலும் அருளும் நலனும் இருக்கவே செய்யும்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

The post பெண்கள் மாதவிடாய் காலத்தில் குர்ஆன் ஓதலாமா? first appeared on Rishard Najimudeen.

]]>
https://rishardnajmudeen.com/2025/01/02/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/feed/ 0
எகிப்து மற்றும் துருக்கியில் இஸ்லாமிய துறையைக் கற்றல் https://rishardnajmudeen.com/2024/12/01/%e0%ae%8e%e0%ae%95%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%258e%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25aa%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25bf https://rishardnajmudeen.com/2024/12/01/%e0%ae%8e%e0%ae%95%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf/#respond Sun, 01 Dec 2024 14:05:03 +0000 https://rishardnajimudeen.com/?p=8831 https://rishardnajmudeen.com/2024/12/01/%e0%ae%8e%e0%ae%95%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf/feed/ 0 இலங்கை அரபு மத்ரசா கல்வியமைப்பு பல்கலாச்சார புரிந்துணர்வை ஏற்படுத்துகிறதா? https://rishardnajmudeen.com/2024/10/23/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25b2%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2588-%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25ae%25aa%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25b0%25e0%25ae%259a%25e0%25ae%25be-%25e0%25ae%2595%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25ae%25bf https://rishardnajmudeen.com/2024/10/23/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf/#respond Wed, 23 Oct 2024 15:03:36 +0000 https://rishardnajimudeen.com/?p=8729 https://rishardnajmudeen.com/2024/10/23/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf/feed/ 0 “Islamic Ethics” கருத்தாக்கம் மீதானதொரு உரையாடல் https://rishardnajmudeen.com/2024/10/23/islamic-ethics-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=islamic-ethics-%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25af%2580%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%25a9%25e0%25ae%25a4%25e0%25af%258a%25e0%25ae%25b0 https://rishardnajmudeen.com/2024/10/23/islamic-ethics-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b0/#respond Wed, 23 Oct 2024 14:57:24 +0000 https://rishardnajimudeen.com/?p=8721 https://rishardnajmudeen.com/2024/10/23/islamic-ethics-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%80%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b0/feed/ 0 கலை, இலக்கியம் பற்றி இஸ்லாம் என்ன கூறுகிறது? https://rishardnajmudeen.com/2024/10/23/%e0%ae%95%e0%ae%b2%e0%af%88-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2595%25e0%25ae%25b2%25e0%25af%2588-%25e0%25ae%2587%25e0%25ae%25b2%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25bf%25e0%25ae%25af%25e0%25ae%25ae%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25b1%25e0%25af%258d%25e0%25ae%25b1%25e0%25ae%25bf-%25e0%25ae%2587%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25b2 https://rishardnajmudeen.com/2024/10/23/%e0%ae%95%e0%ae%b2%e0%af%88-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2/#respond Wed, 23 Oct 2024 14:51:54 +0000 https://rishardnajimudeen.com/?p=8717 https://rishardnajmudeen.com/2024/10/23/%e0%ae%95%e0%ae%b2%e0%af%88-%e0%ae%87%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf-%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2/feed/ 0 உஸுல் அல்-பிக்ஹிலிருந்து சீர்திருத்தத்தை ஆரம்பித்தல் https://rishardnajmudeen.com/2024/10/22/%e0%ae%89%e0%ae%b8%e0%af%81%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2589%25e0%25ae%25b8%25e0%25af%2581%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2585%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%25aa%25e0%25ae%25bf%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%25b9%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25ae%25bf%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25a8%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2581 https://rishardnajmudeen.com/2024/10/22/%e0%ae%89%e0%ae%b8%e0%af%81%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/#respond Tue, 22 Oct 2024 03:07:03 +0000 https://rishardnajimudeen.com/?p=8579 தாரிக் ரமழான் மமற்குலகில் முஸ்லிம்களிடத்தில் மட்டுமல்லாது சகோதர சமூகத்தவர்கள் மத்தியிலும் செல்வாக்கு பெற்றவர். எவ்வித இஸ்லாமிய இயக்கங்களிலும் அங்கத்துவம் பெறாவிட்டாலும் கூட அவருக்கென்று தனியான சிந்தனை வட்டமொன்றை உருவாக்கியிருக்கிறார். அவர் பங்கு பற்றிய கலந்துரையாடல்கள் அவரது புத்தகங்கள் மிகப் பெரும் வரவேற்பை பெற்றன. அவரது புத்தகங்களுள் மிக முக்கிய புத்தகமான ‘சரடிகல் ரிமொம்’ புத்தகம் முஸ்லிம் சமூகத்தினுள் நடைபெற வேண்டிய  சீர்திருத்தம்  பற்றிப் பேசுகிறது. சீர்திருத்தம் ‘உஸூல் அல்-பிக்ஹ்’ மீதான மீள்வாசிப்பிலிருந்து ஆரம்பிக்க  வேண்டும் என வாதாடுகிறார். [...]

The post உஸுல் அல்-பிக்ஹிலிருந்து சீர்திருத்தத்தை ஆரம்பித்தல் first appeared on Rishard Najimudeen.

]]>

தாரிக் ரமழான் மமற்குலகில் முஸ்லிம்களிடத்தில் மட்டுமல்லாது சகோதர சமூகத்தவர்கள் மத்தியிலும் செல்வாக்கு பெற்றவர். எவ்வித இஸ்லாமிய இயக்கங்களிலும் அங்கத்துவம் பெறாவிட்டாலும் கூட அவருக்கென்று தனியான சிந்தனை வட்டமொன்றை உருவாக்கியிருக்கிறார். அவர் பங்கு பற்றிய கலந்துரையாடல்கள் அவரது புத்தகங்கள் மிகப் பெரும் வரவேற்பை பெற்றன. அவரது புத்தகங்களுள் மிக முக்கிய புத்தகமான ‘சரடிகல் ரிமொம்’ புத்தகம் முஸ்லிம் சமூகத்தினுள் நடைபெற வேண்டிய  சீர்திருத்தம்  பற்றிப் பேசுகிறது.

சீர்திருத்தம் ‘உஸூல் அல்-பிக்ஹ்’ மீதான மீள்வாசிப்பிலிருந்து ஆரம்பிக்க  வேண்டும் என வாதாடுகிறார். இப்புத்தகம் சீர்திருத்தம், உஸூல் அல்-பிக்ஹ், மகாசிதுஷ் ஷரீஆ, சூழல் ஒரு சட்ட மூலாதாரம், மார்க்க அதிகாரம் (Religious Authority) மொன்ற மிக முக்கிய தனலப்புக்கனை உள்ளடக்கியதாக உள்ளது. 
இப்புத்தகத்தின் சுருக்கத்தை இங்கு தருகிறோம்.

  • ஆசிரியர் – ரிஷாட் நஜிமுத்தீன்
  • பக்கங்கள் – 51

The post உஸுல் அல்-பிக்ஹிலிருந்து சீர்திருத்தத்தை ஆரம்பித்தல் first appeared on Rishard Najimudeen.

]]>
https://rishardnajmudeen.com/2024/10/22/%e0%ae%89%e0%ae%b8%e0%af%81%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/feed/ 0
மகாஸித் ஆய்வு முறைமை https://rishardnajmudeen.com/2024/10/22/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%ae%e0%af%88/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25ae%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b8%25e0%25ae%25bf%25e0%25ae%25a4%25e0%25af%258d-%25e0%25ae%2586%25e0%25ae%25af%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25b1%25e0%25af%2588%25e0%25ae%25ae%25e0%25af%2588 https://rishardnajmudeen.com/2024/10/22/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%ae%e0%af%88/#comments Tue, 22 Oct 2024 02:36:38 +0000 https://rishardnajimudeen.com/?p=8559 ஆசிரியர் – ரிஷாட் நஜிமுத்தீன் பக்கங்கள் – 32 ஜாஸிர் அவ்தா மகாசித் சிந்தனையை வலியுறுததிப் பேசும் நவீனகால முஸ்லிம் அறிஞர்களுள் முக்கியமானவர். மகாசிதுஷ் ஷரீஆ பற்றிய அவரது புத்தகங்களுக்கு தனியான இடம் உள்ளது. எனினும், ஏற்கனவே எழுதிய புத்தகங்களை விட இன்று அறிமுகப்படுத்த முனையும் புத்தகம் இன்னும் விரிவான தளம் ஒன்றை நோக்கி நகர்ந்திருக்கிறது. சுருக்கமாகக் கூறுவதாக இருந்தால், ஏற்கனவே எழுதப்பட்ட புத்தகங்கள் மிகப் nஎபனருதும்பாடலுயமர் p இஸ்லாத்தின் கிளையம்சங்களை மகாசிதோடு தொடர்புபடுத்துவதாக உள்ள மாற்றமாக, [...]

The post மகாஸித் ஆய்வு முறைமை first appeared on Rishard Najimudeen.

]]>
  • ஆசிரியர் – ரிஷாட் நஜிமுத்தீன்
  • பக்கங்கள் – 32

ஜாஸிர் அவ்தா மகாசித் சிந்தனையை வலியுறுததிப் பேசும் நவீனகால முஸ்லிம் அறிஞர்களுள் முக்கியமானவர். மகாசிதுஷ் ஷரீஆ பற்றிய அவரது புத்தகங்களுக்கு தனியான இடம் உள்ளது. எனினும், ஏற்கனவே எழுதிய புத்தகங்களை விட இன்று அறிமுகப்படுத்த முனையும் புத்தகம் இன்னும் விரிவான தளம் ஒன்றை நோக்கி நகர்ந்திருக்கிறது. சுருக்கமாகக் கூறுவதாக இருந்தால், ஏற்கனவே எழுதப்பட்ட புத்தகங்கள் மிகப் nஎபனருதும்பாடலுயமர் p இஸ்லாத்தின் கிளையம்சங்களை மகாசிதோடு தொடர்புபடுத்துவதாக உள்ள மாற்றமாக, இப்புத்தகம் மகாசிதை “முஸ்லிம் சமூகத்தின் முழுமையானதொரு உள்ளக சீர்திருத்தம்” ஒன்றுக்கான அடித்தளமாக அறிமுகப்படுத்துகிறது. அதே நேரம், குறிப்பிட்ட சீர்திருத்தம் ஒட்டுமொத்த மனித சமூகத்துக்குமான சீர்திருத்தமாகவும் பங்களிப்பாகவும் அமையும் என்பதும் அவரது நம்பிக்கை.

பேராசிரியர் ஜாசிர் அவ்தாவுடைய “Re-envisioning Islamic Scholarship- Maqasid methodology as a new approach” எனும் للإجتهاد الإسلامي புத்தகம் (அரபுமொழியில் இதன் தலைப்பு )என்றமைகிறது المنهجية المقاصدية نحو إعادة صياغة معاصرة முன்னுரையுடன் ஆரம்பித்து, அறிமுகக் குறிப்பு, நவீன இஜ்திஹாத் முறைமைகளது சிக்கல்கள், மகாசித் ஆய்வுமுறைமைக்கான அடிப்படைகள், இஜ்திஹாதுக்குரிய ஐந்து எட்டுக்கள், கோட்பாட்டுரு வாக்கத்துக்கான ஏழு அம்சங்கள் அவற்றைக் காணும் முறைமைகள், இஸ்லாமிய கற்கைகளுக்கான பரிந்துரைக்கப்படும் ஒழுங்கு ஆகிய ஆறு பிரதான தலைப்புக்களை உள்ளடக்கியிருக்கிறது.

புத்தகத்தின் கருத்துக்களை இக்கட்டுரை சுருக்கித் தருகிறது. நவீன இஸ்லாமிய சிந்தனையில், மகாசித் சிந்தனையில், சமூக சீர்திருத்த முறைமையில் புதிய ஒளியை பாய்ச்சும் இப்புத்தகம் மிக விரிந்த தளத்தில் வாசிக்கப்பட வேண்டும், கலந்துரையாடப்பட வேண்டும் என்பதே எமது அவா.

The post மகாஸித் ஆய்வு முறைமை first appeared on Rishard Najimudeen.

]]>
https://rishardnajmudeen.com/2024/10/22/%e0%ae%ae%e0%ae%95%e0%ae%be%e0%ae%b8%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%b1%e0%af%88%e0%ae%ae%e0%af%88/feed/ 1