Warning: Constant WP_HOME already defined in /home/jobsffqw/rishardnajimudeen.com/wp-config.php on line 96

Warning: Constant WP_SITEURL already defined in /home/jobsffqw/rishardnajimudeen.com/wp-config.php on line 97

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/jobsffqw/rishardnajimudeen.com/wp-config.php:96) in /home/jobsffqw/rishardnajimudeen.com/wp-content/plugins/all-in-one-seo-pack/app/Common/Meta/Robots.php on line 89

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/jobsffqw/rishardnajimudeen.com/wp-config.php:96) in /home/jobsffqw/rishardnajimudeen.com/wp-includes/feed-rss2.php on line 8
Articles - Rishard Najimudeen https://rishardnajmudeen.com Fri, 28 Feb 2025 09:48:24 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.9.4 Ramadan & Reforming Religious Thought Among Sri Lankan Muslims https://rishardnajmudeen.com/2025/02/28/ramadan-amp-reforming-religious-thought-among-sri-lankan-muslims/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=ramadan-amp-reforming-religious-thought-among-sri-lankan-muslims https://rishardnajmudeen.com/2025/02/28/ramadan-amp-reforming-religious-thought-among-sri-lankan-muslims/#respond Fri, 28 Feb 2025 09:42:54 +0000 https://rishardnajimudeen.com/?p=9086 The Month of Ramadan and the Appropriate Time for Reconstructing Religious Thought Among Sri Lankan Muslims (Originally published in the Colombo Telegraph on April 13, 2021) The Easter Sunday terror attack created an unprecedented atmosphere in which Islam and Muslims became scapegoats for the tragedy. Numerous accusations and suspicions have been directed toward them, despite [...]

The post Ramadan & Reforming Religious Thought Among Sri Lankan Muslims first appeared on Rishard Najimudeen.

]]>

The Month of Ramadan and the Appropriate Time for Reconstructing Religious Thought Among Sri Lankan Muslims

(Originally published in the Colombo Telegraph on April 13, 2021)

The Easter Sunday terror attack created an unprecedented atmosphere in which Islam and Muslims became scapegoats for the tragedy. Numerous accusations and suspicions have been directed toward them, despite the fact that both Islam and Sri Lankan Muslims have historically been far removed from such allegations. The history of Sri Lankan Muslims serves as compelling evidence that coexistence with other religious communities has been a defining principle for centuries. Even in contemporary Sri Lanka, Muslims predominantly adhere to the belief in peaceful coexistence. However, despite this rich history of harmony and contribution, the brutal terror attack has inflicted significant damage on the community as a whole.

In response to this crisis, Sri Lankan Muslims must prioritize two critical actions. First, they must courageously address and respond to the accusations leveled against them. Second, they must return to their religious sources to develop interpretations that align with the contemporary context. Through this approach, they can formulate a conceptual framework that demonstrates how a “Sri Lankan Muslim” can simultaneously uphold the constitution of the nation and remain faithful to their religious principles without contradiction.

The Role of Ramadan in the Reform Process

This process of reform should begin with a profound internal review of the societal structure of the Muslim community, with a particular focus on the religious ideologies and approaches they espouse. The month of Ramadan, during which Muslims observe fasting, presents an opportune moment to initiate this discussion on internal reform.

Ramadan is widely regarded by Muslims as the “Month of Reform” for numerous reasons. Notably, the Quran, the primary religious source, was first revealed during this sacred month, marking a pivotal moment in the reformative mission of Prophet Muhammad. Moreover, Ramadan is a time when Muslims significantly alter their daily routines by engaging in fasting and special prayers that extend late into the night. Fasting, according to Islamic belief, entails more than mere abstinence from food and drink; it also involves refraining from sinful behavior in both speech and action. Additionally, it encourages the practice of virtue and good deeds.

In the following discussion, I will highlight two key areas related to Islamic references, the Quran and Prophetic traditions, that require critical reflection and dialogue among Sri Lankan Muslims in general, and religious scholars and institutions in particular, as part of the internal reform process.

A Comprehensive Understanding of Islam and the Quran

Islam has often been portrayed—whether intentionally or unintentionally—as a rigid legal system characterized by severe punishments, such as the killing of innocent people, the oppression of women, and the amputation of thieves’ hands. As a student of Islamic studies, I strongly reject this misrepresentation. A holistic and unbiased reading of Islam’s primary sources, namely the Quran and the traditions of the Prophet, yields a vastly different perspective. A thorough engagement with the Quran—comprising 114 chapters—and an informed interpretation of prophetic traditions, while considering the historical and social context of revelation, provides a nuanced understanding of Islam.

Throughout Islamic history, scholars have exerted great effort in interpreting these sources, leading to the gradual emergence of numerous Islamic disciplines. These scholarly contributions represent interpretations rather than absolute decrees. Among the disciplines directly connected to the primary sources, two are fundamental: the “Science of the Quran” and the “Science of Hadith.” These fields have been developed to establish systematic methodologies for understanding both the Quran and the traditions of the Prophet.

Beyond these two fields, four major disciplines have evolved as interpretative frameworks for religious texts: theology, jurisprudence, Sufism, and ethics. Theology primarily addresses Islamic beliefs, including monotheism, prophethood, religious scriptures, the afterlife, and the existence of angels. Additionally, it encompasses philosophy and logic. Sufism focuses on spiritual purification and self-discipline, with the ultimate goal of fostering a deeper connection with God. This discipline emphasizes both inner purification and ethical conduct in interactions with fellow human beings and nature. Jurisprudence (Fiqh) is often misunderstood and misrepresented. Islamic jurisprudence is categorized into two domains: acts of worship (e.g., daily prayers, almsgiving, fasting, and pilgrimage) and social affairs (e.g., financial transactions, family law, and governance). Scholars have established a vast body of legal maxims and principles to guide the application of Islamic law, recognizing that worship-related rulings are fixed, whereas rulings on social matters allow for human interpretation and adaptation to changing circumstances. Ethics examines individual behavior in relation to God, oneself, family, neighbors, and society. Contemporary Muslim scholars have given significant attention to this field, establishing dedicated academic departments in universities to explore ethical philosophy in conceptual and applied contexts. Topics such as euthanasia, suicide, abortion, medical ethics, animal rights, and sexuality are actively studied within this discipline.

One of the most important distinctions in Islamic jurisprudence is the classification of religious texts into clear-cut (definitive) and ambiguous (open to interpretation) verses. Scholars do not have the authority to reinterpret definitive verses, whereas ambiguous verses allow for differing scholarly interpretations. Many of the punishments mentioned in Islamic texts fall into the latter category, leading to diverse scholarly opinions. For example, the Quran prescribes the amputation of a thief’s hand, but scholars have debated the precise criteria for defining theft, the minimum threshold for this punishment, and its applicability in different contexts. Moreover, Islam firmly establishes that the enforcement of legal rulings is the responsibility of the state, not individuals. The overarching purpose of Islamic laws is to cultivate a disciplined society and promote peace and harmony, with punishments serving as a means to achieve these objectives rather than as ends in themselves.

An Objective-Based Approach to Islam

An objective-based approach to Islamic interpretation has been an integral part of scholarly thought since the early Islamic period. This method contrasts with literalist interpretations by prioritizing the ultimate objectives (maqasid) of religious texts. Scholars engage in thorough analysis to discern the underlying purposes of Quranic verses—some of which are explicitly stated, while others require reasoned inference. Traditional scholars unanimously agree that Islam’s higher objectives encompass the preservation of five fundamental values: Religious freedom, Life, Intellect, Property, Lineage. In contemporary times, scholars have expanded the scope of these objectives and proposed additional ones, such as social justice, peace, mercy, human rights, environmental protection, and public health. This approach seeks to bridge Quranic principles with universal ethical norms and evolving societal needs.

Conclusion

As discussed, a comprehensive and objective-based approach to Islamic interpretation is crucial for addressing contemporary challenges. Sri Lankan Muslims have a responsibility to engage in self-reflection and reassess the interpretative methodologies they employ in understanding religious texts. Furthermore, they must strive to be a contributing and progressive community in the modern era. In addition to these two approaches, greater emphasis should be placed on concepts such as pluralism, multiculturalism, and inclusivity in the reform process. I intend to explore these themes in detail in a subsequent article.

The post Ramadan & Reforming Religious Thought Among Sri Lankan Muslims first appeared on Rishard Najimudeen.

]]>
https://rishardnajmudeen.com/2025/02/28/ramadan-amp-reforming-religious-thought-among-sri-lankan-muslims/feed/ 0
பெண்களை நடாத்தும் முறை  _ நாகரிகத்தினதும்  பண்பாட்டினதும் அளவு கோலாகும் https://rishardnajmudeen.com/2025/02/12/the_way_women_are_treated/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=the_way_women_are_treated https://rishardnajmudeen.com/2025/02/12/the_way_women_are_treated/#respond Wed, 12 Feb 2025 14:11:16 +0000 https://rishardnajimudeen.com/?p=9076 ஷெய்க் அஹ்மத் ரைசூனி மொழிபெயர்ப்பு -ஷெய்க் ஷாகிப் அப்துல் ஹலீம் இமாம்களான புகாரியும் , முஸ்லிமும்  நீண்டதொரு ஹதீஸில் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதை அறிவித்துள்ளனர்:- குறைஷிக் கூட்டத்தவர்களான நாங்கள் பெண்கள் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற ஓர் சமூகமாக இருந்தோம். நாம் மதீனாவுக்கு வந்தபோது பெண்கள் மேலாதிக்கம் செலுத்துகின்ற ஒர் சமூகத்தை கண்டோம் .எமது பெண்கள் மதீனா பெண்களிடமிருந்து கற்றுக்கொள்ளலானார்கள். ஒரு நாள் நான் என் மனைவி மீது கோபம் கொண்டேன். உடனே அவள் என்னை [...]

The post பெண்களை நடாத்தும் முறை  _ நாகரிகத்தினதும்  பண்பாட்டினதும் அளவு கோலாகும் first appeared on Rishard Najimudeen.

]]>
ஷெய்க் அஹ்மத் ரைசூனி

மொழிபெயர்ப்பு -ஷெய்க் ஷாகிப் அப்துல் ஹலீம்

இமாம்களான புகாரியும் , முஸ்லிமும்  நீண்டதொரு ஹதீஸில் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதை அறிவித்துள்ளனர்:- குறைஷிக் கூட்டத்தவர்களான நாங்கள் பெண்கள் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற ஓர் சமூகமாக இருந்தோம். நாம் மதீனாவுக்கு வந்தபோது பெண்கள் மேலாதிக்கம் செலுத்துகின்ற ஒர் சமூகத்தை கண்டோம் .எமது பெண்கள் மதீனா பெண்களிடமிருந்து கற்றுக்கொள்ளலானார்கள். ஒரு நாள் நான் என் மனைவி மீது கோபம் கொண்டேன். உடனே அவள் என்னை எதிர்த்துப் பேசினாள். நான் என்னை எதிர்த்துப் பேசுவதை தடுத்தேன். “நான் உங்களை எதிர்த்துப் பேசுவதை ஏன் தடுக்கின்றீர்கள்? என்று கேட்டாள். அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவிமார்கள் அவரை எதிர்த்துப் பேசுகின்றனர். அவர்களில் ஒருவர் நாள் முழுதும் அவரை  புறக்கணிக்கின்றார்” என்று கூறினாள். எனவே நான் உடனே சென்று (அவரது  மகள்) ஹப்ஸாவை  சந்தித்தேன். அல்லாஹ்வின் தூதரை எதிர்த்துப் பேசுகின்றீர்களா? என்று கேட்டேன். ஆம் என்று கூறினார் . உங்களில் ஒருவர் அவரை நாள் முழுதும் புறக்கணிக்கின்றீர்களா? என்று கேட்டேன். “ஆம்”என்று கூறினார். அப்படியாயின்   உங்களில் இதை செய்தவர்  நஷ்டம் அடைந்து விட்டார்! நாசம் அடைந்து விட்டார்! அல்லாஹ்வின் தூதரோடு கோபம் கொண்டதற்காக அல்லாஹ் அவரோடு  கோபம் கொள்வான், அதன் காரணமாக அவள் அழிந்து விடுவாள் என்ற நம்பிக்கை அவளுக்கு இருக்கிறதா? நீ அல்லாஹ்வின் தூதரை எதிர்த்துப் பேசாதே! அவரிடம் எதையும் கேட்காதே! உனக்கு தோன்றுவதை என்னிடம் கேள்………… என்று நான் கூறினேன்.

இந்த ஹதீஸ் பல விடயங்களை சுட்டிக்காட்டுகின்றது:-

1. மக்காவாசிகளான குறைஷிகளிடத்தில் இல்லற பந்தமானது  பெண்கள் மீதான ஆண்களின் மேலாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்டது.   ஆணே தீர்மானம் எடுப்பவனாக இருந்தான். அவனே அந்தஸ்து மிக்கவனாக திகழ்ந்தான். அவனது குரல், பெண்ணின் குரலை  விட ஓங்கியிருந்தது.எதனை செய்ய வேண்டும், எதனை விட்டு விடவேண்டும் என்பதை அவனே முடிவு செய்தான். பெண்ணுக்கு அதில் தலையீடு செய்ய முடியாதிருந்து.

2. மதீனாவாசிகளிடத்தில் இவ்விடயம் இதற்கு நேர்மாறானதாகவிருந்தது . அன்சாரிப்  பெண்கள் ஆண்கள் மீது  ஆதிக்கம் செலுத்தினர்.   அல்லது அன்சாரிகள் தமது பெண்களிடம் ஆதிக்கத்தை விட்டுவிட்டார்கள் என்று கூறலாம் . எனவே அவர்களுக்கென ஓர் உயர் அந்தஸ்து இருந்தது. அவர்களது கருத்துக்கள் செவிசாய்க்கப்பட்டன. தமது கணவன்மார்களிடம் அவர்களுக்கு  செல்வாக்கு இருந்தது. புகாரியின் ஒர் அறிவிப்பில் இருப்பது  போல, “அன்சாரிப் பெண்களின் பண்பாடு” என்று உமர் விவரித்த நடத்தை இதுவாகும். மதீனத்து அன்சாரி பெண்களுக்குரிய இந்த மதிப்புமிகு அந்தஸ்தின் காரணமாக, வெட்கம், கூச்சம், சங்கடம் மிக்க விவகாரங்களில் புதிய மார்க்கத்தின் தீர்ப்புகளை கேட்பதிலும் ஆராய்வதிலும் அவர்களது துணிவின் மூலம்  அன்சாரிப் பெண்கள் தனித்துவம் பெற்று விளங்கினர். இதோ குறைஷியரான, இறைநம்பிக்கையாளர்களின் அன்னையே, அன்சாரிப்  பெண்களை பற்றி சாட்சி பகர்கின்றார் : “அன்சாரிகளின் பெண்கள் எவ்வளவு நல்ல பெண்கள்; அவர்களின் கூச்சம் மார்க்கத்தை பற்றி கேட்பதற்கும் அதைப் பற்றி ஆழ்ந்த விளக்கம் பெறுவதற்கும் அவர்களைத் தடுக்கவில்லை”.

3. மதீனாவிற்கு இடம்பெயர்ந்த குறைஷிப் பெண்கள், அன்சாரிப் பெண்களின் மூலம் தாக்கமுறலாயினர். அவர்களை பின்பற்றத் தொடங்கினர். ஒரு வகையான ஆதிக்கம் அல்லது எதிர்ப்பை கடைப்பிடிப்பதினூடாக கருத்துக்கள், முடிவுகள் மற்றும் நடத்தையில் தங்கள் கணவருக்கு நிகராக நின்றனர்.

4. அல்லாஹ்வின் தூதரின்,  மனைவிமார்களுடான நடத்தையும் உறவும்  அன்சாரிகளின் முறைப்படியும் “அன்சாரிப் பெண்களின் பண்பாடு” க்கு ஏற்பவும் இருந்தது. அல்லது இன்னும் சரியாகச் சொல்வதானால்,  அன்சாரிகளதும் அன்சாரிப் பெண்களினதும் பண்பாடு, அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கொண்டு வந்த வழிகாட்டுதலுக்கும் பண்பாட்டுக்கும் ஏற்பவே இருந்தது.  அவரது மனைவிமார்கள் அனைவருக்கும்  அவரோடு கலந்தாலோசிப்பதற்கும்; அவரது கருத்து, நடத்தை தொடர்பாக மாற்றுக் கருத்து சொல்வதற்கும்; கோபம், வெறுப்பை அல்லது பதிலளிக்கப்படாத கோரிக்கைக்காக அதிருப்தியை வெளிகாட்டும் வகையில்  பகல் முழுதும் அவரை புறக்கணித்து நடப்பதற்கும் அவர் அனுமதித்ததோடு, பொறுத்தும் கொண்டார்.

5. உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மனைவி, நபி அவர்களின் முன்மாதிரியையும் மதீனாவின் முன்மாதிரியையும் பின்பற்றிநடக்கலானார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவியும் தனது மகளுமான ஹப்ஸாவிடமிருந்து தான் கேள்விப்பட்டவற்றை அதற்கு ஆதாரமாகக் கொண்டார். அதன் காரணமாக அவர் ஊக்கமடைந்து, உமரின் விவகாரங்களில் – அவர் கடும் போக்கிற்கு பெயர்பெற்றவர் – அவள், அவர்  மீது கோபம் கொண்டு, சப்தமிட்டு  அவரை எதிர்த்துப் பேசுவதற்கு முன் வந்தாள்.

பொதுவாக நாம் கூற முடியும்:- பெண்களை அணுகுவதில் நபிகளாரின் வழிமுறை; மரியாதை செலுத்துதல், கண்ணியப்படுத்துதல், சகிப்புத்தன்மையுடனும், விட்டுக் கொடுப்புடனும் நடந்து கொள்ளுதல் என்பவற்றின் மூலம் அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. பெண்களுடான அன்சாரிகளின் பண்பாடும் அவ்வாறுதான் காணப்பட்டது. நபிகளாரின் வழிமுறைக்கு ஏற்பவே  அது அமைந்திருந்தது. இது  பெண்கள் மீதான ஆண்களின் மேலாதிக்கம் நிலவி வந்த அரபு சூழலில் பெண்களை அணுகுவதில் ஓர் மடைமாற்றத்தை ஏற்படுத்தியது.

மாறாக, பெண்களின் மீது ஆண்களின் ஆதிக்கமும்  ஆக்கிரமிப்பும்  பண்டைய மற்றும் நவீன காலங்களில் அனைத்து சமூகங்களிலும் மக்களிடையேயும் நிலவும் எளிதான சூழ்நிலையாகும். இதில் எவ்வித சிறப்போ, தனித்துவமோ, உயர்வோ இல்லை. மாறாக சிறப்பு, தனித்துவம், உயர்வு ஆகியவை எதிர்நிலையில் அடையப்படுகின்றன. அதனால்தான் இஸ்லாம் வந்து மக்களை அதன்பால் நகர்த்தியது. சிறப்பு, தனித்துவம், உயர்வு  இருப்பவற்றை நோக்கி பயிற்றுவித்தது. ஆணாதிக்கத்தை வழக்காகாக் கொண்ட தனி மனிதனுக்கோ,  அதிலிருந்து வெளிவருவது எளிதானது அல்ல. இது உமரின் நிலைப்பாட்டிலும் அவர் தனது சமூகத்தை பற்றியும் தன்னைப் பற்றியும் கூறியவற்றிலும் தெளிவாகிறது. எனவே அவர் இறைத்தூதருக்கும் அவரது மனைவிமார்ளுக்கும் இடையே நிலவும் உறவு முறையின் யதார்த்தத்தை அறிந்தபோதும், அவரது மனைவி (ஆத்திகா) தனது வாக்குவாதத்தின் வலிமையால் அவரை “தோற்கடித்தபோதும்”, அந்த விடயத்தை அவர் ஜீரனிக்கவில்லை.

குறிப்பாக, தனது மகள் தங்கள் இல்லற வாழ்வில் கூட, அல்லாஹ்வின் தூதரை விமர்சிக்கவும் கோபப்படுத்தவும் துணிவதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.

உமர்  பின் கத்தாபின் மனைவியான ஆதிகா பின்த் ஜைத் பின் அம்ர் பின் நுஃபைலிடமிருந்து  இமாம் மாலிக் தனது முவத்தாவில்  அறிவித்துள்ளார்- அவர் மஸ்ஜிதுக்கு செல்ல உமர் பின் அல்-கத்தாபிடம் அனுமதி கேட்பார். அவர் அமைதியாக இருப்பார்.  அதனால் அவள் கூறுவாள்: அல்லாஹ்வின் மீது ஆணையாக, நீங்கள் என்னைத் தடுக்காவிட்டால் நான் வெளியேறிச் செல்லுவேன்”. அவர் அவளைத் தடுக்கவில்லை.  அவர் கடைபிடிக்க ஆரம்பித்த புதிய தர்க்கமாகவும் நடத்தையாகவும் அது இருந்தது. வலிமையையும் கடுமையும்கொண்டு பிறரை மிகைப்பதற்கு  பதிலாக நீதியுடனும் கருணையுடனும் மிகைப்பதற்கு  மக்களுக்குக் கற்பிக்கின்றது. 

சிறப்பின் அளவுகோல்

இந்தமாற்றத்தையும், அதன் பெறுமானங்கள் மற்றும் அதன் கலாச்சாரத்தையும் உறுதிப்படுத்தும்  வகையில், ஆயிஷாவின் ஹதீஸையும் நாங்கள் காண்கிறோம்: அல்லாஹ்வின் தூதர் –  – கூறினார்:  “உங்களில் சிறந்தவர் அவருடைய குடும்பத்திற்கு சிறந்தவர், நான் என் குடும்பத்திற்கு உங்களில் சிறந்தவன்”. சிறந்தவர், நல்லவர் என்பதற்கான அளவுகோல் ஒரு நபர் தனது குடும்பத்தை, அதாவது அவரது மனைவி மற்றும் குடும்பத்தாரை நடத்துவதில் தான் உள்ளது. மார்க்கத்திலும் ஒழுக்கத்திலும் சிறந்தவர், தனது குடும்பத்தை சிறப்பாக நடத்துபவர்; தனது குடும்பத்துடன் நல்ல முறையில் நடந்து  கொள்பவரே. 

இந்த ஹதீஸ்  ஒரு சீர் கெட்ட சமூகச் சூழலைக் குறிக்கிறது.என்றாலும் அதுதான் தற்போது  நிலவிக்கொண்டிருக்கிறது. நண்பர்களுடான, தோழர்களுடனான உறவுகளில் குறிப்பிடத்தக்க அளவு நன்னடத்தையுடனும் நல்லொழுக்கத்துடனும் பழகும்  பல மனிதர்களை காண்கிறோம். நீங்கள் அவர்களிடம் நிறைய மென்மை, மகிழ்ச்சி, பணிவு, ஒழுக்கம்,விட்டுக் கொடுப்பு, சகிப்புத்தன்மை ஆகியவற்றைக் காண்பீர்கள். ஆனால் அவர்கள் தமது குடும்பத்துடனும், வீட்டுக்குள்ளும் இதற்கு மாற்றமாக இருப்பதைக் காண்பீர்கள்.

பல ஆண்கள் இன்னும் தங்கள் விருப்பங்களையும்,எதேச்சை அதிகாரத்தையும் ,கடுமையையும்  பெண்கள் மீது திணிப்பதை  தங்கள் முழு ஆண்மையினதும் குடும்ப நிருவாகத்தினதும  ஒரு பகுதியாக   நம்புகிறார்கள். அவர்களது கருத்துக்களோடு முரண்படக்கூடிய பெண்ணின் கருத்துக்களை கவனத்தில் கொள்வதும், அவளது விருப்பங்களுக்காக அவர்களது விருப்பங்களை விட்டும் இறங்கி வருவதும், அவள் மீது இரக்கம் காட்டுவதும்  அவர்களின் ஆண்மைக்கும் அந்தஸ்துக்கும் பொருந்தாத குறைபாடு, பலவீனம் என்று அவர்கள் நம்புகிறார்கள். இதற்காகவும் இவர்களுக்காகவும் தான் நபி அவர்கள் கூறினார்கள்: “உங்களில் சிறந்தவர் அவருடைய குடும்பத்திற்கு சிறந்தவரே, நான் என் குடும்பத்திற்கு சிறந்தவன்.” 

எவ்வாறாயினும்,   எமது இஸ்லாமிய சமூகங்களில் தொடர்ந்தும் பாதுகாக்கப்பட்டுவருகின்ற எமது அழகிய ஒழுக்க மரபுகளின் எச்சங்கள் சிலவற்றில் ஒன்றுதான்: உதவி, உபகாரத்தில் பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பது. உதாரணமாக – இதனை நாம்  சனநெரிசலில், காத்திருக்கும் சூழ்நிலைகளில், ரயில்கள், பேருந்துகள் மற்றும் அதுபோன்றவற்றில் அமர்வதற்கு ஓர் இருக்கை தேவைப்படும் வேளையிலும்,கடைகளில் பொருட்கள் கொள்வனவுசெய்யும் வேளையிலும் கண்டுகொள்கின்றோம்.

இந்த கண்ணியமிகு நடத்தைக்கான அடிப்படை  நபிமார்களின் வழிமுறைகளில் உள்ளது. மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றி அல் குர்ஆன் கூறுவது போல:-*((அவர் (மூஸா) மத்யன் நகரிலுள்ள ஓர் கிணற்றின் அருகே வந்த போது அங்கு ஓர் மக்கள் கூட்டத்தை கண்டார். அவர்களைத் தவிர தடைபட்டிருக்கும் இரு பெண்களையும் கண்டார். உங்கள் இருவரது விடயம் என்ன? என்று கேட்டார். இடையர்கள் வெளியேறும் வரை எமக்கு தண்ணீர் புகட்ட முடியாது. எமது தந்தையோ ஒரு பெரிய முதியவராக இருக்கின்றார் என்று கூறினார்கள். எனவே அவர் ( மூஸா) அவர்களுக்கு தண்ணீர்புகட்டிக் கொடுத்தார். பிறகு நிழலின் பக்கம் திரும்பி “என் இரட்சகனே! நீ எனக்கு இறக்கிவைத்த நலவுகளுக்கு நான் தேவை உடையவனாகவே இருக்கின்றேன்.))* ( கஸஸ் : 23 -24)

The views and opinions expressed in this article are those of the author and do not necessarily reflect the official policy or position of rishardnajimudeen.com.

The post பெண்களை நடாத்தும் முறை  _ நாகரிகத்தினதும்  பண்பாட்டினதும் அளவு கோலாகும் first appeared on Rishard Najimudeen.

]]>
https://rishardnajmudeen.com/2025/02/12/the_way_women_are_treated/feed/ 0
இலங்கை அரபு மத்ரசா கல்வி- கலந்துரையாடப்பட வேண்டிய சில‌ விடயப்பரப்புகள் https://rishardnajmudeen.com/2025/01/24/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-2/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25b2%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2588-%25e0%25ae%2585%25e0%25ae%25b0%25e0%25ae%25aa%25e0%25af%2581-%25e0%25ae%25ae%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25b0%25e0%25ae%259a%25e0%25ae%25be-%25e0%25ae%2595%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25ae%25bf-2 https://rishardnajmudeen.com/2025/01/24/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-2/#comments Fri, 24 Jan 2025 01:15:55 +0000 https://rishardnajimudeen.com/?p=9019 இலங்கை மத்ரசா வரலாறு 19ம் நூற்றாண்டு தொடக்கம் ஆரம்பித்து, இன்று வரை நீட்சி பெற்று வந்திருக்கிறது. இலங்கை முஸ்லிம் வாழ்வொழுங்கை நெறிப்படுத்துவதிலும், இஸ்லாத்துடனான தொடர்பையும் உணர்வையும் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதிலும் அரபு மத்ரசாக்கள் நியாயமாக‌ பங்களிப்பு செய்திருக்கின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. நீண்ட வரலாற்றுப் பங்களிப்பைக் கொண்ட மத்ரசா கல்வியொழுங்கு பற்றிய ஆழமான உரையாடல் ஒன்றின் அவசியத்தையே இக்கட்டுரை சுட்டிக் காட்டும் விடயப்பரப்புக்கள் விளக்குகின்றன. இங்கு முன்வைக்கப்படும் கலந்துரையாடலுக்கான பரப்புக்கள் எதிர்கால சீர்திருத்ததை யாசிக்கும் அதேநேரம், [...]

The post இலங்கை அரபு மத்ரசா கல்வி- கலந்துரையாடப்பட வேண்டிய சில‌ விடயப்பரப்புகள் first appeared on Rishard Najimudeen.

]]>

இலங்கை மத்ரசா வரலாறு 19ம் நூற்றாண்டு தொடக்கம் ஆரம்பித்து, இன்று வரை நீட்சி பெற்று வந்திருக்கிறது. இலங்கை முஸ்லிம் வாழ்வொழுங்கை நெறிப்படுத்துவதிலும், இஸ்லாத்துடனான தொடர்பையும் உணர்வையும் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதிலும் அரபு மத்ரசாக்கள் நியாயமாக‌ பங்களிப்பு செய்திருக்கின்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. நீண்ட வரலாற்றுப் பங்களிப்பைக் கொண்ட மத்ரசா கல்வியொழுங்கு பற்றிய ஆழமான உரையாடல் ஒன்றின் அவசியத்தையே இக்கட்டுரை சுட்டிக் காட்டும் விடயப்பரப்புக்கள் விளக்குகின்றன. இங்கு முன்வைக்கப்படும் கலந்துரையாடலுக்கான பரப்புக்கள் எதிர்கால சீர்திருத்ததை யாசிக்கும் அதேநேரம், எதிர்கால கற்கைகளுக்கான ஓர் எட்டாகவும் அமையலாம் எனக் கருதுகிறோம்.

1- மத்ரசாக்களது வரலாறு

இலங்கை மத்ரசாக்கள் பற்றிய ஏற்கனவே எழுதப்பட்டிருக்கும் ஆய்வுகள், புத்தகங்களைத் தேடிப்பார்க்கும் போது போதாமை நிலவுவதை அவதானிக்கலாம். நூற்றாண்டு கடந்த நிறுவன ஒழுங்கின் வரலாறு தொகுக்கப்படல் எமது முதன்மையான பணிகளில் ஒன்றாக அமைதல் பல வகைகளிலும் பயன் தரக்கூடியது. ஆய்வாளர் MMM மஹ்ரூப் போன்றவர்கள் இது பற்றிய உரையாடலை ஆரம்பித்து வைத்தார்கள். உதாரணமாக, 1995 இல் பிரசுரிக்கப்பட்ட அவரது The ‘Ulama’ in Sri Lanka 1800-1990: Form and Function எனும் கட்டுரை மிக முக்கியமான ஒன்று. துரதிஷ்டவசமாக, தொடர்ந்து வந்த காலப்பகுதியில் இவ்வகையான அறிவுபூர்வமான உரையாடல்களை மிக அரிதாகவே கண்டு கொள்ள முடிகிறது.

மத்ரசா கல்வி நிறுவனம் எவ்வகையான சூழமைவில் கருக்கொண்டது, தோற்றம்பெற்றது, அது சுமந்திருந்த பாடத்திட்டம், இலக்கு, அது எதிர்கொண்ட சவால்கள், அதனது சாதனைகள் மற்றும் மத்ரசா கல்வி ஒழுங்கின் வளர்ச்சிக்கு பங்களித்தவர்கள் என பல விடயங்களையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது. தோற்றம் பெற்ற மத்ரசா ஒழுங்கு காலப்போக்கில் எவ்வாறான மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டது, ஏற்பட்ட மாற்றங்கள், சீர்திருத்த முயற்சிகள் என இன்னொரு பக்கமும் அது நீள வேண்டியுள்ளது. ஆய்வாளர் ARM இம்தியாஸுடைய “Islamic Identity Formation, Madrasas, and Muslims in Sri Lanka” போன்ற கட்டுரைகள் மேலே கூறப்பட்ட வரலாற்றெழுதுகையில் துணைநிற்கக்கூடிய கட்டுரைகள் எனலாம்.

2- சிந்தனை முகாம்களுக்கிடையிலான உரையாடல்

இலங்கை முஸ்லிம் சமூகத்தினுள் வித்தியாசப்பட்ட போக்குகள், சிந்தனைகள், அமைப்புக்கள், இயக்கங்கள் காணப்படுகின்றன. குறிப்பாக, இஸ்லாமிய இயக்கங்களின் தோற்றப்பாட்டோடு மத்ரசா ஒழுங்கிலும் பாரிய மாற்றங்கள் ஏற்பட ஆரம்பித்தன எனலாம். இயக்கங்கள் தாம் பற்றிக் கொண்ட சமூக மாற்ற முறைமையை தலைமைதாங்கி கொண்டு செல்லும் மார்க்க அறிஞர் பரம்பரை பற்றி சிந்தித்ததன் விளைவாக, இயக்கங்கள் பின்பற்றிய சிந்தனை முறைமையை அடியொட்டிய மத்ரசாக்கள் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் தோற்றம்பெற ஆரம்பித்தன. குறிப்பாக, சூபித்துவ சிந்தனை, தப்லீக் சிந்தனை, சலபிய சிந்தனை மற்றும் நடுநிலை சிந்தனை என்ற நான்கு வகை சிந்தனைப் பள்ளிகளினதும் பரவல் மிக அதிகமாக இருப்பதை அவதானிக்கலாம். அத்துடன் சேர்த்து ஷீஆ கொள்கை சார்ந்த மத்ரசாக்களும் ஓர‌ளவில் தோற்றம்பெற ஆரம்பித்தன.

இலங்கை முஸ்லிம்கள் முஸ்லிமல்லாதவர்களுடனான தொடர்பு, சகவாழ்வு பற்றி வலியுறுத்திக் கூறியளவு முஸ்லிம்கள் மத்தியிலான உறவு பற்றி பேச மறந்து விட்டதாகவே எண்ணத் தோன்றுகிறது. இங்குதான், மத்ரசாக்களுக்கிடையிலான உரையாடல் தொலைந்து போகிறது. ஒரு கட்டத்தில் அமைப்புகள், இயக்கங்களுக்கிடையிலான முருகல்நிலை உக்கிரமடைந்து, சண்டை, கத்தி எனும் பாவநிலைக்கு வந்தடைந்ததை நாம் மறந்துவிடக் கூடாது. தொழிநுட்ப காலத்தில் இருக்கும் நாம், முகப்புத்தகம் போன்ற உரையாடல் தளங்களில் விவாதம் என்ற பெயரில் பரப்பப்படும் வெறுப்பு மற்றும் எதிர்ப்பை எவ்வாறு கையாள்வது என்பதில் முஸ்லிம் சமூகம் தடுமாறிக் கொண்டிருப்பதைக் காணலாம். இங்கு, மத்ரசாக்களுக்கிடையிலான கலந்துரையாடல், ஒரு சாராரை இன்னொரு சாரார் புரிந்துகொள்ளல் என்பன அவசியப்படுகின்றன. குறிப்பிட்டதொரு சிந்தனைப் பள்ளியைச் சார்ந்தவர்கள் எவ்வாறான ஆய்வுமுறைமையைப் பின்பற்றுகின்றனர், மத்ரசா சுவர்களுக்குள்ளாள் அவர்களது அன்றாட கற்றல், கற்பித்தல் உள்ளடங்களான இதர செயற்பாடுகள் எவ்வாறிருக்கின்றன போன்ற விடயங்கள் பற்றிய அறிவு பரஸ்பர புரிந்துணர்வை தோற்றுவிக்கும் எனக கருதலாம். உதாரணமாக, மத்ரசா கல்வி பற்றிய உரையாடலில் அதிக ஈடுபாடுகாட்டிவரும் பேராசிரியர் இப்ராஹிம் மூஸாவுடைய “What is Madrasa?” என்ற புத்தகம் இந்திய துணைக்கண்டத்தின் தேவ்பந்த் சிந்தனைப் பள்ளி மத்ரசாக்கள் பற்றிய அழகானதொரு புரிதலைத் தருகிறது. இலங்கையிலிருந்தும் இவ்வாறான ஆய்வுகள், எழுத்துக்கள் உருவாக வேண்டியுள்ளது போல, குறிப்பிட்ட சிந்தனைப் பள்ளியைச் சார்ந்த ஆசிரியர்கள், மாணவர்கள் இன்னொரு சிந்தனைப் பள்ளியைச் சார்ந்த மத்ரசாக்களுக்கான தற்காலிக பரிமாற்றமும் இடம்பெறுவது பற்றியும் சிந்திக்கலாம். கல்வித்துறை சார்ந்த நிபுணர்கள் கல்வி நிறுவனங்களுக்கு மத்தியிலான தற்காலிக பறிமாற்றம் எனும் கருத்தாக்கத்தை தொடர்ந்தும் வலியுறுத்தி வருகின்றனர்.

3- உள்ளக சீர்திருத்தம் ஒன்றின் தேவை

மத்ரசா சீர்திருத்தம் பற்றி பேசும் அறிஞர்கள் இரு வகை சீர்திருத்தங்களை விளக்குகின்றனர். அரசு, அதன் மத விவகார அமைச்சு புறத்திலிருந்து வரும் சீர்திருத்தம் அல்லது மேலிருந்து நிர்ப்பந்திக்கும் சீர்திருத்தம் எனவும் இதனைக் கூறலாம். இக்கட்டத்தில் மத்ரசாக்கள் விரும்பியோ விரும்பாமலோ கட்டளைகளை, சட்டங்களை நடைமுறைப்படுத்த நிர்ப்பந்திக்கப்படுகின்றன. இவ்வகையான சீர்திருத்தம் ஆரோக்கியமான, எதிர்பார்க்கும் விளைவுகளைத் தரப்போவதில்லை என ஆய்வாளர் முஹம்மத் அபூ நிமர் போன்றவர்கள் கருதுகின்றனர். வெளியிலிருந்து வரும் அழுத்தம் ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளடங்களாக மத்ரசா சூழலிலும் அதன் கலாச்சாரத்திலும் நிலையான மாற்றத்தை ஏற்படுத்தாது என அவர்கள் வாதாடுகின்றனர். மாற்றமாக, பொய்யான தரவுகள் கொண்ட அறிக்கைகளே சமர்ப்பிக்கப்படும் எனவும் கூறுகின்றனர்.

அடுத்த வகை சீர்திருத்தம் உள்ளக சீர்திருத்தமாகும். மத்ரசா தன்னையே மீள்வாசித்துக் கொள்ளும் பொறிமுறையினூடாக இவ்வகை சீர்திருத்தம் தோற்றம் பெறுகிறது. அது இயல்பாக நடைபெறும் ஒரு செயற்பாடு. தனிமனிதன் தன்னை மீள்வாசித்துக் கொள்வதுபோல இங்கு நிறுவனமொன்று தன்னை மீள்வாசித்து, மீலொழுங்குபடுத்திக் கொள்கிறது. நிறுவனம் உருவாக்கப்பட்டதன் நோக்கம், அதன் அடைவுகள், ஆசிரியர்களது நிலை, நிறுவனம் வழங்கும் கற்கை மீதான மாணவர்களது ஆர்வம், ஈடுபாடு, அண்மையில் பட்டம்பெற்று வெளியேறிய மாணவர்களது நிறுவனம் பற்றிய மனோநிலை போன்ற பல பகுதிகளையும் ஆய்வுக்குட்படுத்துவது உள்ளக சீர்திருத்தத்துக்கு வழிவகுக்கிறது.

4- இஸ்லாமிய மூலாதாரம் மற்றும் நடைமுறை சார்ந்த உரையாடல்

மத்ரசாக்களது பாடத்திட்டம் சார்ந்த கலந்துரையாடல் உள்ளக சீர்திருத்தத்தின் மையப்புள்ளி எனலாம். பெரும்பாலான மத்ரசாக்கள் ஆரம்ப கால அறிஞர்களது புத்தகங்களை அடிப்படையாக வைத்தே பாடங்களை போதிக்கின்றன. சில மத்ரசாக்கள் நவீன கால அறிஞர்களையும் உள்வாங்கியிருக்கின்றன. இங்கிருக்கும் பிரச்சினை கற்பிக்கப்படும் விடயங்களுக்கும் வாழும் சூழமைவு, உலக ஒழுங்குக்கும் இடையிலான பாரிய இடைவெளி. உதாரணமாக, அல்குர்ஆன் போதனையை எடுத்துக் கொள்ளலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட சில சூராக்கள் கற்பிக்கப்படுகின்றன. தப்சீர்களான இப்னு கசீர், ஜலாலைன் போன்ற தப்சீர்கள் போதிக்கப்படுகின்றன. அல்குர்ஆன் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வுகளை முன்வைக்கின்றது, அது அனைத்து விவகாரங்களையும் விளக்குகிறது என்ற கருத்தும் வலியுறுத்திக் கூறப்படுகிறது. எனினும், கற்கும் மாணவர்களிடத்தில் இன்றிருக்கும் சூழல்மாசடைதல் சார்ந்த பிரச்சினைக்கு அல்குர்ஆன் முன்வைக்கும் தீர்வு என்ன? இன்று மேற்குலகில் ஆதிக்கம் பெற்று வரும் குடும்பக் கட்டமைப்பு சார்ந்த உரையாடல்களை அல்குர்ஆனின் ஒளியில் எவ்வாறு புரிந்துகொள்ளலாம்? போன்ற கேள்விகளை முன்வைக்கும் போது அல்குர்ஆன் மீதான ஒட்டுமொத்தப்பார்வை மாணவர்களுக்கு வழங்கப்படுவதில் பாரிய போதாமை நிலவிவதை அவதானிக்கலாம். நவீன கால அறிஞரான தாஹா ஜாபிர் அல்வானியுடைய புத்தகங்கள் இவ்வகையான சிக்கலை விரிவாக விளக்குகின்றன.

இஸ்லாமிய கற்கையில் கற்பிக்கப்படும் ஹதீஸ், பிக்ஹ், உசூல் அல்-பிக்ஹ், அகீதா, சீரா போன்ற பாடங்கள் மாணவர்களை எமது வரலாறு நோக்கிக் கூட்டிச் செல்வதுபோல, இன்றிருக்கும் நாம் வாழும் சூழமைவு நோக்கியும் பயணிக்கத் தூண்ட வேண்டும். உசூல் அல்-பிக்ஹில் “இஜ்மா” என்ற கருத்தாக்கம் இன்றைய தொழிநுட்ப காலத்தில் எவ்வகையில் சாத்தியமானது? சீராவில் இறைத்தூதரது (ஸல்) “ஆட்சியாளர்” எனும் பாத்திரத்தை எமது சூழமைவில் எங்கு பொருத்துவது? ஹதீஸ் பாடப்பரப்பில் வரும் “இறைநிராகரிப்பாளர்களுக்கு மத்தியில் வாழும் முஸ்லிம்களுக்கு நான் பொறுப்பாளரல்ல” என்ற கருத்தில் வரும் அறிவிப்பை எமது நாட்டில் எவ்வாறு புரிந்துகொள்வது? போன்ற கேள்விகள் சில உதாரணங்கள் மாத்திரமே. சுருக்கமாகக் கூறுவதாக இருந்தால், இஸ்லாமிய மூலாதாரங்களை எமது சூழமைவுடன் உரையாட வைத்தல் எனலாம். அவ்வகையான உரையாடலுக்கு மாணவர்களைப் பயிற்றுவிக்கும் களமாக மத்ரசா கல்வியை ஒழுங்குபடுத்தலே இங்கு வலியுறுத்தப்படும் கருத்தாகும்.

5- விமர்சன ரீதியான சிந்தனை

விமர்சன சிந்தனை என்பது இன்று கல்வியலாளர்களால் அதிகம் பேசப்படும் ஒரு கருத்தாக்கம். இதனை இஸ்லாமிய கற்கைகளில் பிரயோகிப்பது எவ்வாறு என்பதே இங்குள்ள கேள்வி. இஸ்லாத்தில் திட்டவட்டமாக நிறுவப்பட்ட விடயங்களில் விமர்ச ரீதியான சிந்தனையைப் பிரயோகிக்க வேண்டிய தேவை இருக்காது எனலாம். அதன் கருத்து அறிவைப் பிரயோகிக்கக் கூடாது என்பதல்ல. உதாரணமாக, அல்லாஹ் இருக்கிறான் என நம்புதல், மறுமை நாளின் அவசியம் போன்ற இஸ்லாத்தின் மிக அடிப்படை நம்பிக்கைகளை ஒரு மனிதன் அறிவுபூர்வமாக ஏற்றுக்கொள்ளும்போதே அவனது நம்பிக்கை ஆழம் காண்கிறது. இப்பகுதிகளை விட கிளைப்பகுதிகளில், வித்தியாசப்பட்ட கருத்துக்களைக் கொடுக்க முடியுமான பகுதிகளில் விமர்சன ரீதியான சிந்தனையின் தேவை அதிகமாக உணரப்படுகிறது. குறிப்பாக, இலங்கை போன்ற முஸ்லிம்கள் மிக சிதரிய சிறுபான்மையாக வாழும் சூழமைவில், இஸ்லாமோபோபியா அதன் வீச்செல்லையை விரிவாக்கியிருக்கும் தருணத்தில் இஸ்லாத்தின் தூதை எவ்வாறு முன்வைப்பது என்ற கேள்வியிலிருந்து அவ்விமர்சன சிந்தனை துளிர்விடுகிறது. ஒரு சமூகமாக இஸ்லாத்தின் எப்பகுதியை முதன்மைப்படுத்த வேண்டும், முஸ்லிம் சமூகத்துக்குள்ளால் நிலவும் கருத்துவேறுபாடுகளை எவ்வாறு கையாள்வது, சிறுபான்மைக்கான வாழ்வொழுங்கு எவ்வாறு அமையப்பெற வேண்டும், முஸ்லிம் தலைமைத்துவத்தின் தீர்மானங்கள் எவ்வாறான பின்விளைவுகளைத் தோற்றுவிக்கின்றன, இஸ்லாமிய இயக்கங்களது சிந்தனை, நடைமுறைகளை எவ்வாறு விமர்சன ரீதியாகப் புரிந்துகொள்வது போன்றன சில கேள்விகள்.

இதனை இஸ்லாமியப் பரிபாஷையில் கூறுவதாக இருந்தால் ஒரு வகை “இஜ்திஹாத்” எனலாம். விமர்சன சிந்தனையை சிலர் அவசியமற்றதாகவும், குழப்பம் விளைவிப்பதாகவும் கருதுகின்றனர். இதனை அவ்வாறு பார்க்க வேண்டியதில்லை. விமர்சன சிந்தனை இன்னொரு பார்வை. கருத்துக்களும் சிந்தனைகளும் ஒன்றோடொன்று உறவாடும் போதுதான் புதிய பாதைகள் தோற்றம்பெறுகின்றன. மத்ரசா மாணவர்கள் விமர்சன சிந்தனைக்கு பயிற்றுவிக்கப்படுவதில் அவர்களது சிந்திக்கும் ஆற்றல் விருத்தியடைவது போல, முரன்பட்ட சிந்தனைகளை ஆரோக்கியமான உரையாடலுக்கு உள்ளாக்கும் மனோநிலையும் அவர்களினுள்ளால் பாய்ச்சப்படுகிறது.

இங்கு சுட்டிக்காட்டப்பட்டிருக்கும் ஐந்து விடயங்களும் இலங்கை மத்ரசா கல்வியமைப்பு சார்ந்து கவனம் குவிக்க வேண்டிய விடயப்பரப்புக்களுள் சில மாத்திரமே. மத்ரசா கல்வியமைப்பு பற்றிய மிக சீரியசான உரையாடலொன்றை துவக்கி வைப்பதற்கான ஆரம்ப எட்டுக்கான கவனக் குவிப்புக் கட்டுரையாகவே இவ்வெழுத்துக்கள் அமைகின்றன‌ என்பதையும் கருத்திற் கொள்வோம்.

The post இலங்கை அரபு மத்ரசா கல்வி- கலந்துரையாடப்பட வேண்டிய சில‌ விடயப்பரப்புகள் first appeared on Rishard Najimudeen.

]]>
https://rishardnajmudeen.com/2025/01/24/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%85%e0%ae%b0%e0%ae%aa%e0%af%81-%e0%ae%ae%e0%ae%a4%e0%af%8d%e0%ae%b0%e0%ae%9a%e0%ae%be-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-2/feed/ 3
பெண்கள் மாதவிடாய் காலத்தில் குர்ஆன் ஓதலாமா? https://rishardnajmudeen.com/2025/01/02/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25aa%25e0%25af%2586%25e0%25ae%25a3%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%25a4%25e0%25ae%25b5%25e0%25ae%25bf%25e0%25ae%259f%25e0%25ae%25be%25e0%25ae%25af%25e0%25af%258d-%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25b2%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4 https://rishardnajmudeen.com/2025/01/02/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/#respond Thu, 02 Jan 2025 14:44:49 +0000 https://rishardnajimudeen.com/?p=8858 பெண்கள் மாதவிடாய் காலத்தில் அல்-குர்ஆனை ஓதலாமா என்ற கேள்வியை சமீபத்தில் பலர் கேட்டிருந்தனர். இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீட மாணவிகளுக்கும் குர்ஆனை மனனம் செய்த பெண்களுக்கும் ஏனைய பல சந்தர்ப்பங்களில் பொதுவாக பெண்களுக்கும் இது குறித்து தெளிவான விளக்கம் தேவைப்படுகிறது.  ‘மாதவிடாய் பெண்கள்’ குர்ஆனை ஓதுவது குறித்து அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுவதால் குறித்த விடயத்தை எப்படி அணுக வேண்டும் என்ற ஒரு தெளிவை பெறுவதற்காக இந்த ஆக்கத்தை முன்வைக்கின்றோம். பெண்கள் மாதவிடாய் [...]

The post பெண்கள் மாதவிடாய் காலத்தில் குர்ஆன் ஓதலாமா? first appeared on Rishard Najimudeen.

]]>

பெண்கள் மாதவிடாய் காலத்தில் அல்-குர்ஆனை ஓதலாமா என்ற கேள்வியை சமீபத்தில் பலர் கேட்டிருந்தனர். இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அறபு மொழிப் பீட மாணவிகளுக்கும் குர்ஆனை மனனம் செய்த பெண்களுக்கும் ஏனைய பல சந்தர்ப்பங்களில் பொதுவாக பெண்களுக்கும் இது குறித்து தெளிவான விளக்கம் தேவைப்படுகிறது. 

‘மாதவிடாய் பெண்கள்’ குர்ஆனை ஓதுவது குறித்து அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுவதால் குறித்த விடயத்தை எப்படி அணுக வேண்டும் என்ற ஒரு தெளிவை பெறுவதற்காக இந்த ஆக்கத்தை முன்வைக்கின்றோம்.

பெண்கள் மாதவிடாய் காலத்தில் குர்ஆன் ஓதுவது சம்பந்தமாக மூன்று சிந்தனைகள் உள்ளன.

ஒன்று : மாதவிடாய் காலத்தில் குர்ஆனை ஓதுவது கூடாது.

இரண்டு : மாதவிடாய் பெண்கள் அல்-குர்ஆனை ஓதலாம்

மூன்று : ஒரு ஆயத்தை விட குறைவாக ஓதலாம்



1. மாதவிடாய் காலத்தில் குர்ஆனை ஓதுவது கூடாது

பெண்கள் மாதவிடாய் காலத்தல் குர்ஆனை ஓதுவது கூடாது என்பதே இமாம் ஷாபிஈ மற்றும் இமாம் ஹனபி சிந்தனைப் பிரிவுகளின் தீர்ப்பாக உள்ளது.

ஆனால் குர்ஆனை கற்றுக் கொடுக்கும் ஆசிரியையாக இருந்தால் ஒவ்வொரு வார்த்தை வார்த்தையாக ஓதிக் கொடுப்பதற்கு ஹனபி மத்ஹபில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஹன்பலி மத்ஹபின் பிரபல்யமான கருத்து ஓதக் கூடாது என்பதே. அதன் பொருள் மாதாந்த உபாதைக்குள்ளான காலத்தில் குர்ஆனை ஓதுவது ஆகும் என்ற சிந்தனையும் அந்த மத்ஹபின் அறிஞர்களிடம் காணப்படுகிறது. 

மாதவிடாய் காலத்தில் குர்ஆன் ஓதுவது கூடாது என்ற சிந்தனை முகாமைச் சேர்ந்தவர்கள் அதற்கு ஆதாரமாக பல ஹதீஸ்கள் முன்வைக்கின்றனர்.

அதில் மிகவும் பிரபல்யமானது இப்னு உமர் ரழி அவர்கள் அறிவிக்கும்

இது பலவீனமானதொரு ஹதீஸாகும். இதே கருத்துடைய இன்னும் பல ஹதீஸ்கள் வெவ்வேறு வழிகளில் வந்துள்ளன. அவை அனைத்தும் ஆதாரம் காட்ட முடியாத பலவீனமான ஹதீஸ் என்பதே ஹதீஸ் கலை வல்லுனர்களின் கருத்தாகும்.

இந்த ஹதீஸின் அனைத்து அறிவிப்பாளர் வரிசையும் பலவீனமாதே என இப்னுல் ஹஜர் (ரஹ்) அவர்கள் பத்ஹூல் பாரியில் பதிவு செய்துள்ளார்கள்.(1/409) மேலும் ‘இந்த ஹதீஸ் அறிஞர்களின் ஒட்டுமொத்த கருத்துப்படி பலவீனமான ஹதீஸ்’ என இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள். (பதாவா 21/460) நவீன காலத்தில் அல்லாமா அல்பானி (ரஹ்) அவர்களும் இந்த ஹதீஸ் ‘முன்கர்’ என்ற தரத்திலுள்ள பலவீனமான ஹதீஸ் என கூறியுள்ளார்.(அல்இர்வா 495)

ஜனாபத் எனும் குளிப்பு கடமையானவர் அல் குர்ஆன் ஓதக் கூடாது என்பது பெரும்பான்மை அறிஞர்களின் கருத்தாகும். எனவே ஜனாபத் உடையவரின் சட்டமே மாதவிடாய் ஏற்படும் பெண்ணுக்குமுரிய சட்டமாகும் என மேற்குறித்த அறிஞர்கள் கூறுகின்றனர். இது குளிப்பது கடமை எனும் விடயத்தில் ஜனாபத் உடையவரும் மாதவிடாய் உடைய பெண்ணும் ஒன்றாவர் என்ற ஒப்பீட்டு அடிப்படையில் கூறப்படும் ஆதாரமாகும்.

இந்த ஒப்பீடு குறித்து சட்ட அறிஞர்களின் விமர்சனங்கள் பின்வருமாறு உள்ளது:

மாதவிடாய் பெண்ணையும் குளிப்புக் கடமையானவரையும் வேறுபாடுகள் உள்ள நிலையில் சமமாக ஒப்பிடுவது தவறாகும். இருவருக்கும் வித்தியாசங்கள் பல உள்ளன. குளிப்பு கடமையானவருக்கு உடனே குளித்து விடலாம். அல்லது தொழுகை நேரம் வந்தவுடன் தொடக்கை நீக்கி விடலாம். ஆனால் மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் குறிப்பிட்ட சில நாட்கள் காத்திருக்க வேண்டும். இந்நிலையில் இருவரையும் ஒப்பிடுவது சட்ட ஒழுங்கிற்கு முரணாகும்.

மேலும் குளிப்பு கடமையான ஒருவர் குர்ஆன் ஓத முடியும் என்ற சிந்தனையை முன்வைக்கும் அறிஞர்களும் உள்ளனர். உமர் ரழி அவர்கள் ஜனாபத் உடையவர் குர்ஆன் ஓதுவது வெறுக்கத்தக்கது (மக்ரூஹ்) என்றும் இப்னு அப்பாஸ் ரழி அவர்கள் குளிப்பு கடமையானவர் குர்ஆனை ஓதுவது பரவாயில்லை என்றும் கூறியுள்ளனர். ழாஹிரி சிந்தனை முகாமில் உள்ளவர்கள் குளிப்பு கடமையானவர் குர்ஆனை ஓதுவது ஆகும் என்றே பத்வா வழங்கியுள்ளனர். 

இத்தகைய வேறுபாடுகள் உள்ள நிலையில் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் குளிப்பு கடமையானவரையும் ஒப்பிட்டு ஆதாரம் காட்டுவது சட்ட மூலாதாரங்களின் மரபுக்கு புறம்பானதாகும்.

ஜம்இய்யாவின் பத்வா

அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பத்வா குழுவானது பெண்கள் மாதவிடாய் காலத்தில் அல் குர்ஆன் ஓதுவது பற்றிய மார்க்கத் தீர்ப்பை கூறும் போது, அல் குர்ஆன் ஓதும் விடயத்தில் மார்க்க அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. மாலிக் மத்ஹபின் கருத்து மாதவிடாய் காலத்தில் குர்ஆன் ஓத முடியும் என்பதை ஜம்இய்யாவின் பத்வா உதாரணமாக எடுத்துக் கூறுகிறது. தொடர்ந்து ஏனைய மத்ஹப்களின் கருத்துக்களை முன்வைத்ததன் பின்னர் மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் அல் குர்ஆன் ஓதுவது கூடாது என ஜம்இய்யாவின் பத்வா குழு தீர்ப்பு வழங்கியுள்ளது. இருப்பினும் பெண்கள் தாம் குர்ஆனில் மனனம் செய்த பகுதி மறந்து போகும் என்பதைப் பயந்தால் மாதவிடாயுடைய காலத்தில் குர்ஆனை மீட்டிக்கொள்வதற்கு பின்வரும் வழிமுறைகளைக் கையாளலாம் என நான்கு வழிமுறைகளை தந்துள்ளது. குர்ஆனை அதிகமாகச் செவிசாய்த்தல், தான் ஓதும் சப்தம் தன் காதுகளுக்குக் கேட்காத விதத்தில் உதடுகளை மாத்திரம் அசைத்து ஓதுதல், மனதால் ஓதுதல், குர்ஆனுடைய நிய்யத்திலன்றி, துஆ மற்றும் திக்ருடைய நிய்யத்தில் ஓதுதல் என்பதே அந்த வழிமுறையாகும் என அந்த பத்வா கூறுகிறது.

2. பெண்கள் மாதவிடாய் காலத்தில் குர்ஆனை ஓத முடியும்

பெண்கள் மாதவிடாய் காலத்தில் குர்ஆன் ஓதுவதை விட்டும் ஒருபோதும் தடுக்கப்பட மாட்டாள் என்பதே அநேகமான அறிஞர்களின் சிந்தனையாகும்.

இந்த சிந்தனையை ஸஹாபாக்கள் காலம் தொட்டு நவீன காலம் வரையுள்ள அறிஞர்கள் ஆதரித்தே வந்துள்ளனர்.

பெண்கள் மாதவிடாய் காலத்தில் எந்த நிபந்தனைகளுமின்றி குர்ஆனை ஓதலாம் என இமாம் ஷாபிஈ (ரஹ்) அவர்கள் ஈராக்கில் வாழும் காலத்தில் பத்வா வழங்கியுள்ளார்கள்.(மஜ்மூ2/387)

இமாம் அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்களின் ஒரு அறிவிப்பு குர்ஆன் ஓதலாம் என்ற சிந்தனையை ஆதரித்தே வந்துள்ளது. (இஃலாமுல் முவக்கிஈன் 3/25) குர்ஆன் ஓதலாம் என்ற இந்த கருத்தை இமாம் இப்னு ஹஸம் தனது அல்முஹல்லாவில் பதிவு செய்துள்ளார்கள். (1/77)

நபித் தோழரான முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்களிடம் அப்துர் ரஹ்மான் பின் கனம் (ரழி) அவர்கள் மாதவிடாய் காலத்தில் பெண்கள் குர்ஆனை ஓதலாமா? என்று கேட்டபோது, ஆம் ஓதலாம். யார் அதனை தடுக்கின்றாரோ அவர் இந்த விடயம் குறித்து அறிவில்லாமல் அதனை செய்கிறார் என்றார்கள். (புகாரியின் விரிவுரை: இப்னு பத்தால் (1/423)

இமாம் ஸஈத் இப்னு முஸய்யப் (ரஹ்) அவர்கள் தாபியீன்கள் காலத்தில் வாழ்ந்த பிரபல்யமான ஓர் அறிஞராவார். அவரது சிந்தனையும் மாதாந்த உபாதைக்குள்ளான பெண்கள் குர்ஆனை ஓதுவது ஆகுமானது என்பதே.(முஃனி 1/106)

இமாம் இப்னு தைமியா அவர்கள் மாதாந்த உபாதைக்குள்ளான பெண்கள் குர்ஆனை தாரளமாக ஓதலாம் என்ற சிந்தனையையே தனது விருப்பத் தெரிவாக எடுத்துள்ளர்கள். மாதவிடாயின் போது ஒரு பெண் குர்ஆனில் மனனம் செய்த பகுதிகள் மறக்கும் என பயந்தால் குர்ஆனை ஓதுவது வாஜிபாகும் என்ற சிந்தனையையும் அவர்கள் முன்வைத்துள்ளார்கள்.

கலாநிதி ஜாஸிர் அவ்தா அவர்கள் ‘பெண்களும் பள்ளிவாசல்களும்’ என்ற தனது ஆய்வு நூலில் மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் குர்ஆனை ஓதுவது சம்பந்தமாக ஆய்வு செய்துள்ளார்கள். அவருடைய வாசிப்பில் இந்த தலைப்பு குறித்து மிக அழகான முறையில் தெளிவான விளக்கம் தந்தவர் இமாம் இப்னு தைமியா (ரஹ்) அவர்களே என அவ்தா குறிப்பிடுகிறார். 

இறுதியாக ஜாஸிர் அவ்தா அவர்கள் தனது ஆய்வின் முடிவில் மாதவிடாய் எற்பட்டுள்ள பெண்கள் குர்ஆன் ஓதுவதை தடுப்பதற்கு மிகச் சரியான தெளிவான எந்த ஆதாரமும் இஸ்லாமிய சட்டப்பரப்பில் இல்லை என்பதை உறுதி செய்துள்ளார். (பக்கம் 62)

இமாம் ஜவ்ஸி, இமாம் ஷவ்கானி ஆகியோரும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் அல்குர்ஆனை ஓதுவது ஆகும் என்பதையே ஆதரித்து பேசியுள்ளார்கள். இவ்வாறே அஷ்ஷெய்க் முஹம்மத் உஸைமின், ழாஹிரி மத்ஹபினர், மற்றும் சவுதியை தளமாக கொண்டு இயங்கும் பத்வாவுக்கான நிலையான கமிட்டியும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் குர்ஆனை ஓதுவது ஆகும் என்றே பத்வாக வழங்கியுள்ளனர்.

அவ்வாறே அல்-குர்ஆனை பார்க்கலாம், மனனமிட்ட பகுதியை தாரளமாக ஓதலாம் என இமாம் நவவி அர்கள் தனது முஸ்லிம் ஹதீஸ் கிரந்தத்தின் விரிவுரையில் தெளிவாகவே கூறியுள்ளார். (4/290)

இமாம் மாலிக் ரஹ் அவர்கள் ‘ஒரு பெண் மாதவிடாயின் போது அல் குர்ஆன் ஓத முடியும் என்றும், அதே நேரத்தில், அப்பெண்ணுக்கு மாதவிடாய் நின்று விட்டால் குளித்து சுத்தமாகும் வரை அல் குர்ஆன் ஓதுவது கூடாது’ என்றும் கூறியுள்ளார்கள்.

ஆயிஷா ரழி அவர்கள் நபிகளாருடன் ஹஜ் கடமைகளில் இருக்கும் போது மாதாந்த உபாதைக்குள்ளானார்கள். அப்போது நபியவர்கள் தவாப் செய்வதை தவிற ஏனைய அனைத்து கிரியைகளையும் செய்யுமாறு ஏவினார்கள்.

(புகாரி 1/68)

பல நாட்கள் தங்கியிருந்து ஹஜ் கடமையை செய்யும் பெண்கள் விடயத்தில் குர்ஆன் ஓதுவது பற்றி நபிகளார் தெளிவான சட்டத்தை கண்டிப்பாக குறிப்பிட்டிருக்க வேண்டும். இருந்தும் தவாப் மாத்திரம் கூடாது என்று உறுதியிட்டு கூறியிருப்பது அல்குர்ஆனை ஓத முடியும் என்பதையே சுட்டுகிறது.

மேற்குறிப்பிட்ட கருத்துக்களை நோக்கும் போது ஸஹாபாக்கள், தாபியீன்கள், இமாம்கள், நவீன கால அறிஞர்கள் என பலரும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் குர்ஆன் ஓதுவது கூடும் என்ற சிந்தனையை ஆதரித்தே கருத்து வெளியிட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. இதற்கு பிரதானமான காரணம் மாதவிடாய் காலத்தில் பெண்கள் குர்ஆனை ஓதுவதை விட்டும் தடுக்கக் கூடிய மிகச் சரியான தெளிவான நேரடியான எந்த சட்ட ஆதாரங்களும் ஷரீஆ சட்டப்பரப்பில் இல்லாமையாகும்.

அவ்வாறே ஸஹாபாக்களின் காலத்தில் மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் குர்ஆன் ஓதக் கூடாது என்பதற்கான எந்தப் பதிவுகளும் கிடையாது.

எனவேதான் அதிகமான அறிஞர்கள் பெண்கள் மாதவிடாய் காலத்தில் தொழுவது ஹராம் என்றும் குர்ஆன் ஓதுவது ஆகும் என்றும் தேவைப்படும் போது குர்ஆனை தொடுவதும் ஆகும் என்றும் அபிப்பிராயங்களை தெரிவித்துள்ளனர்.

மூன்றாவது சிந்தனை ஒரு ஆயத்திற்கு குறைந்த பகுதியை ஓதலாம் என்ற அபிப்பிராயமாகும். இது இமாம் அபூ ஹனீபாவின் கருத்தாகும். (பதாஇஉஸ் ஸனாஇஉ 1/38)

மேற்கூறிய சிந்தனைகளை அவதானிக்கும் போது மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் குர்ஆனை ஓதுவது குறித்து அறிஞர்கள் மத்தியில் வித்தியாசமான கருத்துக்கள் நிலவுகிறது என்பது தெளிவாகிறது. எனவே ஒருவர் தான் விரும்பிய ஒரு கருத்தை தெரிவு செய்யலாம். தான் தெரிவு செய்த சிந்தனைக்கு மாற்றமான கருத்தை கொண்டவருடன் விதண்டாவாதங்கள் செய்யத் தேவையில்லை. மாற்றமாக அடுத்த தரப்பின் கருத்துக்களை மதிக்கும் வகையில் நடந்து கொள்வதே பண்பாடாகும். 

இஸ்லாமிய ஷரீஆவின் கிளை அம்சங்களில் அனைவரையும் ஒரே கருத்தில் கொண்டு வரவேண்டும் என நினைப்பது இறை ஏற்பாட்டுக்கே முரணாகும். சட்டப்பகுதியின் கிளைப் பிரிவு என்பது ஒரு நந்தவனம். அங்கு வித்தியாசமான மலர்கள் இருப்பதுவே அழகு. அந்த அழகை கெடுப்பதற்கு யாரும் முயற்சிக்கக் கூடாது.

பாடசாலைகளிலும் அறபுக் கலாசாலைகளிலும் கல்வி பயிலும் மாணவிகளுக்கும், இஸ்லாமிய கற்கைகள் துறையில் உள்ள மாணவிகளுக்கும் பெண் ஹாபிழ்களுக்கும் அல்லது வேறு சூழ்நிலைகளில் உள்ள பெண்மணிகளுக்கும் மேலே கூறப்பட்ட இரண்டாவது சிந்தனையை தெரிவு செய்வதே மிகவும் பொருத்தமானது. இஸ்லாமிய வழிகாட்டல்கள் ஒருபோதும் மக்களை கஷ்டப்படுத்துவதில்லை. மார்க்கம் இலகுவானது. இலகுபடுத்துவதையே அது தூண்டுகிறது. இலகுவானதை தெரிவு செய்வதற்கே வழிகாட்டியுள்ளது. 

அவ்வாறே புனித ரமழான் காலங்களில் மாதாந்த உபாதைக்குள்ளாகும் பெண்கள் குறிப்பிட் சில நாட்கள் குர்ஆன் ஓதாமல் இருப்பது நிச்சயமாக சங்கடமான ஒரு விடயமாகும். இத்தகைய சந்தர்ப்பங்களில் அறிஞர்களின் கருத்து வேறுபாடுகள் அருளாவே காணப்படுகிறது.

இங்கு வாசகர்கள் சில அடிப்படை உண்மைகளை புரிந்து கொள்ள வேண்டும். கருத்து வேறுபாடுள்ள விடயங்கள் நெகிழ்ந்து கொடுக்க முடியுமான விவகாரங்களாகும். அதில் விட்டுக் கொடுத்து சகிப்புத்தன்மையுடன் நடப்பதே பண்பாடாகும். மேலும் கருத்து வேறுபாடுள்ள விடயங்கள் தடுக்கப்பட வேண்டிய தீமையாகாது. சட்டப்பரப்பில் வித்தியாசமான கருத்துக் கொள்வதற்கு இடம்பாடு இருந்தால் மாற்றுக் கருத்துக் கொண்டோரை ஒருபோதும் மறுதளிக்க முடியாது.

குறித்த ஒரு மத்ஹபின் வட்டத்தில் மாத்திரம் வெறித்தனமாக பிடிவாதம் பிடிப்பது நிச்சயமாக சமூகத்தில் பேரழிவையே கொண்டுவரும். மார்க்கத்தின் கிளை அம்சங்களில் கருத்து முரண்பாடுகள் இருக்கவே செய்யும். அது இஸ்லாமிய சட்டப்பரப்பின் கிளை விவகாரங்களில் காணப்படும் இயல்பாகும்.

அனைவரும் ஒரு கருத்தில் இருக்க வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது நிச்சயமாக குழப்பங்கள் உருவாகுவதற்கே வித்திடும். அவ்வாறு செயற்படுவது இறை நியதிகளுக்கு முரண்பட்ட போக்காகும்.

இஸ்லாமிய சட்டப்பரப்பில் இத்தகைய கருத்து வேறுபாடுள்ள விடயங்களில் யாருடைய ஆதாரம் மனதிற்கு திருப்தி தரும் வகையில் உள்ளதோ அந்த வகையில் செயற்படுவதற்கு சுதந்திரம் உண்டு. காரணம் அது தனிமனித வழிபாடாகும். இது ரமாழான் நோன்பு அல்லது பெருநாள் தினத்தை நிர்ணயித்தல் போன்ற சமூகக் கடமைகள் அல்ல.

மேற்படி கருத்து வேறுபாடுள்ள சமூக கடமைகளை நிறைவேற்றும்போது தனிமனிதர்களோ பள்ளிவாயல்களோ ஊர்களோ அமைப்புக்களோ தனித்து தீர்மானம் எடுத்துத் தொழிற்படுவது சட்ட மரபுக்கு முரணாகும்.

ஆனால் பெண்கள் மாதவிடாய் காலத்தில் குர்ஆன் ஓதுவது சமூகக் கடமையன்று. அது தனிமனித வழிபாடாகும். எனவே இத்தகைய விவகாரங்களில் ஒருவர் தான் விரும்பிய சிந்தனையை சுதந்திரமாக தெரிவு செய்து பின்பற்றலாம். பொது மக்கள் இத்தகைய கருத்து வேறுபாடுகளில் உள்ள நன்மைகளை பெற முடியாமல் கதவடைப்பது தான் கூடாது. தகுதிவாய்ந்த ஒவ்வொரு அறிஞரின் கருத்திலும் சிந்தனையிலும் அருளும் நலனும் இருக்கவே செய்யும்.

அல்லாஹ் மிக அறிந்தவன்.

The post பெண்கள் மாதவிடாய் காலத்தில் குர்ஆன் ஓதலாமா? first appeared on Rishard Najimudeen.

]]>
https://rishardnajmudeen.com/2025/01/02/%e0%ae%aa%e0%af%86%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%ae%be%e0%ae%af%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/feed/ 0
அல்குர்ஆன் முன்வைக்கும் பிரபஞ்ச விதிகள் – சில உதாரணங்கள் https://rishardnajmudeen.com/2024/10/21/%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%8d%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2585%25e0%25ae%25b2%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25b0%25e0%25af%258d%25e0%25ae%2586%25e0%25ae%25a9%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25af%2581%25e0%25ae%25a9%25e0%25af%258d%25e0%25ae%25b5%25e0%25af%2588%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581%25e0%25ae%25ae%25e0%25af%258d https://rishardnajmudeen.com/2024/10/21/%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%8d%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/#respond Mon, 21 Oct 2024 03:18:23 +0000 https://rishardnajimudeen.com/?p=8218 அல்குர்ஆன் சட்டப் பகுதியோடு மாத்திரம் சுருங்கிய‌ ஒன்றல்ல. நாம்தான் அதனை பிழையாக புரிந்திருக்கிறோம். சட்டங்களை பெற்றுக் கொள்வதற்காக மட்டுமே நாம் அல்குர்ஆன் நோக்கி மீள்வதுண்டு. சட்டப்பகுதி அல்குர்ஆனில் சிறியதொரு பகுதி என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், ஒட்டுமொத்த அல்குர்ஆனும் அதுவல்ல. அல்குர்ஆன் பேசும், ஆனால் நாம் ஆழ்ந்து பார்க்க மறந்துவிட்ட, இன்னும் எத்தனையோ பகுதிகள் இருக்கின்றன. அவற்றுள் மிக முக்கியமானதுதான் “பிரபஞ்ச விதிகள்” எனும் பகுதி. படிமுறை விதி, காலக்கெடு விதி, நாகரிகச் சுழற்சி விதி, எதிர்விசை விதி, [...]

The post அல்குர்ஆன் முன்வைக்கும் பிரபஞ்ச விதிகள் – சில உதாரணங்கள் first appeared on Rishard Najimudeen.

]]>

அல்குர்ஆன் சட்டப் பகுதியோடு மாத்திரம் சுருங்கிய‌ ஒன்றல்ல. நாம்தான் அதனை பிழையாக புரிந்திருக்கிறோம். சட்டங்களை பெற்றுக் கொள்வதற்காக மட்டுமே நாம் அல்குர்ஆன் நோக்கி மீள்வதுண்டு. சட்டப்பகுதி அல்குர்ஆனில் சிறியதொரு பகுதி என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால், ஒட்டுமொத்த அல்குர்ஆனும் அதுவல்ல. அல்குர்ஆன் பேசும், ஆனால் நாம் ஆழ்ந்து பார்க்க மறந்துவிட்ட, இன்னும் எத்தனையோ பகுதிகள் இருக்கின்றன. அவற்றுள் மிக முக்கியமானதுதான் “பிரபஞ்ச விதிகள்” எனும் பகுதி. படிமுறை விதி, காலக்கெடு விதி, நாகரிகச் சுழற்சி விதி, எதிர்விசை விதி, வசப்படுத்தல் விதி போன்ற இன்னும் பல பிரபஞ்ச விதிகளை அல்குர்ஆன் எமக்கு கற்பிக்கிறது. அவற்றுள் சிலதை மாத்திரமே இங்கு விளக்குகிறோம்:

1- படிமுறை விதி

படிமுறை விதி என்பது தனிமனித, சமூக விவகாரங்கள் அனைத்தும் இறைவன் ஏற்படுத்தி வைத்திருக்கும் கட்டம், கட்டமான வளர்ச்சி எனும் விதிக்குள்ளாலே இயங்குகிறது என்பதாகும். அல்லாஹ் மனிதனை ஒரே நாளில் படைத்திருக்கலாம். ஆனால் படிமுறை வளர்ச்சியினூடாக அதனை ஆக்கி வைத்திருக்கிறான்:

இந்திரியத் துளியை அலக் என்ற நிலைக்கு ஆக்கினோம். பின்னர் அலக்கை ஒரு தசைப் பிண்டமாக்கினோம். பின்னர் அத்தசைப்பிண்டத்தை எலும்புகளாகவும் ஆக்கினோம். பின்னர், அவ்வெலும்புகளுக்கு மாமிசத்தை அணிவித்தோம். பின்னர் நாம் அதனை மனிதன் எனும் வேறு ஒரு படைப்பாக செய்தோம்

(முஃமினூன் 14)

இரு என்றால் இருக்கக் கூடிய வகையில் மனிதனையும் பிரபஞ்சத்தையும் படைக்க சக்தி படைத்த இறைவன் படிமுறை விதியை கையாண்டிருக்கிறான். மனிதன் அவ்விதியை எல்லா கட்டத்திலும் கடைபிடிக்க வேண்டும் என்பது இதனூடாக உணர்த்தப்படுகிறது.

நபியவர்கள் தன் தோழர்களைப் பயிற்றுவிக்கும் போதும் இவ்விதியை கையாண்டிருக்கிறார்கள். முஆத் (ரழி) அவர்களை யெமன் பகுதிக்கு அனுப்பி வைத்த போது பின்வருமாறு உபதேசித்தார்:

வேதம் கொடுக்கப்பட்ட ஒரு சமூகத்திடம் செல்கிறீர்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை, முஹம்மத் அல்லாஹ்வின் தூதர் என சாட்சி கூறல் நோக்கி அவர்களை அழையுங்கள். அவர்கள் அதற்கு கட்டுப்பட்டால் ஒவ்வொரு நாளும் ஐவேளை தொழுகையை அல்லாஹ் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அறிவியுங்கள். அதற்கும் அவர்கள் கட்டுப்பட்டால் அவர்களது வசதிபடைத்தவர்களிடமிருந்து பெறப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்படும் ஸகாத்தை அல்லாஹ் கடமையாக்கியிருக்கிறான் என்பதை அறிவியுங்கள்...

(புஹாரி, முஸ்லிம்)

‘ஹிக்மா’ என்ற சொல்லுக்கு இப்னு அப்பாஸ் (ரழி) கொடுக்கும் விளக்கம் எமது அவதானத்தைப் பெற வேண்டியுள்ளது: “சிறிய விடயங்களை அறிவதிலிருந்து பெரிய விடயங்களை அறிவது வரை மக்களை கூட்டிச் செல்லல்”. மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய விடயங்களைப் பேசுதல் என ஷெய்க் கஸ்ஸாலி ‘ஹிக்மா’ என்ற சொல்லை விளக்குகிறார். நபியவர்களது பின்வரும் ஹதீஸும் மக்கள் தரம் அறிந்து அவர்களை கட்டம் கட்டமாக‌ பயிற்றுவிப்பதன் அவசியத்தை வலியுறுத்துகிறது:

"மக்கள் அறியும் விடயங்கள் கொண்டு அவர்களுடன் பேசுங்கள். அல்லாஹ்வும் அவனது தூதரும் பொய்ப்படுத்தப்படுவதை விரும்புகிறீர்களா?"

(புஹாரி)

இஸ்லாத்தை மக்களிடம் முன்வைக்கும் போது படிமுறை விதி கட்டாயம் கவனத்திற் கொள்ள‌ப்பட வேண்டும். இஸ்லாத்தின் மிக அடிப்படையான பகுதிகளிலிருந்தே மக்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும். இஸ்லத்தில் மிக அடிப்படை பகுதிகள் இருக்கின்றன. கிளைப் பகுதிகள் இருக்கின்றன. முஹ்கம் (பல கருத்துக்களுக்கு இடம்பாடு இல்லாது, ஒரே கருத்தை தெளிவாகக் கூறும் வசனங்கள்), முதஷாபிஹ் (பல கருத்துக்களுக்கு இடம்பாடான வசனங்கள்) என்ற வகைப்பாடுகள் இருக்கின்றன. இஸ்லாம் பற்றிய மிக ஆரம்ப புரிதல் கொண்ட சமூகத்திற்கு கிளைப்பகுதிகளை விட மார்க்கத்தின் அடிப்படை பகுதிகளையே கூடுதல் கவனம் கொடுத்து கற்பிக்க வேண்டியுள்ளது. அவ்வடிப்படைகளிலிருந்து மெதுமெதுவாக அவர்களை உருவாக்க வேண்டும். உதாரணமாக தொழுகையை எடுத்துக் கொள்ளலாம். தொழுகை இஸ்லாத்தின் மிக அடிப்படையானதொரு வணக்கம். அதில் எவ்வித கருத்துவேறுபாடுமில்லை. தொழுகையை இயந்திரத்தன்மையற்ற, விளைவுகளைப் பெற்றுத்தரக்கூடிய விதத்தில் ஆரோக்கியமானதாக மாற்றக் கூடிய முயற்சிகள் எம் சமூகத்தில் எந்தளவு தூரம் முக்கியம் கொடுக்கப்படுகிறது என்பது மிகப் பெரும் கேள்வியாகும். தொழுகையில் ஓதக் கூடிய சிறிய சூறாக்களையாவது கற்பித்து, பொருளுணர்ந்து ஓதக்கூடிய வகையில் மக்களை பயிற்றுவிக்கும் வேலைத்திட்டங்கள் எந்தளவு தூரம் சமூகத்தில் இடம்பிடித்திருக்கின்றன என்பது இன்னொரு கேள்வி. அன்றாட வாழ்வுக்கு தேவையான ஹதீஸ்களை, அடிப்படை நம்பிக்கை கோட்பாடுகளை மக்களிடம் கொண்டு செல்வதற்கான முயற்சிகளை கூட நாம் இதுவரை செய்ததாக இல்லை. இஸ்லாத்தின் மிக முக்கிய பகுதிகளிலிருந்து அடுத்தடுத்த கட்டங்கள் நோக்கி நகரும் வேலைத்திட்டத்தை நாம் மீண்டும் ஆரம்பிக்க வேண்டியுருக்கிறோம்.

 சட்டங்களை அறிமுகப்படுத்தி, நடைமுறைப்படுத்த முனையும் அல்குர்ஆன் படிமுறை விதியைப் பிரயோகித்தே அமுல்படுத்தியது. சாராயம் தடைசெய்யப்பட்டதை சிறந்ததொரு உதாரணமாகக் கூறலாம்.  வட்டியை தடை செய்ய அல்குர்ஆன் கையாண்ட படிமுறை விதியை பின்வரும் நான்கு வசனங்களினூடாக புரிந்துகொள்ளலாம்:

மனிதர்களுடைய முதலுடன் சேர்ந்து உங்கள் செல்வம் பெருகும் பொருட்டு நீங்கள் வட்டிக்கு விடுவீர்களானால், அது அல்லாஹ்விடம் பெருகுவதில்லை

(ரூம் 30)

வட்டி வாங்குவது அவர்களுக்குத் (யஹூதிகளுக்கு) தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் காரணமாகவும், தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் காரணமாகவும் இவ்வாறு தண்டனை வழங்கினோம்

(நிசா 160)

ஈமான் கொண்டோரே! இரட்டிப்பாக்கிக் கொண்டு வட்டியை தின்னாதீர்கள்

(ஆல இம்ரான் 130)

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் உண்மையாக முஃமின்களாக இருந்தால், இறைபிரக்ஞை கொண்டு, எஞ்சியுள்ள வட்டியை வாங்காது விட்டு விடுங்கள்

(பகரா 278)

அன்றிருந்த சூழலை அல்குர் ஆன் கருத்திற் கொண்டது. மக்களையும் அவர்கள் மன‌நிலையையும் கவனத்திற் கொண்டது. அப்பின்புலத்தில் மிகக் கவனமாக மெதுமெதுவாக, கட்டம் கட்டமாக‌ மக்களை மாற்றியமைத்தது.

2- காலக்கெடு விதி

காலக்கெடு விதி படிமுறை விதியுடன் மிக நெருக்கமாக‌ தொடர்புபடுகிற‌து. ஒன்றின் விளைவு இன்னொன்று எனவும் கூற முடியும். ஒவ்வொன்றுக்கும் காலம் வரவேண்டும் எனவும் இதனைக் கூறலாம். எந்தவொரு செயலும் அல்லது வேலைத்திட்டமும் அதற்குரிய காலக்கெடு வரமுன் பூர்த்தியாகி விடுவதில்லை. அதர்குரிய காலம் வரை அமைதியாகவும் நிதானமாகவும் இருக்க வேண்டும்.  அல்குர்ஆன் இவ்விதி பற்றி பல இடங்களில் பேசியிருக்கிறது:

"ஒவ்வொரு சமூகத்தினருக்கும் ஒரு குறிப்பட்ட தவணையுண்டு. அவர்களது தவணை வந்து விட்டால் ஒரு மணி நேரம் பிந்தவும் மாட்டார்கள். முந்தவும் மாட்டார்கள்"

(யூனுஸ் 49)

ஒவ்வொரு தவணைக்கும் ஒரு ஏடு உள்ளது

(ரஃத் 38)

மறுமையின் வேதனையைப் பற்றி அவர்கள் உம்மை அவசரப்படுத்துகிறார்கள். அதற்கெனக் குறிப்பிட்ட தவணை ஏற்படுத்தப்படாதிருப்பின் அவ்வேதனை அவர்களுக்கு வந்திருக்கும்.

(அன்கபூத் 53)

இதுபோன்ற இன்னும் பல வசனங்களும் காலக்கெடு விதி பற்றிப் பேசுகின்றன.

விதையை நட்டு ஒரே நாளில் அறுவடை செய்ய முடியாது அதற்கென்று சில நாட்கள் காத்திருக்க வேண்டும். தாயின் வயிற்றில் கருக்கட்டிய மனிதன் உலகை எட்டிப் பார்க்க சில மாதங்கள் தேவைப்படுகின்றன. இவ்வாறுதான் சமூக சீர்திருத்த அல்லது சமூக மாற்ற சிந்தனைகளும். சிந்தனையை முன்வைத்து ஓரிரு நாட்களில் மாற்றம் நிகழ்ந்து விடுவதில்லை. அதற்கென்று காலம் இருக்கிறது. வரலாறு இதற்கான சிறந்த ஆதாரமாகும். நபியவர்கள் அல்லாஹ்வின் மிக விருப்பத்துக்குரிய மனிதராக இருந்தும் அவரது முயற்சிகள் 23 வருடங்களை எடுத்தன. தொடர்ந்து வந்த சீர்திருத்தவாதிகள், சீர்திருத்த பள்ளிகளது வரலாற்றைப் படித்துப் பார்த்தால் இவ்வுண்மையை புரிந்துகொள்ளலாம். சிலர் முன்வைத்த சிந்தனைகள் அவர்களது மரணத்தின் பின் வெற்றியடைந்த வரலாறும் உள்ளது. விளைவுகளை மிக அவசரமாக எதிர்பார்ப்பது அல்குர்ஆனின் கருத்துப்படி பிழையானதாகும்.

இவ்யதார்த்தத்தை புரிந்துகொள்ளாதபோதுதான் விரக்தி தோன்றுகிறது. முயற்சிகளுக்கான விளைவுகளை கண்டு கொள்ளாத போது மனிதன் விரக்தியடைந்து விடுகிறான். அவனது முயற்சிகள் கைவிடப்படுகின்றன. அல்குர்ஆன் முன்வைக்கும் காலக்கெடு விதியை சரியாக புரிந்துகொள்பவன் விரக்தியுறப்போவதில்லை. முயற்சிகள் தொடரும். விளைவுகளை நிதானமாகவும் பொறுமையாகவும் எதிர்பார்த்திருப்பான். அதற்குரிய காலம் வரும் வரை அவசரப்படப் போவதில்லை.

 மனிதன் தன் முயற்சியை மிகக் கச்சிதமாக செய்துவிட்டே விளைவுகளை எதிர்பார்க்க வேண்டும். பத்ர் போரில் நிகழ்ந்த அற்புதங்கள் விதிவிலக்கானவை. அதனை விதியாக்கிக் கொள்ளக் கூடாது. விதிவிலக்குகளை விதியாக்கிக் கொண்டு அற்புதங்களை எதிர்பார்த்து, அதில் தங்கியுருக்கும் சமூகம் உலகுக்கு தலைமை தாங்க அருகதையற்றதாகிப் போய்விடுகிறது. தேவையான காரண, காரியங்களை எடுக்காமல் வெறுமனே இறைவனிடம் பிரார்த்திப்பது எம்மை இன்னும் பலவீனப்படுத்தும். காலக்கெடு விதி என தமது பலவீனத்தை மூடிமறைப்பது மடமையின் உச்ச கட்டம் எனக் கூறலாம்.

3- எதிர்விசை விதி

எதிர்விசை விதி என்பது ஒரு சக்தியை, பலத்தை இன்னொரு சக்தி, பலம் எதிர்த்து நிற்றல் எனலாம். இவ்விதி சமூக இயக்கத்துக்கும் உலகம் சீர்கெட்டுப் போகாமலிருக்கவும் அவசியமானது என அல்குர்ஆன் கருதுகிறது:

"அல்லாஹ் மக்களில் சிலரைக் கொண்டு சிலரைத் தடுக்காவிட்டால் பூமி சீர்கெட்டிருக்கும்"

(பகரா 251)

மனிதர்களில் சிலரைக் கொண்டு சிலரை அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் கிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்

(ஹஜ் 40).

தனிமனிதனிடத்திலும் சமூகங்களிடத்திலும் இவ்விதி அமைக்கப்பட்டுள்ளது. ஒரு மனிதனினுள் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி இவ்விதியைச் சார்ந்தது. நோய் கிருமிகளுடன் எதிர்த்தியங்கக் கூடிய வகையில் மனித உட்கட்டமைப்பு அமைக்கப்பட்டிருக்கிறது. இதுபோலதான் சமூக மட்டத்திலும் இவ்விதி தொழிற்படுகிறது. ஓர் அநியாயக்கார ஆட்சியாளன் தொடர்ந்தும் ஆட்சியில் இருப்பதில்லை. அவனை எதிர்க்கும் இன்னோர் ஆட்சியாளன் உருவாகிறான். அவர்களிருவருக்கும் மத்தியில் போட்டி நிலவுகிறது. ஒருவரை ஒருவர் எதிர்க்கின்றனர். பலவீனர்களும் அநியாயமிழைக்கப்பட்டவர்களும் தம்மை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கும், பலப்படுத்திக் கொள்வதற்கும் இது வழிவகுக்கிறது. எழுச்சிக்கும் நீதிக்குமான வாயில் திறக்கப்படுகிறது. அநீதியாளர்களின் போட்டியும் சண்டையும் நீதிக்கு வழி வகுக்கின்றன.

 ஈமானுக்கெதிரான சதிகள் அதிகரிக்கும் போது முஃமின்களிடத்தில் எதிர்ப்புச் சக்தியும் நாட்ட சக்தியும் வலுவடைகின்றன. விழித்துக் கொள்கின்றனர். தம் கொள்கையில் உறுதியடைகின்றனர். நன்மையும், நீதியும் வளர்வதற்கு இறைவன் ஏற்படுத்தி வைத்திருக்கும் ஒரு விதி என இதனைக் கூற முடியும். எதிர்ப்பையும் விமர்சனத்தையும் ஒரு சமூகம் மிகக் கவனமாக புரிந்துகொண்டு அதற்கேற்ப தம்மை ஒழுங்குபடுத்திக் கொள்ளுமாயின் அது தன்னை மீளொழுங்குபடுத்திக் கொண்டு வளர்ச்சி நோக்கி நகரும். இன்னும் பலப்படும்.

மேற்கூறிய விதிகளை இன்றைய முஸ்லிம்கள் சரியாக புரிந்துகொள்ள வேண்டும். அல்குர்ஆனை  சட்டப் புத்தகமாக பார்க்கும் நிலையிலிருந்து வெளியேறி, அல்குர்ஆனை நாகரீகமொன்றுக்கான மூலாதாரம் எனும் நிலையில் புரிந்துகொள்ளக் கூடியவர்களாக மாறுவதற்கான எட்டுக்களை எடுத்து வைப்பதுதான் முஸ்லிம்களாகிய நாம் இன்று செய்ய வேண்டியது எனலாம்.

The post அல்குர்ஆன் முன்வைக்கும் பிரபஞ்ச விதிகள் – சில உதாரணங்கள் first appeared on Rishard Najimudeen.

]]>
https://rishardnajmudeen.com/2024/10/21/%e0%ae%85%e0%ae%b2%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%b0%e0%af%8d%e0%ae%86%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b5%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/feed/ 0
ஸூரா நூஹ்: மையக்கருத்தினூடானதொரு புரிதல் https://rishardnajmudeen.com/2024/10/20/%e0%ae%b8%e0%af%82%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25b8%25e0%25af%2582%25e0%25ae%25b0%25e0%25ae%25be-%25e0%25ae%25a8%25e0%25af%2582%25e0%25ae%25b9%25e0%25af%258d-%25e0%25ae%25ae%25e0%25af%2588%25e0%25ae%25af%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25bf%25e0%25ae%25a9 https://rishardnajmudeen.com/2024/10/20/%e0%ae%b8%e0%af%82%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9/#respond Sun, 20 Oct 2024 14:58:38 +0000 https://rishardnajimudeen.com/?p=8142 ஸூராவின் பெயருக்கு ஏற்ற வகையில் நூஹ் நபி பற்றியே முழு ஸூராவும் பேசுகிற‌து. ஸூராவின் மையக்கருத்தை “தூதை வாழவைப்பதற்கான முயற்சியும் அதற்கெதிரான மிகப்பெரும் தடைகளும்” எனக் கூற‌ முடியும். ஸூராவின் முதல் பகுதி (01 – 04 வரையான வசனங்கள்) இறைத்தூதின் உள்ளடக்கம் பற்றியும் சூறாவின் இரண்டாம் பகுதி (05 – 20 வரையான வசனங்கள்) தூதை வாழ வைப்பதற்காக நபி நூஹ் 950 வருடங்களாக‌ மேற்கொண்ட அர்ப்பணங்கள், தியாகங்களை மிக சுருக்கமாகவும் விபரிக்கிற‌து. மூன்றாம் பகுதி [...]

The post ஸூரா நூஹ்: மையக்கருத்தினூடானதொரு புரிதல் first appeared on Rishard Najimudeen.

]]>
ஸூராவின் பெயருக்கு ஏற்ற வகையில் நூஹ் நபி பற்றியே முழு ஸூராவும் பேசுகிற‌து. ஸூராவின் மையக்கருத்தை “தூதை வாழவைப்பதற்கான முயற்சியும் அதற்கெதிரான மிகப்பெரும் தடைகளும்” எனக் கூற‌ முடியும். ஸூராவின் முதல் பகுதி (01 – 04 வரையான வசனங்கள்) இறைத்தூதின் உள்ளடக்கம் பற்றியும் சூறாவின் இரண்டாம் பகுதி (05 – 20 வரையான வசனங்கள்) தூதை வாழ வைப்பதற்காக நபி நூஹ் 950 வருடங்களாக‌ மேற்கொண்ட அர்ப்பணங்கள், தியாகங்களை மிக சுருக்கமாகவும் விபரிக்கிற‌து. மூன்றாம் பகுதி (21 -25 வரையான வசனங்கள்) இறைத்தூதை எத்திவைக்கும் போது நூஹ் நபி எதிர்கொண்ட மிக முக்கிய இரு சவால்களை குறிப்பிடுகிறது. கடைசிப் பகுதி (26 – 28 வரையான வசனங்கள்) தூதை சுமக்கும் புதிய பரம்பரையொன்றைத் தோற்றுவித்தல் என்ற சிந்தனையை முன்வைக்கிறது. 

சூறா அரம்பமாக இறைத்தூது என்பது என்ன? என்ற கேள்விக்கு மிக சுருக்கமாக பதிலளிக்க முனைகிறது.  மூன்று சொற்களினூடாக இஸ்லாமிய தூதின் அடிப்படைகளை விளக்குகிறது. அல்லாஹ்வை வணங்குதல், அவனது அன்பு மற்றும் தண்டனையை உள்ளத்தில் இருத்தி செயற்பாடுகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளல், இறைதூதருக்கு கட்டுப்படல் ஆகிய மூன்று பகுதிகளும் தூதின் சாரம் எனலாம். அல்லாஹ்வை வணங்குவதன் மூலம் மனிதன் உலகப் பொருட்களுக்கோ, ஏனைய மனிதர்களுக்கோ அடிமையாவதிலிருந்து விடுதலை பெறுகிறான். மனிதன் உலகப் பிடிகளிலிருந்து விடுபடுகிறான். உலகப் பொருட்களை வணங்கி அவற்றை விட‌ தன்னை இழிவானவனாக கருதக் கூடாது என வாதாடும் இஸ்லாம், மனிதனே இப்பிரபஞ்சத்தின் மையப் புள்ளியில் இருக்கக் கூடியவன் எனவும் அதன்  நிர்வாகி எனவும் கருதுகிறது. அது அவனுக்கானதொரு கனதியான பொறுப்பு. 

உலகை அழகுபடுத்துவதும், வளப்படுத்துவதும் அவன் மீதிருக்கும் கடமைகள். மிகப்பெரும் வணக்கம் அது. அமைதியானதொரு உலகை ஏற்படுத்தி, அடிப்படைத் தேவைகள் பூரணம்பெற்ற சமூகங்களைத் தோற்றுவிப்பதும் அவை தமக்கு மத்தியில் பர்ஸ்பரம் அறிமுகமாகிக் கொள்வதுடன் உதவி ஒத்தாசைகள் செய்து கொள்வதை நோக்கிய பயணம் இஸ்லாத்தின் மிகப்பெரும் இலக்குகளில் ஒன்று. இப்பயணமே இறைத்தூதின் பயணமும். இறைத்தூதர் (ஸல்) அறிமுகப்படுத்தியிருக்கும் தூது மனித தேவைகளைக் கருத்திற்கொண்ட மனிதனுக்கான வாழ்வமைப்பாகும். மனித வாழ்வுக்கு அவசியமான வணக்கங்கள், தனிமனித, குடும்ப, சமூக சட்டங்களை அது கொண்டிருக்கின்றது. மாற்றமுறா வழிகாட்டல்களையும், இடம்-சூழல் காரணிகளுக்கேற்ப மனித அறிவைப்பிரயோகித்து இஜ்திஹாத் செய்யக்கூடிய தன்மையையும் தூது கொண்டிருக்கிற‌து. இவ்விரு தன்மைகளினூடாக தூது இறுதிநாள் வரை தொடர்ந்தும் வாழ்கிறது, வழிகாட்டுகிறது, நடைமுறை சாத்தியமான வாழ்வமைப்பாக இருக்கிறது. ஒட்டுமொத்தமாக கூறுவதாயின் ஏகத்துவமே தூதின் மையம் எனக் கூற முடியும். வாயால் மொழிந்துவிட்டு அமர்ந்துகொள்ளும் ஏகத்துவமல்ல. மாற்றமாக உலகுக்கு அடிமையாவ‌திலிருந்து தன்னை விடுவிக்கும் வாழ்வமைப்பைக் காட்டிக்கொடுக்கும் ஏகத்துவம் அது.  

இறைவன் ஒருவனை வணக்கத்துக்குரியவனாகவும் பொறுப்பு சாட்டக்கூடியவனாகவும் நம்பும் மனிதன்,  ஏழை-பணக்காரன், உயர்ந்த சாதி-கீழ்சாதி, உயர்பதவி, அற்பமான‌ பதவி, பிரதேசவாதம், இயக்கவாதம் போன்ற அனைத்து பிரிப்பு முறைகளையும் தாண்டி மனிதன் என்பவன் இறைவனது படைப்பு, ஆதமுடைய‌ பிள்ளைகள் என்ற சமத்துவ பார்வை கொண்டவனாக மாறி விடுகிறான். நீதி, சமத்துவம், அன்பு போன்ற பண்பாட்டு விழுமியங்களோடு மனிதனை அணுகும் அவன், செயல்களில் சிறந்தவரே இறைவனிடம் கண்ணியத்துக்குரியவர் என்ற மிக அடிப்படையான கோட்பாட்டையும் உருவாக்கிக் கொள்கிறான். இவ்வடிப்படைக் கோட்பாட்டையும் விழுமியங்களையும் உலகில் பரப்பும் முயற்சி இலகுவானதல்ல. மிக நீண்டதொரு வேலைத்திட்டம். நூஹ் நபியின் முயற்சி இதற்கான‌ சிறந்ததோர் உதாரணம். சூறாவின் இரண்டாம் பகுதி அவரது அர்ப்பணங்களை விளக்குகிற‌து. 

எல்லா நபிமார்களது முயற்சிகளும் இவ்வாறே இருந்தன‌. இறுதித் தூதரது (ஸல்) வாழ்வு சிற‌ந்ததொரு சாட்சி. அவரை உண்மையாளர், நம்பிக்கையாளர் என்று கூறியவர்கள் தூதைப் பகிரங்கப்படுத்தியதுடன் தலைகீழாய் நின்றனர். பொய்யர், சூனியக்காரர், வழிகெடுப்பவர் என்றெல்லாம் கூறித் திறிந்தனர். பொருளாதாரத் தடை விதித்தனர். ஏன், கொலை செய்ய கூட‌ முயற்சித்தனர். சொந்த நாட்டை விட்டு விரட்டினர். இறுதித் தூதரின் பின் இத்தூதுக்காக பாடுபட்டவர்கள் அன்று தொடக்கம் இன்று வரை அனுபவிக்கும் துன்பங்கள், சித்திரவதைகள் பட்டியல்படுத்த முடியாதவை. நன்மை, தீமை; சத்தியம்; அசத்தியம்; உண்மை; பொய்; நீதி; அநீதி; சமத்துவம், பாரபட்சத்துக்கிடையிலான முரன்பாடு உலக‌ நியதிகளில் ஒன்று என்பது மட்டும் உணமை.  

ஏகத்துவத்தை அதன் விரிந்த தளத்தில் புரிந்து நீதி, சமத்துவம் போன்ற அடிப்படைப் பண்பாட்டுப் பெருமானங்களுக்காக உழைக்கும் போது அத்தூது மூலம் பாதிக்கப்படுபவர்கள் அதனை எதிர்க்க முனைகின்றனர். எதிர்ப்பதற்குத் தலைமை தாங்குகின்ற‌னர். இப்பிரிவினர் பற்றியே சூறாவின் மூன்றாம் பகுதி பேசுகிற‌து. குறிப்பாக, பிழையான தலைமைத்துவம் சமூகத்தையே வழிகெடுத்துவிட்டதாக சூறா கூறுகிற‌து. “நீங்கள் வண‌ங்கிக் கொண்டிருக்கும் கடவுள்களை தொடர்ந்தும் வண‌ங்குங்கள்” என்பதே அவர்கள‌து உபதேசமாக இருந்தது. இத்தலைவர்கள் ஏகத்துவம் கொண்டுவரும் மனிதர்கள் அனைவரும் சமமானவர்கள் எனும் செய்தி தமது சமூக அந்தஸ்த்தில் ஏற்படுத்தப்போகும் பாதிப்பைக் கவனமாகப் புரிந்திருந்தனர். அதனைப் பாதுகாத்து, அடிமை மனோநிலை கொண்ட மக்கள் கூட்டமொன்றை தமக்குக் கீழால் தொடர்ந்தும் வைத்துக் கொள்ளவே அவர்கள் ஆசைப்படுகின்றனர். ஏகத்துவத்துக்கெதிரான அவர்களது மறுப்பின் பின்னணி சிந்தனை சார்ந்தது என்பதைவிட உளநோய் சார்ந்தது என்பதே பொருத்தம்.

பொதுவாக தலைமைகளது மனோநிலை இதுவாகவே இருக்கிற‌து. த‌ம்மை ஏனைய மனிதர்களை விட மேலானவர்களாகக் கருதுவதுடன் பொதுமக்களை அடிமை மனோநிலையில் தொடர்ந்தும் வைத்துக் கொண்டு, சுகமான வாழ்வொன்றையே யாசிக்கின்றனர். தன்னை கேள்வி கேட்கும் மக்களை அதிகாரங்கள் மெதுமெதுவாக அந்நியப்படுத்தும். வழிகெடுக்கும் தலைமை நூஹ் நபி எதிர்கொண்ட மிக முக்கிய சவாலாக இருந்தது. இத்தலைமைகள் மக்களை தம் அதிகாரத்தின் கீழ் வைத்துக் கொள்ள‌ கையாண்ட உத்தி பாரம்பரியமாக பின்பற்றி வந்த கடவுளர்களை விட்டுவிட வேண்டாம் என்ற உபதேசமாகவே இருந்தது. பொதுவாக, தூது எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களுள் ஒன்றாகவும் இது உள்ளது. மூதாதையர்கள் பின்பற்றியது, பரம்பரை பரம்பரையாகப் பின்பற்றியது போன்ற வாதங்களால் தூதின் மையக் கருத்துகள் புறக்கணிக்கப்படுவதை அவதானிக்கலாம். 

சூறாவின் கடைசிப் பகுதி சிந்தனை மற்றும் நடத்தைப் பிறழ்வின் உச்ச கட்டத்தை அடைந்த சமூகத்தின் விடிவில் நிராசை அடைந்த நூஹ் நபி புதியதொரு பரம்பரையை உருவாக்குவதே தீர்வு என்ற முடிவுக்கு வருகிறார். வழிகேட்டில் மூழ்கியிருந்த சமூகம் தனது பரம்பரையையும் வழிகெடுத்துவிடும் எனக் கருதுகிறார். அடுத்த பரம்பரை மீது கொண்ட அன்பு காரணமாக தான் இவ்வள‌வு காலம் நேர்வழிக்கு கொண்டு வர பாடுபட்ட சமூகத்துக்கெதிராக கடுமையாகப் பிரார்த்திக்கிறார். 

The post ஸூரா நூஹ்: மையக்கருத்தினூடானதொரு புரிதல் first appeared on Rishard Najimudeen.

]]>
https://rishardnajmudeen.com/2024/10/20/%e0%ae%b8%e0%af%82%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%a8%e0%af%82%e0%ae%b9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%a9/feed/ 0
இஸ்லாமிய கலைகளில் சூழல் சார்ந்த உரையாடல் https://rishardnajmudeen.com/2024/10/16/%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25b2%25e0%25ae%25be%25e0%25ae%25ae%25e0%25ae%25bf%25e0%25ae%25af-%25e0%25ae%2595%25e0%25ae%25b2%25e0%25af%2588%25e0%25ae%2595%25e0%25ae%25b3%25e0%25ae%25bf%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%259a%25e0%25af%2582%25e0%25ae%25b4%25e0%25ae%25b2%25e0%25af%258d https://rishardnajmudeen.com/2024/10/16/%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d/#respond Wed, 16 Oct 2024 16:55:49 +0000 https://rishardnajimudeen.com/?p=8007 வரலாற்றில் முஸ்லிம் அறிஞர்கள் உருவாக்கிய தசவ்வுப், பிக்ஹ், உஸூலுல் பிக்ஹ், உலூமுல் குர்ஆன், ஹதீஸ் போன்ற கலைகளில் சூழல் பற்றிய கருத்தாக்கம் மிக விரிவாக ஆராயப்பட்டுள்ளன. அவை இஸ்லாமிய பாரம்பரியத்தில் சூழல் பாதுகாப்பு எந்தளவு தூரம் முக்கிய இடம் வகித்திருக்கிறது, எமது மூதாதையர்கள் அவ்விடயத்தில் எவ்வளவு கரிசணையுடன் நடந்துகொண்டுள்ளனர் என்பதை விளக்கப் போதுமானது. • சூழலும் தஸவ்வுபும் தஸவ்வுப் சிந்தனையை ‘படைப்பாளனுடன் உண்மையாக நடத்தலும் படைப்பினங்களுடன் பண்பாக நடத்தலும்’ என சிலர் வரைவிலக்கணப் படுத்துகின்றனர். இப்னுல் கையிம் [...]

The post இஸ்லாமிய கலைகளில் சூழல் சார்ந்த உரையாடல் first appeared on Rishard Najimudeen.

]]>

வரலாற்றில் முஸ்லிம் அறிஞர்கள் உருவாக்கிய தசவ்வுப், பிக்ஹ், உஸூலுல் பிக்ஹ், உலூமுல் குர்ஆன், ஹதீஸ் போன்ற கலைகளில் சூழல் பற்றிய கருத்தாக்கம் மிக விரிவாக ஆராயப்பட்டுள்ளன. அவை இஸ்லாமிய பாரம்பரியத்தில் சூழல் பாதுகாப்பு எந்தளவு தூரம் முக்கிய இடம் வகித்திருக்கிறது, எமது மூதாதையர்கள் அவ்விடயத்தில் எவ்வளவு கரிசணையுடன் நடந்துகொண்டுள்ளனர் என்பதை விளக்கப் போதுமானது.

• சூழலும் தஸவ்வுபும்

தஸவ்வுப் சிந்தனையை ‘படைப்பாளனுடன் உண்மையாக நடத்தலும் படைப்பினங்களுடன் பண்பாக நடத்தலும்’ என சிலர் வரைவிலக்கணப் படுத்துகின்றனர். இப்னுல் கையிம் கூறுகிறார்: ‘மார்க்கம் என்பது பண்பாடாக நடப்பது. யார் பண்பாடாக நடக்கிறாரோ அவர் மார்க்கத்தில் உயர்ந்த நிலையில் இருக்கிறார்’. படைப்பினங்களுடன் பண்பாக நடத்தல்என்பதில் மனிதன் தன்னை சூழ இருக்கும் தாவரங்களுடனும், விலங்குகளுடனும் வளிமண்டலம், நீர் போன்றவற்றுடனும் நல்ல முறையில் நடத்தல் முதன்மைப்பெறுகிறது. இஹ்சான் என்ற சொல்லையும் (ஹதீஸ் ஜிப்ரீல் இல் வரும் சொல்) தஸவ்வுப் துறை அறிஞர்கள்அதிகம் பயன்படுத்துகின்றனர். நல்லது செய்தல் என்பது சூழலையும் உள்ளடக்குகிறது என்பதுமிகத் தெளிவானது. அன்பு எனும் பண்பாடு மனிதனையும் சூழலையும் இணைக்கிறது எனஅவர்கள் கூறுவர். வானங்களும் பூமியும், அவற்றிலுள்ளவைகளும், சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், மலைகள், மரங்கள், கால்நடைகள், அதிக மனிதர்கள் அல்லாஹ்வை தூய்மைப்படுத்தி, சுஜூத் செய்துகொண்டிருக்கின்றன என அல்குரான் கூறுவதனூடாக மனிதன் பிரபஞ்ச உறவு அல்லாஹ்வின் அடிமை எனும் அடையாளத்தினூடாக வலியுறுத்தப்படுகிறது.  (பார்க்க சூரா ஹஜ் 18, இஸ்ராஃ 44). நபியவர்கள் தபூக் போரிலிருந்துமதீனா நோக்கி மீண்டு கொண்டிருந்தபோது உஹத் மலையைப் பார்த்து ‘உஹத், எம்மைவிரும்பும் ஒரு மலை. நாம் விரும்பும் ஒரு மலை’ என்று கூறி மனிதன் – சூழல் தொடர்பை விளக்குகிறார்கள். உஹத் மலையடிவாரத்தில் நபியவர்களுக்கு மிக விருப்பமான ஹம்ஸா (ரழி) மற்றும் 70 ஸஹாபிகள் மரணித்திரிந்தும் நபியவர்கள் அம்மலையைப் பார்த்து தனது அன்பைகூறியிருப்பது சுற்றுப் புறச்சூழல் – மனிதன் தொடர்பு அன்பினால் பிணைக்கப்படுகிறது என்பதை காட்டி நிற்கிறது.

• சூழலும் சட்டத்துறையும்

பிக்ஹ் எனப்படும் இஸ்லாமிய சட்டப்பகுதியிலும் முஸ்லிம் அறிஞர்கள் சூழலை தொடர்புப்டுத்தி பல இடங்களில் உரையாடல்களை நகர்த்தியிருக்கின்றனர். இஸ்லாத்தின் அடிப்படை வணக்கங்களான தொழுகை, நோன்பு, ஸகாத், ஹஜ் போன்றன சூழலுடன் மிக நெருங்கிய உறவைக் கொண்டன. தொழுகை நீர், சுத்தத்துடன் தொடர்புபடுகிறது. நோன்பு உணவுடனும் நுகர்வுப் பண்டங்களுடனும் தொடர்புபடுகிறது. ஸகாத் விலங்குகளுடனும் இன்னோரன்ன தாவர உற்பத்திகளுடனும் தொடர்புபடுகிறது. உப்பு உற்பத்தி, தேனி, மாணிக்கம் போன்றவற்றுக்கான ஸகாத் இன்று உரையாடப்படுகின்றது. ஹஜ் கடமையில் ஹரம் சூழல், வேட்டையாடல், மரங்களை வெட்டுதல் போன்றன உரையாடப்படுகின்றன. இஸ்லாமிய பிக்ஹில் தரிசு நிலங்களை உயிர்ப்பித்தல், பொதுசொத்துக்களான நீர், நெருப்பு, புல்வெளிகள் என்பவற்றை உடமையாக்கிக் கொள்ளல், போராட்டங்களின் போது சூழலைபாதுகாத்தல் பற்றிய வழிகாட்டல்க்ளை வழங்கள் போன்ற விவகாரங்கள் சட்டப் புத்தகத்தில் அதிகம் விவாதிக்கப்டுகின்றன.  

முஸ்லிம் அறிஞர்கள் முன்வைத்திருக்கும் பல சட்ட விதிகள் சூழல் பாதுகாப்புடன் இறுக்கமான தொடர்பை கொண்டுள்ளன. பின்வருவன அவற்றுள் சில: 

  • தீங்கு முடியுமான அளவு நீக்கப்படும்
  • ஒரு தீங்கு அதனை ஒத்ததொரு தீங்கால் நீக்கப்பட மாட்டாது
  • உயர்ந்ததொரு தீங்கை நீக்குவதற்காக தாழ்ந்ததொரு தீங்கு சகித்துக் கொள்ளப்படும்
  • கடுமையற்ற தீங்கு மூலம் கடுமையான தீங்கு நீக்கப்படலாம்
  • குறைந்த தீங்கு தேர்ந்தெடுக்கப்படும்

இது போன்ற சட்டவிதிகள் இன்று பல இஸ்லாமிய அறிஞர்களாலும் சூழல் சார்ந்த உரையாடல்களில் பிரயோகிக்கப்படுகின்றன. 

இஸ்லாமிய சட்டப்பகுதிகளில் குற்றங்களுக்கான தண்டனைகள் இரு வகைப்படுகின்றன. ஒன்று தண்டனைகள் வரையறுக்கப்பட்ட ‘ஹுதூத்’ தண்டனைகள். மற்றையது தண்டனைகள் வரையறுக்கப்படாத நாட்டின் தலைவர் தீர்மானிக்கும் ‘தஃஸீர்’ தண்டனைகள். சூழலைமாசுபடுத்தும், சீரழிக்கும் குற்றங்களுக்கன தண்டனையை இஸ்லாம் தஃஸீர் தண்டனைக்குள் கொண்டு வருவதாக அறிஞர்கள் கருதுகின்றனர். இன்று தோற்றம் பெற்றிருக்கும் பாரியமுதலீட்டு நிறுவனங்களும். பல்தேசிய கம்பனிகளும் சூழலுக்கு ஏற்படுத்தும் மாசு, தீங்கு பற்றியசரியான பார்வை இப்பின்னணியில் தோற்றம் பெறவேன்டியுள்ளது.

சூழலும் சட்டவாக்க முறைமையும் (உஸூலுல் பிக்ஹ்)

சட்டவாக்க முறைமையில் மகாசிதுஷ் ஷரீஆ மிக முதன்மையான பாடம். ஷரீஆவின் இலக்குகளை வகைப்படுத்தும் போது வாழ்க்கைக்கு இன்றியமையாதவையை குறிக்க’ழரூரிய்யா’ என்ற பதம் பயன்படுத்தப்படுகிறது. ‘அத்தியவசியமானவை’ எனலாம். மார்க்கம், உயிர், பரம்பரை, சொத்து, அறிவு ஆகிய ஐந்தையும் பாரம்பரிய இஸ்லாமிய அறிஞர்கள் ழரூரிய்யாத் இனுள் அடக்குகின்றனர். இவர்கள் சூழல் பாதுகாப்பை உள்ளடக்கவில்லை. எனினும் மேற்கூறிய ஐந்தும் சூழலுடன் தொடர்புபடுகின்றன என்பதை ஏற்பதுடன் தொடடர்புபடுத்தி விளக்கியும் வந்துள்ளனர். உதாரணமாக உயிரைப் பாதுகாத்தல் எனும்பகுதியில் வளி மண்டலம் மாசடைதல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது, மனிதனை மெதுவாக கொல்கிறது என்கின்றனர். மாற்றமாக, நவீன கால அறிஞர்கள் சூழல் பாதுகாப்பை மகாசிதுஷ் ஷரீஆவின் ழரூரிய்யாத் பகுதியில் ஐந்துடன் ஆறாவதாக உள்ளடக்க வேண்டும் எனவாதிடுகின்றனர். சூழலை மாசுறச் செய்வது மகாசிதுஷ் ஷரீஆவின் ழரூரிய்யாத் பகுதிகளையே கேள்விக்குறியாக்குகிறது என்பதும் அறிஞர்களது கருத்தாகும்.  

சூழலும் அல்குரான், சுன்னா சார்ந்த கலைகளும்

அல்குரான் சார்ந்த உலூமுல் குரான் கலையில் சூராக்களது பெயர்கள் சார்ந்ததலைப் போன்றிருக்கிறது. அல்குரானது தலைப்புக்கள் விலங்குகள், தாவரங்கள், பிரபஞ்சப்பொருட்களுடன் தொடர்புடையதாகவே அமைக்கப்பட்டிருக்கின்றன. மாடு, கால்நடைகள், யானை, ஓடும் குதிரைகள், தேனி, எறும்பு, சிலந்தி, தீன் எனும் தாவரம், இரும்பு போன்ற சூழல்சார்ந்த தலைப்புக்களை கூறுவதுடன் சூறாக்களின் இடையிலும் சூழலியல் உரையாடல்கள் நிறைந்து காணப்படுகின்றன. சூழலில் மிக அற்பமாக கருதப்படும் ஈ பற்றியும் அல்குரான்பேசுகிறது. சூழல் நிகழ்வுகளான மழை, புயல், இடி, சூரிய ஒட்டம் என்பவற்றுடன் இரவு, பகல்மாறி மாறி வரல், அதிகாலை போன்ற விடயங்களையும் பேசுகிறது. இயற்கை காட்சிகளையும், உலக நடப்புகளையும் அல்குரான் பல இடங்களில் காட்சிப்படுத்துகின்றது. 

ஹதீஸ் தொகுப்புக்களின் உள்ளடக்கங்களது தலைப்புகள் ஹதீஸ்களும் சூழலுடன் இறுக்கமான பிணைப்பை கொண்டிருந்தன என்பதற்கான ஆதாரமாய் அமைகின்றன. கிதாபுத்தஹாரா, கிதாபுல் முசாகாத், கிதாபுல் முஸாரஆ, கிதாபுல் அத் இமா, கிதாபுத் திப், கிதாபுல்அதப்… போன்ற தலைப்புகள் சூழல் பாதுகாப்பு தலைப்புடன் தொடர்புபடுகின்றன. நபியவர்களது வாழ்வு பற்றி பேசும் சீரா புத்தகங்கள் கூட நிகழ்வுகளை சூழல் பாதுகாப்புடன் இணைத்துப் பார்க்கின்றன. உதாரணமாக நபியவர்கள் சிறுவயதில் ஹலீமாவுடன் கிராமப்புறசூழலுக்கு அனுப்பப்ப்டல் கிராமப்புற வாழ்வின் தூய்மையான சூழலையும் அது குழந்தைகள் உள்ளத்திலும் மனோநிலையிலும் ஏற்படுத்தும் மாற்றத்தையும் கூறுவதாக உள்ளது எனஅறிஞர்கள் விளக்குவர்.

சூழல் பாதுகாப்பு இன்றைய உலக ஒழுங்கில் ஓர் சவால் மிக்க பணியாக கருதப்படுகின்றது. பொருளதாரமயமான, இலாபமீட்டலை இலக்காகக் கொண்ட உலக ஒழுங்கில் காடுகள் அழிக்கப்படுகின்றன, நீர் மாசுபடுத்தப்படுகின்றது, வளி மண்டலம் எல்லை மீறிய புகைகாரணமாக மாசடைகிறது, எண்ணெய், கழிவுகள் நீர் நிலைகளுக்கு  அனுப்பப்படுகின்றது. இவையெல்லாம் இன்றிருக்கும் மிக முக்கிய சவால்கள். இப்பின்னணியில் சூழல் பாதுகாப்பு நான்கு வகைகளில் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும் என அப்துல் மஜீத் நஜ்ஜார் கூறுகிறார்:   

  1. சூழல் அழிவுறாமல் பாதுகாத்தல்
  2. சூழல் மாசுபடாது பாதுகாத்தல்
  3. மிகை நுகர்வை விட்டும் சூழலை பாதுகாத்தல்
  4. அபிவிருத்தி செய்வதன் மூலம் சூழலை பாதுகாத்தல்

மேலே சுருக்கமாக விளக்கியதிலிருந்து சூழல் சார்ந்த உரையாடலில் ஒரு முஸ்லிம் ஈடுபடுவதுகட்டாயமானது என்பது புரிகிறது. இன்றிருக்கும் சூழல் பாதுகாப்பு சார் நிறுவனங்களுடனும் அமைப்புகளுடனும் இணைந்து அவன் பணியாற்றுவது மார்க்க கடமையாக அமைகிறது எனலாம்.

The post இஸ்லாமிய கலைகளில் சூழல் சார்ந்த உரையாடல் first appeared on Rishard Najimudeen.

]]>
https://rishardnajmudeen.com/2024/10/16/%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%b2%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%b4%e0%ae%b2%e0%af%8d/feed/ 0
​​தூய்மைவாத கருத்தாக்கத்தை கேள்விக்குட்படுத்தும் காலித் அபூ பழ்ல் உடைய சிந்தனைகள் https://rishardnajmudeen.com/2024/10/16/%e0%ae%a4%e0%af%82%e0%ae%af%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%25a4%25e0%25af%2582%25e0%25ae%25af%25e0%25af%258d%25e0%25ae%25ae%25e0%25af%2588%25e0%25ae%25b5%25e0%25ae%25be%25e0%25ae%25a4-%25e0%25ae%2595%25e0%25ae%25b0%25e0%25af%2581%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25be%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25a4 https://rishardnajmudeen.com/2024/10/16/%e0%ae%a4%e0%af%82%e0%ae%af%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4/#respond Wed, 16 Oct 2024 15:01:11 +0000 https://rishardnajimudeen.com/?p=7990 முஸ்லிம்களின் சிந்தனை முறைமைகளை வகைப்படுத்துவதில் நவீன இஸ்லாமிய அறிஞர்கள் வித்தியாசமான சொல்லாடல்களைப் பயன்படுத்துகின்றனர். அம்முறைகளில் ‘நவீன சலபிய சிந்தனை முறைமை’ பலரதும் கவனத்தை பெற்றிருக்கின்றது. இப்போக்கு கொண்டோரை ‘வாக்கியவாத அணுகுமுறை’ (ழாஹிரிய்யா) கொண்டவர்கள் என சிலர்அடையாளப்படுத்துகின்றனர். அச்சிந்தனை முறைமை பல படித்தரங்களை கொண்டுள்ளது. அவர்களுள் கடும்போக்குவாத மற்றும்  தீவிர சிந்தனை முகாம்களும் உள்ளன. அவற்றை சிலர்அடிப்படைவாதிகள் என்பர். இன்னும் சிலர் ஆயுத பயங்கரவாதிகள் என்பர். சிலர் ரெடிகள்வாதிகள் என்பர். சிலர் மத வெறியர்கள் என்பர். வித்தியாசமான சொல்லாடல்களால் [...]

The post ​​தூய்மைவாத கருத்தாக்கத்தை கேள்விக்குட்படுத்தும் காலித் அபூ பழ்ல் உடைய சிந்தனைகள் first appeared on Rishard Najimudeen.

]]>

முஸ்லிம்களின் சிந்தனை முறைமைகளை வகைப்படுத்துவதில் நவீன இஸ்லாமிய அறிஞர்கள் வித்தியாசமான சொல்லாடல்களைப் பயன்படுத்துகின்றனர். அம்முறைகளில் ‘நவீன சலபிய சிந்தனை முறைமை’ பலரதும் கவனத்தை பெற்றிருக்கின்றது. இப்போக்கு கொண்டோரை ‘வாக்கியவாத அணுகுமுறை’ (ழாஹிரிய்யா) கொண்டவர்கள் என சிலர்அடையாளப்படுத்துகின்றனர். அச்சிந்தனை முறைமை பல படித்தரங்களை கொண்டுள்ளது. அவர்களுள் கடும்போக்குவாத மற்றும்  தீவிர சிந்தனை முகாம்களும் உள்ளன. அவற்றை சிலர்அடிப்படைவாதிகள் என்பர். இன்னும் சிலர் ஆயுத பயங்கரவாதிகள் என்பர். சிலர் ரெடிகள்வாதிகள் என்பர். சிலர் மத வெறியர்கள் என்பர். வித்தியாசமான சொல்லாடல்களால் அடையாளப்படுத்தப்படும் இத்திவிரவாத சிந்தனை முகாமை காலித் அபூ பழ்ல் “தூய்மைவாதசிந்தனை போக்குகொண்டோர்” (Puritans) என அழைக்கிறார்.

தூய்மைவாத சிந்தனை போக்குகொண்டோர் சார்ந்த உரையாடலை முன்னெடுத்தவர்களுள் பேராசிரியர் காலித் அபூ பழ்ல் முக்கியமானவர். அச்சிந்தனை முறைமை பற்றிய அவரதுகருத்துக்களை பின்வரும் நான்கு தலைப்புக்களில் இக்கட்டுரை உரையாட விரும்புகிறது:

  1. தூய்மைவாத சிந்தனை போக்குகொண்டோரது மனோநிலையும் காலித் அபூ பழ்லுடையவிமர்சனமும்
  2. தூய்மைவாத சிந்தனை போக்குகொண்டோர் இஸ்லாமிய சட்டப்பகுதிய அணுகுவதிலுள்ள சிக்கல்கள்
  3. ஷரீஆவின் இலக்குகளினூடான தூய்மைவாத சிந்தனை போக்குகொண்டோரது விளக்கங்களை கேள்விக்குற்படுத்தும் காலிதுடைய போக்கு
  4. பெண்கள் உரிமை, மதங்களுக்கிடையான கலந்துரையாடல், ஜனநாயகம் போன்ற கருத்தாக்கங்களில் காலிதின் சிந்தனைகள்

தூய்மைவாத சிந்தனை போக்குகொண்டோர் என்ற சொல்லாடலை தனது எழுத்துக்களில் பிரயோகிக்கும் பேராசிரியர் காலித் குவைத் நாட்டை பிறப்பிடமாகக் கொண்டவர். UCLA சட்டக்கல்லூரியில் பேராசிரியராக கடமையாற்றும் காலித், அங்கு சர்வதேச மனித உரிமைகள், இஸ்லாமிய சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம், இஸ்லாமும் மனித உரிமையும், அரசியல் குற்றங்களும் சட்டவமைப்பும் போன்ற பாடங்களில் விரிவுரையாற்றி வருகிறார். அதேநேரம் மனித உரிமைக்கான சமூக செயற்பாட்டாளராகவும் அமெரிக்காவில் இயங்கிவருகிறார். நவீன இஸ்லாமிய சிந்தனையை வளர்த்தெடுப்பதிலும் அதனை சர்வதேசஉரையாடலின் மையநீரோட்டத்திற்கு கொண்டு வருவதற்கும் உழைத்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தூய்மைவாத சிந்தனை போக்குகொண்டோரது மனோநிலையும் காலித் அபூ பழ்லுடைய விமர்சனமும்

பேராசிரியர் காலித் தனது எழுத்துக்களில் தீவிரவாத சிந்தனைகளை முன்வைப்பவர்களதும் கடும்போக்குவாத சிந்தனைகளை முன்வைப்பவர்களதும் மனோநிலையை ‘வெளித்தள்ளும்மனோநிலை’ (Exclusivist), ‘சகிப்புத்தன்மையற்ற மனோநிலை’ (Intolerant) என்று வர்ணிப்பார். அம்மனோநிலை இஸ்லாமிய தூதுடன் முரண்படுவதாக வாதாடும் காலித் அம்மனோ நிலைமுஸ்லிம் உலகில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் கருதுகிறார். 

தூய்மைவாத இயக்கங்கள் தமது செயற்பாடுகளை ‘அதிகாரம் பற்றிய கருத்தியல்’ (Theology of Power) கொண்டு நியாயம் காண்கின்றன. காலணித்துவம், அதன் மோசமான விளைவுகள் மீதான கடுமையான விமர்சனம் கொண்டிருக்கும் இவ்வமைப்புகள், பிரதியீடான ஓர் அதிகாரதலைமைத்துவ கட்டமைப்பை காட்ட முயற்சிக்கின்றன. மேற்கையும் அதன்நிறுவனங்களையும் எதிர்த்தல் என்பதனூடாக தமது அதிகாரத்தை முஸ்லிம்கள் மத்தியில்வேரூன்றச் செய்வதுடன் மேற்குக்கான பிரதியீட்டை தமது தலைமைத்துவம் முன்வைப்பதாகவாதாடுகின்றனர். 9/11 பென்டகன் தாக்குதல், தாலிபான்களால் மேற்கொள்ளப்பட்ட புத்தசிலை தகர்ப்பு போன்றன இப்பின்னணியை கொண்டன. எக்கட்டத்திலும் மேற்குடன் உடன்பட்டுச் செல்ல முடியாது என வாதாடும் அவ்வியக்கங்கள் மேற்கு & இஸ்லாம் என்ற முரண்பாட்டுக் கோட்பாட்டுடனே அனைத்தையும் அணுகுகின்றன.  

இச்சிந்தனை முறைமையை காலித் அபூ பழ்ல் மறுக்கிறார். ‘நல்ல இலக்குகள் கெட்டவழிமுறைகளை நியாயப்படுத்தாது’ என்ற இஸ்லாமிய அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டவிதியினூடாக அவர்களது வாதங்களை கேள்விக்குட்படுத்துகிறார். அநியாயமாக கொலை செய்தலும், பூமியில் அநியாயம், அட்டூழியம் செய்வதை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது எனவும் கருதுகிறார். அவர்களது மனோநிலை இறைதூதரது சீராவுக்கும் முரண்படுகிறது எனவும் கருதுகிறார். அவர்களது சிந்தனை முறைமை இஸ்லாம் வலியுறுத்திய அடிப்படைபெறுமானங்களுக்கு முரண்படுவதாக கருதும் அவர், தூய்மைவாத சிந்தனை போக்குகொண்டோர் இஸ்லாத்தின் பண்பாட்டு, விழுமிய அடிப்படைகளுக்கு முரண் படாததொரு’அரசியல் முறைமை’ (Political methodology) ஒன்றை கைக்கொள்ள வேண்டும், அவர்களது அதிகாரம் பற்றிய கருத்தியலை கைவிட வேண்டும் எனவும் அழைப்பு விடுக்கிறார். 

தூய்மைவாத சிந்தனை போக்குகொண்டோர் இஸ்லாமிய சட்டப்பகுதிய அணுகுவதிலுள்ள சிக்கல்கள்

தூய்மைவாத சிந்தனை போக்குகொண்டோர் தமது கடும்போக்கு சிந்தனைகளுக்கான நியாயங்களை முன்வைக்க அல்குரான், சுன்னாவிலிருந்து ஆதாரங்களை காட்டுகின்றனர். அவர்களது ஆதாரம் முன்வைக்கும் இப்போக்கு ‘ஒழுங்குமுறையற்றது’ (Unsystematic) மர்றும் ‘சந்தர்ப்பவாதம் கொண்டது’ (Opportunistic) என காலித் வாதாடுகிறார். அல்குரான், சுன்னாமுதல் மூலதாரம் என்பதில் எந்த முஸ்லிமும் கருத்து வேறுபாடு கொள்வதில்லை. ஆனால்அவற்றை அணூகும் முறைமையில் வித்தியாசமான போக்குகள் காணப்படுகின்றன எனபதை ஏற்கும் காலித், தூய்மைவாத சிந்தனை போக்கு கொண்டோர் அம்மூலாதாரங்களை அணுகுவதில் எவ்வித விஞ்ஞானபூர்வமான முறைமையையும் கைக்கொள்வதில்லை எனவிமர்சிக்கிறார். அவர்களுக்கென்று ஒரு முறைமை இல்லை, அவர்கள் தமது முன்முடிவுகளுக்கு ஏற்ப அக்கருத்தை அல்குரான், சுன்னாவினூடாக பலப்படுத்த விரும்புகின்றனர். எதிரியை தாக்குவதற்கும் தமது ஏற்கனவே எடுக்கப்பட்ட கருத்தை பலப்படுத்தவுமே மூலாதாரங்களை கைக்கொள்கின்றனர் எனவும் காலித் விமர்சிக்கிறார். ஆதாரங்கள் மீதான அவர்களுடைய அணுகுமுறை அடுத்தவனை தாக்குவதாகவே இருக்கும். அவர்களது ஒட்டுமொத்த செயற்பாடுகளும், ஆரம்பம் முதல் இறுதி வரை ஆதாரங்களை வீசி தாக்குதல் என்பதாகவேஇருக்கும் எனவும் கருதுகிறார்.   

ஆதாரங்களை அணுகுவதில் அவர்களிடமிருக்கும் சிக்கல்களை விளக்க அவர்கள் பிரயோகிக்கும் ‘நஸ்க்’ (Abrogation) என்ற கருத்தாக்கமே போதுமானதாக இருக்கும். தமது கருத்துக்கு முரணாக அல்குரான் வசனம் அல்லது ஹதீஸ் வரும் போது அவற்றை மன்ஸூஹ் செய்யப்பட்ட வசனம் அல்லது ஹதீஸ் எனக் கூறுகின்றனர். அவர்கள் நாஸிஹ், மன்ஸூஹ்கோட்பாட்டை பக்கச்சார்பாக அணுகுகின்றனர். உதாரணமாக சூரா ஆல இம்ரானின் 85ம் வசனத்தை ஆதாரம் காட்டி அல்குரானில் வரும் அமைதி, சமாதானம், போர் நிறுத்தம், வன்முறைமை தவிர்த்தல், இஸ்லாத்தை ஏற்காதவர்களோடு நல்ல முறையில் நடத்தல் பற்றிவரும் வசனங்களை மன்ஸூஹ் செய்யப்பட்டதாக வாதாடுகின்றனர். அவர்கள் தூது மீதான ஒட்டுமொத்த பார்வையை செலுத்தாமல் தமது ஆதங்கள், ஏமாற்றம், அபிலாசைகளை இறைவசனங்களில் வாசிக்கவும் விளக்கம் கொடுக்கவும் முனைகின்றனர் என காலித் அபூ பழ்ல்கருதுகிறார்.    

அல்குரான், சுன்னா மீதான அவர்களது விளக்கத்தில் இன்னோர் சிக்கலும் இருக்கின்றது. அவர்கள் தமது விளக்கத்தை பூஜிக்கின்றனர். அடுத்தவர்களது விளக்கங்களை பிழையாகக்கருதுவதுடன் அவற்றை எக்கட்டத்திலும் கலந்துரையாட விரும்புவதில்லை. தூய்மைவாதசிந்தனை போக்கு கொன்டோர் மூலாதாரங்கள் மீதான தமது வியாக்கியானத்துக்கு இறைவனின் வார்த்தை (Word of God) அளவுக்கு அந்தஸ்த்து கொடுக்கின்றனர். அதனூடாக ‘எதேச்சதிகாரபோக்கு’ (Authoritarian tendency) ஒன்றை கட்டமைக்க விரும்புகின்றனர். இது வரலாற்றில் இஸ்லாமிய அறிஞர்கள் கட்டி, உருவாக்கிய அறிவுப்பாரம்பரியத்துக்கு முற்றிலும் முரணானபோக்கு கொண்டது என காலித் வாதாடுகிறார். வரலாற்றில் தோன்றிய புத்தக தொகுப்புகள் எண்ணிலடங்காதவை. ஒன்றுக்கொன்று முரன்பட்ட சிந்தனைகள் ஏக காலத்தில் தோற்றம்பெற்றன. ஒருவரை ஒருவர் அங்கீகரித்தனர். முரன்பட்டவர்களோடு உரையாடினர். கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர். யாரும் தனது புரிதலை முற்றுமுழுதாக சரியானது எனக்கூறிக்கொள்ளவில்லை. அடுத்தவரது கருத்து, வாசிப்பு, அணுகுமுறை முற்றிலும் பிழையானதுஎன ஒதுக்கித் தள்ளிவிடவில்லை. மாற்றமாக அவர்கள் அறிவடக்கத்தை (Intellectual Humility)கைக்கொண்டனர். அவர்கள் தமது சிந்தனை முன்வைப்பின் இறுதியில் ‘அல்லாஹ்வே மிகச்சரியானதை அறிந்தவன்’ என எழுதும் பழக்கம் கொண்டிருந்தனர். அடுத்தவர்களை ஏற்கும் இவ்வறிவடக்க பாரம்பரியத்துக்கு முரனான போக்கையே தூய்மைவாத கொள்கைகொண்டோர் பின்பற்றுகின்றனர் என காலித் கருதுகிறார்.

வரலாற்றில் இஸ்லாமிய அறிஞர்கள் பின்பற்றி வந்த அடுத்தவர்களை அங்கீகரிக்கும்பன்மைத்துவ சிந்தனைய அவர்கள் உடைத்தெரிய முனைகின்றனர், இஜ்திகாதில் சரியானமுடிவுக்கு இரு நன்மைகளும் பிழையான முடிவுக்கு ஒரு நன்மையும் வழங்கப்படும் எனும்கருத்துக்கு அவர்கள் பிழையான நடைமுறை விளக்கம் வழங்குகின்றனர் எனவும் அவர்கருதுகிறார்.

இறைவனின் பெயரால் பேசுவதற்கு (Speak in the name of God) பேராசிரியர் காலித் ஐந்து நிபந்தனைகளை முன்வைக்கிறார். நேர்மை (Honesty), தொடர் முயற்சி (Diligence), முழுமையான புரிதல் (Comprehensiveness), நியாயத்தன்மை (Reasonableness), சுய கட்டுப்பாடு (Self-restrain) ஆகிய ஐந்து பண்புகளையும்  இறைவனின் வார்த்தைகளுக்கு வியாக்யானம் கொடுக்க முனைபவர் பெற்றிருப்பது அவசியமானது. இறைவனின் பெயரால் பேச முனைபவர் கருத்துக்களை திரிபுபடுத்தாத வகையிலும் கருத்துக்களை ஏற்கனவே எடுத்த தனது முடிவுகளுக்கு ஏற்ப வலைக்காத வகையிலும் நியாயமானவராக இருக்க வேன்டும். உண்மையை கண்டுபிடிக்கும் இப்பயணத்தில் தன் முழுமையான சக்தியையும் அறிவாற்றலையும் பிரயோகிக்கக் கூடிய தொடர்முயற்சி கொண்டவராக இருக்க வேண்டும். குறிப்பிட்டதொரு விடயதானத்தில் அது பற்றிய அல்குரான், சுன்னாவுடைய எல்லா மூல வாக்கியங்களையும் திரட்டி, எந்தவொரு வாக்கியமும் புறக்கணிக்கப்படாத விதத்தில் முழுமையான புரிதலைகொண்டதாக விளக்கம் இருக்க வேண்டும். சில வாக்கியங்களை எடுத்து, இன்னும் சிலதை புறக்கணிக்கும் போக்கு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. முரண்பாடாக தோன்றும் வாக்கியங்களை விஞ்ஞானபூர்வமாக விளக்குவது அவசியம். விளக்கங்களுக்கு இஸ்லாமிய சட்டவாக்கமுறைமையில் நியாயத்தன்மை காணப்பட வேண்டும்.  இறுதியாக தான் அடையும் முடிவு இறைவன் கூறியது என உறுதியாக யாராலும் கூறிவிட முடியாது. பிழையாக வியாக்கியானம் கொடுப்பதற்கான சாத்தியப்பாடுகள் இருக்கின்றன என்பதை உணர்ந்து, சுயகட்டுப்பாட்டுடன் ‘இறைவனே மிகச் சரியானதை அறிகிறான்’ என்ற வார்த்தைகளுடன் முடிவுக்கு வருவதே பொறுத்தமானது.  இவ் ஐந்து நிபந்தனைகளில் ஏதாவது ஒன்று புறக்கணிக்கப்படும் போது அங்கு ‘வியாக்யான சர்வாதிகாரவாதம்’ (Interpretive Authoritarianism) தோற்றம் பெறுகிறது.

ஷரீஆவின் இலக்குகளினூடான தூய்மைவாத சிந்தனை போக்கு கொண்டோரது விளக்கங்களை கேள்விக்குற்படுத்தும் காலிதுடைய போக்கு

இஸ்லாமிய அறிஞன் ‘ஷரீஆவின் அதி உயர் இலக்குகள்’ (Higher objectives of Shariah) எனும் சட்ட்முறைமையில் ஆழ்ந்த பரீட்சயம் கொண்டவராக இருக்க வேண்டும் என காலித்கருதுகிறார். அவ் ஆழ்ந்த பரீட்சயம் அல்குரானிய தூதின் ஒட்டுமொத்த கருத்துடன் ஒத்துச்செல்வதற்கும் முரண்படாது பயணிப்பதற்கும் உதவுவதாக அமையும் என அபிப்பிராயப்படுகிறார். பேராசிரியர் காலித் அபூ பழ்ல் மகாசிதுஷ் ஷரீஆவை வித்தியாசமான மூன்று தளங்களில் பிரயோகிக்கிறார்:

  1. தனிமனித, சமூக ‘நலன்கள்’ (Theory of Interests) எனும் கோட்பாட்டை வலியுருத்துவதுடன் அக்கோட்பாட்டின் பின்னணியில் மனித உரிமை சார்ந்த உரையாடலை நகர்த்திச் செல்லல். இஸ்லாமிய அறிஞர்கள் முன்வைத்திருக்கும் மார்க்கம், வாழ்வு, அறிவு, பரம்பரை, மானம், சொத்து ஆகிய 6 ஷரீஆவின் இலக்குகளையும் மனித உரிமை கலந்துரையாடலின் ஆரம்ப எட்டாக அவர் கருதுகிறார். எனினும் முஸ்லிம் சமூகம் அவற்றை இன்னும்  வள்ர்த்தெடுக்க வேண்டியுள்ளது. நவீன காலத்துக்கு ஏற்ற விதத்தில் இஸ்லாமிய அடிப்படை பெறுமானங்களினூடாக மனித உரிமைகளை பாதுகாக்கும் சட்டகமொன்று அவர்களால் உருவாக்கப்பட வேண்டிய தேவை உள்ளதாக வலியுருத்திக் கூறுகிறார்.  
  2. ஷரீஆவின் அதி உயர் இலக்குகளில் புதிய சில பெறுமானங்களை இணைத்தல். பாரம்பரிய இஸ்லாமிய அறிஞர்கள் முன்வைத்திருக்கும் ஆறு அடிப்படை விடயஙகளுடன் இன்னும் சில பெறுமானங்கள் இணைக்கப்பட வேண்டும் என்றகருத்தை காலித் பல இடங்களில் வலியுருத்தி வருவதுடன், அவை மனிததொடர்பாடலில் கருத்திற்கொள்ளப்பட வேண்டும் எனவும் வாதாடுகிறார். சமத்துவம், நீதி ஆகிய இரு பெறுமானங்களையும் அடைய முஸ்லிம் சமூகம் முயற்சி செய்யவேண்டும். அதேபோல அடுத்த சமூகங்களுக்குள்ளாலும் அவ்விரு பெறுமானங்களை வளர்த்தெடுக்க முயற்சிக்க வேண்டும் எனவும் கூறுகிறார்.
  3. மார்க்க, பண்பாட்டு இலக்குகளை அடைதல். ஏற்கனவே கூறிய ஷரீஆவின் அதி உயர் இலக்குகளுடன் சேர்த்து ‘இறைவனை சார்ந்திருத்தல்’ (Godliness) எனும் கருத்தாக்கத்தையும் பேராசிரியர் காலித் அதிகம் வலியுருத்துகிறார். ‘இறைவனை சார்ந்திருத்தல் என்பது இறைவனின் பண்புகளை எடுத்து நடத்தல், மனித வாழ்வில் அவற்றுக்கு நடைமுறை அர்த்தம் கொடுத்தல் என விளக்குகிறார். கருணை (Mercy), நீதி (Justice), நற்குணம் (Goodness), தயவு (Compassion), அழகு (Beauty) போன்றபண்புகள் மிக முக்கிய இலக்குகளாக மாற்றமுற வேன்டும் எனக் கருதுகிறார். அல்லாஹ்வை ஏற்ற ஒருவனது இவ்வாழ்வின் இறுதி இலக்கு இறைவனது பண்புகளைஅணிகலனாகக் கொள்வது, பின் அடுத்தவர்களுக்கு எத்திவைப்பது, பின் நல்லவிடயங்களுக்கு இணைந்து பணியாற்றலும் தீய விடயங்களில் தவிர்ந்திருந்து எதிர்த்தல், அதாவது பூமியை சீரழிப்பதை எதிர்த்தல் என மேலும் விளக்குகிறார். சமத்துவமின்மை, அநீதி, அடக்குமுறை, பெண் வெறுப்பு போன்ற இஸ்லாமிய விழுமியங்களுக்கு முரணான விதத்தில் அல்குரானை, சுன்னாவை விளக்க முட்படும் வியாக்கியானங்களை நிராகரிக்கும்படி பேராசிரியர் காலித் அழைப்புவிடுக்கிறார்.

இவ்வைகயாக மூன்று தளங்களில் ஷரீஆவின் அதி உயர் இலக்குகளை வரையும் பேராசிரியர்காலித்,  அப்பின்னணியில்  பெண்கள், ஜனநாயகம், சகோதர சமூகத்தவர்கலுடனான உரையாடல் போன்ற இன்னும் பல தலைப்புக்களில் தூய்மைவாத சிந்தனை போக்குகொண்டோரது நிலைப்பாடுகளை மிக விரிவான உரையாடல்களினூடாக கேள்விக்குட்படுத்துகிறார். 

பெண்கள் உரிமை, மதங்களுக்கிடையான கலந்துரையாடல், ஜனநாயகம் போன்ற கருத்தாக்கங்களில் காலிதின் சிந்தனைகள்

நீதி, சமத்துவம் போன்ற இஸ்லாம் வலியுறுத்தும் அடிப்படை பெறுமானங்களின் அல்லது இலக்குகளின் பின்னணியிலேயே பேராசிரியர் காலித் பெண்கள், மதங்களுக்கிடையான கலந்துரையாடல் போன்ற விவகாரங்களை அணுகுகிறார். இம்முறைமை தூய்மைவாத சிந்தனை போக்குக்கு முற்றிலும் முரனானது. நீதி, சமத்துவம் போன்ற இலக்குகளைஅடையாத சட்ட தீர்ப்புகளை மீள்வாசிப்புக்கு உட்படுத்த வேண்டும் என்பது காலிதுடையகருத்து. வலிமுறைகள் மாற்றமுரலாம், இலக்குகள் மாற்றமுறாதவை என்ற ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தின் அடியாக பல சட்டப்பிரச்சினைகளை மீளாய்வு செய்கிறார். வரலாற்று மாதிரியில் (Historical model) ஒட்டிக் கொண்டிருப்பது இஸ்லாம் முன்வைத்த இலக்குகளுக்கு முரனான சட்டத்தீர்ப்பை எடுக்க வழிவகுப்பதாக அமையலாம் என்பதால் இலக்குகளை முதன்மைப்படுத்தி அவற்றை அடையும் புதிய வழிமுறைகளை நோக்கி நகரவேண்டும் என்பது அவரது ஆழமான நம்பிக்கை. உதாரணமாக வாரிசுரிமை சட்டத்தில்பெண்களுக்கு பாதி சொத்து கொடுப்பதை மிக விரிவாக உரையாடுகிறார். இறை தூதரது சூழலில் பெண் பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடாதவளாகவும் ஆணில் முழுமையாக தங்கியிருப்பவளாகவும் இருந்தாள். அக்கட்டத்தில் இரண்டுக்கு ஒன்று என்ற சட்டம் நீதியைஅடிப்படையாகக் கொண்டிருந்தது. எனினும் நவீன கால ஒழுங்கில் ஆண், பெண் இருசாராரும் தொழில் முயற்சிகளில் ஈடுபடும் போது, பெண் ஆணில் தங்கியிருக்காத பொருளாதார ஒழுங்கில் நீதியை மையமாக வைத்து சொத்துரிமை வகுக்கப்பட வேண்டும்என்ற கருத்தை அவர் வலியுருத்துகிறார். பெண்கள் சாட்சி, மணமுறிவுக்கான பெண்களுக்கான அவகாசம் போன்ற சட்டவிவகாரங்களில் பாரம்பரிய சட்டத்தீர்ப்பை மீள்வாசிக்க வேண்டும்எனவும் அவர் வலியுறுத்திக் கூறுகிறார்.     

சவூதி அரேபிய அறிஞர்களது பெண்கள் சார்ந்த சட்டதீர்ப்புகள் பெண்களுக்கு மிகப்பெரும் அநீதியாகவும் அவர்களது உரிமைகளை புறக்கணிப்பதாகவும் அமைந்துள்ளதாக விமர்சிக்கிறார். பெண்கள் வாகனமோட்டுவது, கப்ருகளை தரிசிக்க செல்வது மஹ்ரமில்லாதவரோடு தனித்திருக்க வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுப்பதாகவும். ஆண்-பெண்கலப்புக்கு காரணமாக அமைந்து விடுவதாகவும் பித்னாக்கு வழிவகுப்பதாகவும் அவர்கள்காரணம் கூறுகின்றனர். ஆண்-பெண் இரு சாராராலும் தோற்றம்பெறும் ஓர் நிலைமைக்கு ஏன்பெண் மாத்திரம் தனது உரிமையை விட்டுக் கொடுக்க வேண்டும் என்பது பேராசிரியர்காலிதுடைய கேள்வியாக அமைகிறது. அவர்களது தீர்ப்புக்கள் பெண்ணுக்கு அநீதியாக அமைகின்றன எனவும் வாதாடுகிறார். அவளது அடிப்படை உரிமைகளை மீறுவதாகவும் குற்றம் சாட்டுகிறார்.  

முஸ்லிம்களது சகோதரத்துவ சமூகங்களுடனான உறவில் தூய்மைவாத சிந்தனைகொண்டோர் உலகை இஸ்லாமிய நிலம், குப்ர் நிலம் என பிரிக்கும் போக்கை காலித் அபூபழ்ல் பிழை காண்கிறார். இப்பிரிப்பு தூய்மைவாத சிந்தனை முறைமை தோற்றம் பெறுவதற்கும் அவர்களது சிந்தனைக்கான ஆதாரமாக உருவாவதற்கும் காரணமாய் அமைந்தது. முஸ்லிமல்லாதவர்களை எதிரிகளாக கட்டமைத்து, அவர்களை தாக்கும் மனோநிலைக்கு இப்பிரிப்பு முறைமை அவர்களை இட்டுச் சென்றது. இது அல்குரானின் பிரிப்பல்ல. மாற்றமாக ஒரு கட்டத்தில் தோன்றிய வரலாற்றுச் சூழ்நிலையில் (Historical circumstance) தோற்றம்பெற்ற ஓர் பிரிப்பு என அவர் வாதாடுகிறார். அல்குரானது கருத்தில் சமாதானமே அடிப்படை, போர் சுமூகமான சமூக இயக்கத்தை சீர்குழைக்கக்கூடியது  எனக் கருதும் காலித் அபூ பழ்ல், போராட்டம் இறைவனது படைப்புக்களது ‘அழகு’ (Beauty) எனும் மிக முக்கிய பண்பை நாசம் செய்யக்கூடியதாகவும் உள்ளது என கருதுகிறார். மனிதர்களுக்கு மத்தியில் உருவாகும்முரண்பாடுகள் ‘வன்முறையற்ற வழிமுறைகள்’ (Non-violent means) கொண்டே தீர்க்கப்படவேண்டும் என்பதே அல்குரானின் வலியுறுத்தப்பட்ட கருத்தாகும். ‘மத பன்மைத்துவம்’ (Religious pluralism) என்பது உலகவிதி, தவிர்க்க முடியாத ஓர் யதார்த்தம் என்பதை அவர்ஆழமாக நம்புகிறார். முஸ்லிம்கள் தமது தூதை அடுத்தவர்களுக்கு எத்திவைக்கும் உரிமைபெறுகிறார்கள். அதனை ஏற்கவும் மறுக்கவும் அடுத்தவர்கள் உரிமை பெறுகின்றனர். எதுவாக இருந்தாலும் பொதுவான பெறுமானங்களில் (Common values) அனைவரும் இணைந்து இயங்க முடியும் என்றும் கூறுகிறார்.       

இஸ்லாம் முன்வைக்கும் அரசியல் சிந்தனையைப் பொறுத்த வரையில், அல்குரான் வரையறுத்ததொரு அரசியல் மாதிரியை குறிப்பிட்டுக் கூறவில்லை, மாற்றமாக அரசியல் சார்ந்தபொதுவான சில அடிப்படைக் கூறுகளையும் விதிகளையுமே கூறியிருக்கிறது என்கிறார்காலித். முஸ்லிம்கள் இவ்வடிப்படை கூறுகளையும் விதிகளையும் முன்நிறுத்தி எவ்வகையானஅரசியல் ஒழுங்கையும் மதிப்பீடு செய்யக்கூடிய நிலைக்கு வர வேண்டும் என்கிறார். இப்பின்னணியில் இன்றிருக்கும் ஜனநாயக ஒழுங்கு ஏனைய மாதிரிகளை விட ஒப்பீட்டளவில் இஸ்லாம் கூறிய அடிப்படைகளையும் விதிகளையும் உத்தரவாதப்படுத்துவதாக அமைகின்றதுஎன கூறுகிறார் அவர். சர்வதிகார மற்றும் எதேச்சதிகார முறைமைகள் இஸ்லாமிய அடிப்படைகளுக்கு முரன்படுவதுடன் ஷரீஆவின் இலக்குகளை அடைவதற்கும் அம்முறைகள் தடையாய் அமைந்துவிடுகின்றன எனவும் கருதுகிறார். ஜனநாயக முறைமை பொறுப்புக் கூறல் மற்றும் பலரது கருத்துக்களை பிரதிநிதித்துவப்படுத்தல் போன்ற பெறுமானங்களை கொண்டிருப்பதை ஆரோக்கியமானதாக கருதுகிறார்.   

The post ​​தூய்மைவாத கருத்தாக்கத்தை கேள்விக்குட்படுத்தும் காலித் அபூ பழ்ல் உடைய சிந்தனைகள் first appeared on Rishard Najimudeen.

]]>
https://rishardnajmudeen.com/2024/10/16/%e0%ae%a4%e0%af%82%e0%ae%af%e0%af%8d%e0%ae%ae%e0%af%88%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4-%e0%ae%95%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4/feed/ 0
உலகமயமாக்கல் ஒழுங்கு: ஒரு முஸ்லிம் அறிஞரின் பார்வை https://rishardnajmudeen.com/2024/10/16/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b4%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2589%25e0%25ae%25b2%25e0%25ae%2595%25e0%25ae%25ae%25e0%25ae%25af%25e0%25ae%25ae%25e0%25ae%25be%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25b2%25e0%25af%258d-%25e0%25ae%2592%25e0%25ae%25b4%25e0%25af%2581%25e0%25ae%2599%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25af%2581-%25e0%25ae%2592%25e0%25ae%25b0 https://rishardnajmudeen.com/2024/10/16/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b4%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0/#respond Wed, 16 Oct 2024 14:22:50 +0000 https://rishardnajimudeen.com/?p=7974 (மொரோக்கோ தத்துவ அறிஞரான பேராசிரியர் தாஹா அப்துர் ரஹ்மான் உடைய மேற்கத்தைய நவீனத்துவம் மீதான விமர்சனத்தின் மிக முக்கிய புள்ளிகளுள் ஒன்றாக உலகமயமாக்கல் மீதான விமர்சனம் பார்க்கப்படுகிறது. உலகமயமாக்கல் பற்றிய அவரது விமர்சனங்களை இக்கட்டுரை மிக சுருக்கமாக அறிமுகப்படுத்துகிறது) “உலகமயமாக்கல்” என்பதனை வரையறுப்பதில் ஒருமுகப்பட்ட கருத்து அறிஞர்கள் மத்தியில் இல்லை. அவர்களுக்கு மத்தியில் வித்தியாசங்கள் இருக்கின்றன. மொரோக்கோ தத்துவ அறிஞர் தாஹா அப்துர் ரஹ்மான் அச்சொல்லை பின்வருமாறு வரையறுக்கிறார்: “உலகமயமாக்கல் என்பது உலகை தொடர்ந்து அறிவுமயமாக்கும் ஒரு [...]

The post உலகமயமாக்கல் ஒழுங்கு: ஒரு முஸ்லிம் அறிஞரின் பார்வை first appeared on Rishard Najimudeen.

]]>

(மொரோக்கோ தத்துவ அறிஞரான பேராசிரியர் தாஹா அப்துர் ரஹ்மான் உடைய மேற்கத்தைய நவீனத்துவம் மீதான விமர்சனத்தின் மிக முக்கிய புள்ளிகளுள் ஒன்றாக உலகமயமாக்கல் மீதான விமர்சனம் பார்க்கப்படுகிறது. உலகமயமாக்கல் பற்றிய அவரது விமர்சனங்களை இக்கட்டுரை மிக சுருக்கமாக அறிமுகப்படுத்துகிறது)

“உலகமயமாக்கல்” என்பதனை வரையறுப்பதில் ஒருமுகப்பட்ட கருத்து அறிஞர்கள் மத்தியில் இல்லை. அவர்களுக்கு மத்தியில் வித்தியாசங்கள் இருக்கின்றன. மொரோக்கோ தத்துவ அறிஞர் தாஹா அப்துர் ரஹ்மான் அச்சொல்லை பின்வருமாறு வரையறுக்கிறார்: “உலகமயமாக்கல் என்பது உலகை தொடர்ந்து அறிவுமயமாக்கும் ஒரு வேலைத்திட்டம். அதனூடாக, தனிமனிதர்கள், சமூகங்களுக்கிடையிலான தொடர்புகளை ஒன்றாக்க விரும்புகிறது. பின்வரும் மூன்று ஆதிக்கங்கள் நிறைவேறுவதனூடாக அத்திட்டம் சாத்தியமாகிறது: அபிவிருத்தி எனும் பெயரில் உருவாக்கப்படும் பொருளாதார ஆதிக்கம், அறிவு எனும் பெயரில் உருவாக்கப்படும் தொழிநுட்ப ஆதிக்கம், தொடர்புசாதனம் எனும் பெயரில் உருவாக்கப்படும் இணைய ஆதிக்கம்”.

இவ்வரைவிலக்கணம் மூன்று அடிப்படை பகுதிகளை தொட்டுக் காட்டுகிறது:

  • அறிவுமயமாக்கும் வேலைத்திட்டம் தொடரியக்கம் கொண்டது, முடிவற்றது.
  • சமூகங்கள், தனி மனிதர்களுக்கிடையிலான தொடர்புகளை ஒன்றுபடுத்த, நெருக்கமாக்க முனைதல். உலகை நகர அளவாக்கல், உலகை கிராம அளவாக்கல், உலகை வீடளவாக்கல் போன்றன உலகமயமாக்கலில் அதிகம் உச்சரிக்கப்படும் சொற்கள்.
  • பொருளாதாரம், தொழிநுட்பம், இணையம் ஆகிய முப்பரிமாண ஆதிக்கம் நோக்கி நகர்தல்.

அபிவிருத்தித் துறையில் உருவாக்கப்படும் பொருளாதார ஆதிக்கமும் "தஸ்கியா" எனும் தூய வளர்ச்சி புறக்கணிக்கப்படலும்

நவீனத்துவத்தின் வரலாற்றுக் கட்டத்தில் முதலாளித்துவம் தோன்றுகிறது. பொருளாதார பலம் அல்லது பொருளாதார ஆதிக்கம் அதன் மையப் புள்ளியாக நிலை நிறுத்தப்படுகிறது. அதனூடாக சமூகத்தில் இருக்கும் பணக்காரன், ஏழை என்ற ஏற்றத்தாழ்வு நீக்கப்பட முடியும், நலன்கள் பகிர்ந்தளிக்கப்பட முடியும் போன்ற கருத்தாக்கங்கள் முன்வைக்கப்படுகின்றன. பொருளாதாரத்தை இலக்காகக் கொண்ட இச்சிந்தனை, இறுதியில் பெரிய நிறுவனங்களது ஆதிக்கத்தின் கீழ் மண்டியிடக் கூடியதாக மாறிவிட்டது. பல்தேசியக் கம்பனிகளும் முதலை வியாபாரிகளும் பொருளாதாரத்தை அதிகரித்துக் கொள்வதை இலக்காகக் கொண்டு தான் விரும்பியதை சந்தைப்படுத்தினர். விரும்பிய வகையில் சந்தைப்படுத்தினர். சந்தையின் கட்டுப்பாட்டையும் அதிகாரத்தையும் தம் வசம் ஈட்டிக் கொண்டனர். அவர்கள் கூறுவதுதான் சட்டம், அவர்கள் சந்தைப்படுத்துவதுதான் கொள்வனவுக்கான பொருட்கள், அவர்கள் உற்பத்தி செய்வதுதான் அத்தியவசியமானவை என்று சந்தை ஒழுங்கு தலை கீழாகப் புரட்டப்படுகிறது.

வெறும் பொருளாதார நலனே இறுதி இலக்காகிப் போகிறது. சந்தை எவ்வித ஒழுங்குகளுமற்றதாக , போட்டி எவ்வித நிபந்தனைகளுமற்றதாக, இலாபம் எவ்வித வரையறைகளுமற்றதாக மாற்றமுறுகிறது. அதன் இயல்பான விளைவு, சந்தை இலஞ்சத்தால் நிரம்பி வழிகிறது, பரஸ்பர உதவி, ஒத்தாசை இல்லாதொழிகிறது, களவு, கொள்ளை குற்றங்கள் மலிந்து கிடக்கிறது, போதைப்பொருட்கள் கிராக்கி பெறுகின்றன. பொருளாதாரத்தை கடவுளாகக் கொள்ளல், பொருளாதார சீர்கேடு என்பன ஆதிக்கம் பெற்ற வெளிப்பாடுகளாக மாறிவிட்டன.

உலகமயமாக்கல் வேலைத்திட்டம்  காரணமாக “தஸ்கியா” (இது ஓர் அரபுச் சொல். மொழி ரீதியாக அச்சொல் தூய்மைப்படுத்தல், வளர்த்தல் ஆகிய இரு கருத்துக்களையும் கொடுக்கிறது) எனும் “தூய வளர்ச்சி” புறக்கணிக்கப்பட்டு, முடக்கப்படுகிறது. தஸ்கியா அல்லது தூய வளர்ச்சி என்பது நலன் ஈட்டப்படல், அதன் ஊடாக மனித நிலைமை – சடரீதியாக, மானசீக ரீதியாக – சீராகுதல் எனலாம். “மசாலிஹ்” எனப்படும் “மனித நலன்கள்” இங்கு முதன்மை இடம் வகிக்கிறது. மனித நலன் என்பது மனித நிலைமை சீராகுவதைக் குறிக்கிறது. அது சடரீதியான வசதிகளைக் குறிப்பது போல மானசீக ரீதியான ஸ்தீர நிலையையும் குறிக்கிறது. அது சாத்தியமாக வளங்களை அபிவிருத்தி செய்வதும் விழுமியங்களை வளர்த்தெடுப்பதும் அவசியமாகிறது.

அறிவியல் துறையில் உருவாக்கப்படும் தொழிநுட்ப ஆதிக்கமும் "தொழிற்பாடு" எனும் அடிப்படை புறக்கணிக்கப்படலும்

“தொழிநுட்பம்” எனும் கருத்தாக்கம் அறிவுருவாக்கம், அறிவு எனும் கருத்தாக்கங்களை விட்டும் வித்தியாசப்படுகிறது. தொழிநுட்பம் அறிவின் விளைவாகத் தோன்றியது. அறிவை விட ஆயுள் குறைந்தது. தொழிநுட்பம் அறிவை பின்தொடர வேண்டும், அறிவின் இலக்குகளை அடைவதில் துணைநிற்க வேண்டும், பணிவிடை செய்தல் வேண்டும். ஆனால், இன்று அது தலைகீழாய்ப் போயுள்ளது.

தொழிநுட்பம் அறிவின் கடிவாளத்தை வைத்திருக்கிறது. தான் விரும்பிய திசையில் அறிவை பயணிக்கச் செய்கிறது. குறிப்பாக, சர்வதேச சந்தை தொழிநுட்பத்தை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது. நுகர்வுத் தேவைகள் தொழிநுட்பத்தினூடாக உருவாக்கப்படுகின்றன. பெரும் நிறுவனங்கள் தன் இலாபத்தை இலக்காகக் கொண்டு அறிமுகப்படுத்தும் வியாபார வேலைத்திட்டங்கள் தொழிநுட்பத்தினூடாக மக்கள்மயப்படுத்தப்படுகின்றன.

தொழிநுட்பத்துக்கும் சமூக வளர்ச்சிக்கும் இடையில் இறுகிய முடிச்சொன்று போடப்படுகிறது. தொழிநுட்ப வளர்ச்சி சமூக வளர்ச்சியின் அளவு கோலாகக் கூட கருதப்படுகிறது. இவ்வகையான பார்வை மெதுமெதுவாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இறுதியில், பொருளாதார நலன், பெரு வியாபாரம், தொழிநுட்பம் என்ற முக்கோண தொடர்பு ஒன்றை ஒன்று பலப்படுத்தும் விதத்தில் உருவாக்கப்படுகிறது. இன்றைய கண்டுபிடிப்புக்களும் ஆய்வுகளும் மயக்கமான, பயங்கரமானதொரு எதிர்காலத்தை எதிர்வு கூறுகின்றன. ஒட்டுமொத்த மனித சமூகத்தினதும் எதிர்காலம் கேள்விக்குறியானதாகவே உள்ளது.

தொழிநுட்பம் காரணமாக தனி மனிதர்களுக்கிடையிலான, சமூகங்களுக்கிடையிலான தொடர்பு “இயந்திரமயம்” ஆகி விட்டது. இயந்திரம் எதனை நாம் அதற்கு உட்புகுத்தினோமோ அதனையே நிறைவேற்றும். இங்கு தொழிற்பாடு காணாமல் போய்விடுகிறது. தொழிற்பாடு ஒரு செயலின் பின்னால் இயங்கும் இலக்குடன் தொடர்புபடுகிறது. தொழிற்பாட்டில் இலக்கை மையமாக வைத்தே இயக்கம் நடைபெறுகிறது, காரியங்கள் நிறைவேற்றிக் கொடுக்கப்படுகிறது. இலக்குமைய தொழிற்பாடு விழுமியம் சார்ந்தது, நலன் சார்ந்தது. இதற்கு முற்றிலும் மாற்றமானதுதான் இயந்திரமயமான இயக்கம்.

தொடர்பாடல் துறையில் உருவாக்கப்படும் இணைய ஆதிக்கமும் "பிணைப்பு" எனும் அடிப்படை புறக்கணிக்கப்படலும்

சமூக விவகாரங்களை ஒழுங்குபடுத்த மனிதன் தொடர்பாடலில் ஈடுபட வேண்டியிருந்தது. தொடர்பாடல் சாதனங்கள் ஒவ்வொன்றாக அவனால் கண்டுபிடிக்கப்பட்டன. இன்று நாம் ஓர் இடத்தை அடைந்திருக்கிறோம். இது இணைய யுகம் (Internet) எனக் கொண்டாடப்படுகிறது. உலகமயமாக்கல் சாதிக்க நினைத்த உலகை கிராம அளவாக்கல் இணைய வசதிகளினூடாக  சாத்தியப்பட முடியும் என சிலர் வாதாடுகின்றனர். இவர்களது வாதத்தின் அடிப்படையில் இணையத்தினூடாக தனிமனிதர்களும் சமூகங்களும் நெருக்கமாகின்றனரா? ஒருவரை ஒருவர் ஊடறுத்துக் கொள்கின்றனரா? என்பதை பலமுறை கேட்டுப்பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது.

இணையத்தினூடாக செய்தியைக் கூறுபவர், பெறுபவர் என இரு சாரார் தொடர்புப்டுகின்றனர். ஒளிக்கற்றைகள் ஊடாக செய்திகளும் தகவல்களும் கடத்தப்படுகின்றன. மனிதன் செய்தியைக் கடத்தும் உபகரணத்தோடு தொடர்புபடும் அளவுக்கு அடுத்த மனிதனோடு தொடர்புபடுவதாக இல்லை. செய்திகள் “சமிக்ஞைகள்” ஆக பறக்கின்றன. அத்தோடு, தகவல்கள் மிகப் பெரும்பாலும் “விளம்பரங்கள்” ஆகவே வலம் வருகின்றன. ஒளிவடிவான சமிக்ஞைகள் உயிரற்றவை. தொலைத்தொடர்பு விளம்பரங்கள் வியாபார நோக்கம் கொண்டவை.

உலகமயமாக்கலின் பண்பாட்டுச் சிக்கலைத் தவிர்த்தல்

உலகமயமாக்கல் ஏற்படுத்தியிருக்கும் மேற்கூறிய முக்கோண வடிவ சிக்கலை தவிர்க்க “உலகம்” பற்றிய புரிதலை சரி செய்ய வேண்டியிருக்கிறது. உலகம் என்பது தனிமனிதர்களையும் சமூகங்களையும் இணைக்கும் இடம். ஆனால், விழுமியங்கள் என்ற வரையறையோடு. “உலகம் விழுமிய அடிப்படையில் பிணைப்பை ஏற்படுத்தும் ஓர் இடம்” என்றே நாம் கருதுகிறோம். எனவே, இங்கு வாழும் மனிதனது செயல்கள் “விழுமியம்சார் செயல்கள்” ஆக இருக்க வேண்டும். ஒருவன் அடுத்தவனை மனிதன் எனும் பெறுமானம் கொடுத்தே, அதாவது விழுமியம்சார் படைப்பு என்ற கருத்தின் அடிப்படையிலேயே, அணுக வேண்டும். மனித சமூகத்துக்கிடையிலான உறவாடல் விழுமியம்சார் உறவாடல் ஆக இருக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் இதற்குப் பொறுப்பாகிறான். இதில் குழறுபடிகளை ஏற்படுத்துபவன் ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கும் தீங்கு விளைவிக்கிறான் என்பதே அர்த்தம்.

பொருளாதாரமும் “தஸ்கியா” எனும் தூய வளர்ச்சியும்

பொருளாதார காரணி அபிவிருத்திக்கான ஏனைய காரணிகளுடன் சேர்ந்து ஒன்றையொன்று பூரணமாக்கிக் கொள்வதுடன், பொருளாதாரம் ஆன்மீகப் பரப்புடன் தொடர்ந்தும் தொடர்பிலிருக்கும் போதே சீரான அபிவிருத்தி ஏற்படுகிறது.

இது மிக முக்கியமாக இரு விடயப் பரப்புக்களை முன்வைக்கிறது:

  1. பொருளாதார காரணி அபிவிருத்திக்கான ஏனைய காரணிகளுடன் சேர்ந்து ஒன்றையொன்று பூரணமாக்கிக் கொள்ளுதல்:

    ஏனைய காரணிகள் என்பதை “இறை கொடை” என்ற கருத்தாக்கத்துடன் தொடர்புப்டுத்தலாம். இறை கொடையைக் குறிக்க அல்குர்ஆன் “பழ்ல்” என்ற சொற்பிரயோகத்தைப் பயன்படுத்துகிறது. “மிகவும் சிறந்தது” என்ற கருத்தைக் குறிக்கும் “பழீலா” என்ற சொல் பெறும் மூலச் சொல்லிலிருந்தே “பழ்ல்” என்ற சொல் பிறக்கிறது. இன்னொரு வகையில், “பழ்ல்” என்பது “ஹைர்” எனப்படும் “நல்லது” என்ற கருத்தையும் கொடுக்கிறது. ஹைர் என்றால் சடரீதியாக, கருத்தியல் ரீதியாக மற்றும் மானசீக ரீதியாக ஏற்படும் நல்ல விடயங்களைக் குறிக்கிறது.

    “இறை கொடையைத் தேடிப்பெற்றுக் கொள்ளல்” (இப்திகாஉ பழ்லில்லாஹ்) என்ற ஏவல் அல்குர்ஆனில் வருகிறது. மிகவும் சிறந்ததையும், நல்லதையும், மனிதனை சடரீதியாக, கருத்தியல் மற்றும் மானசீக ரீதியாக சீர்படுத்தும் வகையில் அது அமைய வேண்டும் என்பதே இறைகொடையைத் தேடிப் பெற்றுக் கொள்ளல் என்பதனூடாக நாடப்படுகிறது. இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால், இறைகொடையைத் தேடிப் பெற்றுக் கொள்ளல் விழுமியம்சார் செயற்பாடொன்றாகும்.

    இங்கு, வியாபாரப் பொருள் பணப் பெறுமதியுடன் மாத்திரம் சுருங்கிக் கொள்வதில்லை. அது விழுமியங்களுடன் இறுகப் பிணைந்திருக்கிறது. நிலைமாறும் வியாபார சந்தை சட்டங்கள் நிலைமாறா விழுமிய பெறுமானங்களோடு இறுகப் பிணைக்கப்படுகின்றன. நிலைமாறா விழுமிய பெறுமானங்களே சந்தையைக் கட்டுப்படுத்தும் ஆதிக்க சக்தியாக திகழ்கின்றன. இதனூடாக, பணம் தூய்மையாக வளர்ச்சி காண்கிறது, சந்தை சூழலும் தூய்மையாக வளர்கிறது. இவ்விரட்டைப் பரிமாண வளர்ச்சியே உண்மையான பொருளாதார அபிவிருத்தி எனக் கொள்ளலாம்.
  2. ஆன்மீகப் பரப்புடன் தொடர்ந்தும் தொடர்பிலிருத்தல்
    உலகிலே பரவிப் போயிருக்கும் கொடைகளை அல்குர்ஆன் எப்போதும் இறைவனுடன் தொடர்புபடுத்திப் பேசுகிறது. சூரா பகரா 198, சூரா முஸ்ஸம்மில் 20, சூரா நஹ்ல் 14 மற்றும் இன்னும் பல வசனங்கள் இறைபெயருடன் தொடர்புபடுத்தியே “பழ்ல்” என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. உலகில் இருக்கும் அருள்களின் உண்மையான சொந்தக்காரன் இறைவன் மட்டுமே என்ற கருத்தை இவ்வசனங்கள் ஆழமாக வலியுறுத்துகின்றன. அத்துமீறல், அநியாயங்களில் ஈடுபட மனிதனுக்கு எவ்வித உரிமையும் இல்லை என்ற விழுமியம்சார் கருத்தொன்றை அவை சுட்டிக் காட்டுகின்றன.

    பணமும் வியாபாரப் பொருட்களும் கற்புலனாகுபவை. எப்போதும் மனிதனை ஈர்த்து, அவற்றோடு கட்டிப் போடக்கூடியவை. இதிலிருந்து மனிதனை விடுவிக்கும் சக்தி இறைவனோடு மனிதனைத் தொடர்புப்டுத்தும் ஆன்மீகப் பெறுமானத்துக்கே உண்டு. சந்தைக்கும், பணத்துக்கும், வியாபார நடவடிக்கைக்கும் மனிதன் ஆன்மீகப் பெறுமானம் வழங்கும்போது வியாபார நடவடிக்கை வெறுமனே பொருள் மாற்றிக்கொள்ளல் என்ற நிலையிலிருந்து நல்லவைகளைப் பகிர்ந்துகொள்ளல் எனும் உயர்நிலை நோக்கி முன்னேரிச் செல்வதைச் சுட்டி நிற்கிறது.

தொழிநுட்பமும் "இலக்குகளை கருத்திற் கொள்ளல்" எனும் அடிப்படையும்

உபகரணங்களினூடாக நிறைவேற்றிக் கொள்ளல் எனும் கட்டத்திலிருந்து குறிப்பிட்ட செயலது இலக்குகளை கருத்திற் கொண்டு தொழிற்படுத்தல் எனும் கட்டம் நோக்கி நகர்வதை இது குறிக்கிறது. பயனுள்ள அறிவு என்பது இலக்குகளும் விளைவுகளும் கருத்திற் கொள்வதனூடாகவே சாத்தியமாகும்.  

இது மிக முக்கியமாக இரு விடயப் பரப்புக்களை முன்வைக்கிறது:

  1. ஒரு செயலின் பின்னால் நாடப்படும் இலக்குகளைக் கருத்திற்கொள்ளல்:
    குறிப்பிட்டதொரு செயலது வெறும் காரண, காரியத்துடன் மாத்திரம் சுருங்கிக் கொள்ளாது அச்செயலினூடாக எதிர்பார்க்கப்படும் அடைவுகள், இலக்குகள் கருத்திற் கொள்ளப்படுவதே அறிவின் உண்மையான எதிர்பார்ப்பாகும்.
  2. ஒரு செயல் தோற்றுவிக்கும் விளைவுகள் கருத்திற்கொள்ளப்படல்:
    செயல்களது விளைவுகள் இருவகைப்படும். கிட்டிய எதிர்காலத்தில் தோற்றம்பெரும் விளைவுகள், நீண்ட காலத்தின் பின்னர் தோற்றம் பெறும் விளைவுகள். உபகரணங்கள் ஒருபோதும் விளைவுகளை சிந்திக்கப் போவதில்லை. அறிவியல் யுகத்தில் மனிதனுக்கு நலனைப் பெற்றுத்தரும் விடயங்களே முதன்மை வகிக்க வேண்டும்.

இணையமும் "நல்லதைப் பரிமாறிக் கொள்ளல்" எனும் அடிப்படையும்

சரியான தொடர்பாடல் மனிதர்களுக்கு மத்தியிலான நல்ல பேச்சுக்கள் மூலமே சாத்தியமாகும்.

இது மிக முக்கியமாக இரு விடயப் பரப்புக்களை முன்வைக்கிறது:

  1. நல்ல விடயங்கள் இல்லாவிட்டால் “நல்லதைப் பரிமாறிக் கொள்ளல்” (தாஹா அப்துர் ரஹ்மான் இதற்கு “தஆருப்” என்ற சொல்லைப் பயன்படுத்துகிறார். “நன்மை” என்பதைக் குறிக்கும் “மஃரூப்” என்ற சொல்லின் மூலச் சொல்லிலிருந்தே தஆருப் என்ற சொல்லும் பிறக்கிறது)   சாத்தியமற்றது.  நல்லவைகளைப் பரிமாறல் என்பது தகவல்களைப் பரிமாற்றிக் கொள்ளல் அல்ல. அதனை விட விசாலமானது. குறிப்பாக, நல்ல விழுமியங்கள் இங்கு தொடர்புபடுகின்றன. பெறுபவர் நல்லதைப் பெற்று, தன் நடத்தைகளை ஒழுங்குபடுத்திக் கொள்கிறார். இங்கு நலன்களைப் பரிமாறிக் கொள்ளலே நடைபெறுகின்றன. வெறும் தகவல் பரிமாற்றம் மிகப் பெரும்பாலும் உயிரற்ற மின்னலைக் கீற்றுக்கலாகவும், வியாபார விளம்பரங்களாகவுமே நகர்கின்றன. நல்லது என்பதற்குப் பதிலாக இலாப நோக்கம் முதன்மையாகி விடுகிறது.  
  2. பரஸ்பரம் ஒருவரை ஒருவர் ஏற்றுக் கொள்ளாமல் நல்லதைப் பரிமாறிக் கொள்ள முடியாது:
    நல்லதொரு விடயத்தை எடுப்பவரும் கொடுப்பவரும் “நல்லது” என்ற அடிப்படை விழுமியத்தில் இணைகின்றனர். விழுமிய அடிப்படையிலானதொரு பிணைப்பு உருவாக்கப்படுகிறது. நல்லது என்பதன் காரணமாக பரஸ்பரம் ஒருவரை ஒருவர் மதித்தல், திறந்த மனதோடு அணுகுதல், சகிப்புத்தன்மை, பரஸ்பர உதவி, நெருக்கம், அன்பு, நல்ல விடயத்துக்கான போட்டி போன்ற பண்புகள் மிகைக்கின்றன. எடுப்பவர் கொடுப்பவருடைய சூழல், கலாச்சாரம் போன்ற தனித்துவ தன்மைகளையும் அங்கீகரித்த நிலையிலேயே எடுத்துக் கொள்கிறார். இங்கு ஆரோக்கியமானதொரு பரிமாற்றமே நடைபெறுகிறது.

The post உலகமயமாக்கல் ஒழுங்கு: ஒரு முஸ்லிம் அறிஞரின் பார்வை first appeared on Rishard Najimudeen.

]]>
https://rishardnajmudeen.com/2024/10/16/%e0%ae%89%e0%ae%b2%e0%ae%95%e0%ae%ae%e0%ae%af%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b4%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%92%e0%ae%b0/feed/ 0
இஸ்லாத்தை துறத்தலுக்கான தண்டனை என்ன?  https://rishardnajmudeen.com/2024/10/16/%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9/?utm_source=rss&utm_medium=rss&utm_campaign=%25e0%25ae%2587%25e0%25ae%25b8%25e0%25af%258d%25e0%25ae%25b2%25e0%25ae%25be%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25af%2588-%25e0%25ae%25a4%25e0%25af%2581%25e0%25ae%25b1%25e0%25ae%25a4%25e0%25af%258d%25e0%25ae%25a4%25e0%25ae%25b2%25e0%25af%2581%25e0%25ae%2595%25e0%25af%258d%25e0%25ae%2595%25e0%25ae%25be%25e0%25ae%25a9 https://rishardnajmudeen.com/2024/10/16/%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9/#respond Wed, 16 Oct 2024 13:47:44 +0000 https://rishardnajimudeen.com/?p=7964 ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை முஸ்லிம் சமூகம் வித்தியாசமான உரையாடல்களில் ஈடுபட வேண்டியிருக்கிறது. பல கேள்விகள் முஸ்லிம்கள் நோக்கி முன்வைக்கப்படுகின்றன. அல்குர்ஆன் தீவிரவாதத்தையும் வன்முறையையும் தூண்டுகிறது என சிலர் கூறுகின்றனர். அது பெண்களுக்குரிய உரிமைகளை கொடுக்காது அவர்களை அடக்குகிறது என இன்னும் சிலர் வாதாடுகின்றனர். இஸ்லாத்தை துறப்பவர்களைக் கொலை செய்ய வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துவதாக இன்னொரு குற்றச்சாட்டும் இருக்கிறது. குறிப்பாக இக்குற்றச்சாட்டை அண்மையில் சிலர் மிக பகிரங்கமாக கூறி வருகின்றனர். இவர்கள் கூறுவது போல இஸ்லாத்தை [...]

The post இஸ்லாத்தை துறத்தலுக்கான தண்டனை என்ன?  first appeared on Rishard Najimudeen.

]]>

ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து இலங்கை முஸ்லிம் சமூகம் வித்தியாசமான உரையாடல்களில் ஈடுபட வேண்டியிருக்கிறது. பல கேள்விகள் முஸ்லிம்கள் நோக்கி முன்வைக்கப்படுகின்றன. அல்குர்ஆன் தீவிரவாதத்தையும் வன்முறையையும் தூண்டுகிறது என சிலர் கூறுகின்றனர். அது பெண்களுக்குரிய உரிமைகளை கொடுக்காது அவர்களை அடக்குகிறது என இன்னும் சிலர் வாதாடுகின்றனர். இஸ்லாத்தை துறப்பவர்களைக் கொலை செய்ய வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துவதாக இன்னொரு குற்றச்சாட்டும் இருக்கிறது. குறிப்பாக இக்குற்றச்சாட்டை அண்மையில் சிலர் மிக பகிரங்கமாக கூறி வருகின்றனர். இவர்கள் கூறுவது போல இஸ்லாத்தை துறந்தவர்கள் கொலை செய்யப்பட வேண்டுமா என்ற கருத்தை இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரங்களான அல்குர்ஆன் மற்றும் இறை தூதரது ஹதீஸ்களினூடாகப் புரிந்துகொள்ள இக்கட்டுரை முயல்கிறது.

அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை ஆய்வு செய்யும்போது கட்டுரை பின்வரும் இரு அணுகுமுறைகளைப் பின்பற்றுகிறது.

  1. குறிப்பிட்டதொரு தலைப்பை ஆய்வுக்குட்படுத்தும்போது அத்தலைப்புடன் தொடர்புபடும் அனைத்து அல்குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் ஆரம்பமாக திரட்டிக்கொள்ளல்.
  2. ஒன்று திரட்டிய அல்குர்ஆன் வசனங்களையும் ஹதீஸ்களையும் புரிந்துகொள்ள முற்படும் போது அல்குர்ஆன் இறங்கிய காலப்பகுதி மற்றும் ஹதீஸ்கள் கூறப்பட்ட, நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னணியையும் அரசியல், சமூக சூழலையும் புரிந்துகொள்ளல்.

இவ்விரு முறைமைகளினூடாக இஸ்லாத்தைத் துறத்தல் பற்றி அல்குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள் என்ன கூறியிருக்கின்றன, அச்செயற்பாட்டுக்கான தண்டனை யாது என்பதை ஆய்வுக்குட்படுத்த முயல்கிறோம். இஸ்லாத்தைத் துறத்தல் பற்றி வந்திருக்கும் அல்குர்ஆன் வசனங்களை இரு வகைகளாக பிரித்துப் பார்க்கலாம்:

  1. மத சுதந்திரம் அல்லது நம்பிக்கை சுதந்திரம் பற்றி பேசும் வசனங்கள்
  2. இஸ்லாத்தைத் துறத்தல் அல்லது இஸ்லாத்தின் அடிப்படைகளை ஏற்று பின் இன்னொரு மதத்தை, நம்பிக்கையை ஏற்றல்.

மத சுதந்திரத்தைப் பேசும் வசனங்களில் சில மிகத்தெளிவாகவும் இன்னும் சில மறைமுகமாகவும் குறிப்பிட்ட விடயத்தை வலியுறுத்துகின்றன. மத சுதந்திரம் இஸ்லாத்தின் “அடிப்படை விதி” என்பதை இரு வசனங்கள் மிகத் தெளிவாக முன் வைக்கின்றன:

“மார்க்கத்தில் நிர்ப்பந்தம் என்பதே இல்லை”
(சூரா பகரா 256),
"உங்கள் இறைவன் நாடியிருந்தால் பூமியிலுள்ள அனைவரும் நம்பிக்கை கொண்டவர்களாக மாறியிருப்பர். அனைவரும் நம்பிக்கை கொண்டவர்களாக மாறவேண்டும் என நீங்கள் அவர்களை நிர்ப்பந்திக்கிறீர்களா?"
(சூரா யூனுஸ் 99)

இவ்விரு வசனங்களும் மதசுதந்திரம் பற்றிய இஸ்லாத்தின் தீர்ப்பை முன்வைக்கும் வசனங்கள். இவ்விரு வசனங்களும் பொது சட்டமொன்றை உருவாக்குகின்றன. தேர்வுச் சுதந்திரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு மனிதனும் தனக்கு விருப்பமான கொள்கையை, நம்பிக்கையை ஏற்றுக் கொள்ளவும் நடைமுறைப்படுத்தவும் முடியும் என்ற உண்மையை மிகத் தெளிவாக இவ்விரு வசனங்களும் முன்வைக்கின்றன.

இஸ்லாத்தைத் துறத்தல் அல்லது இஸ்லாத்தின் அடிப்படைகளை ஏற்று பின் இன்னொரு மதத்தை, நம்பிக்கையை ஏற்றுக் கொள்ளல் பற்றிய வசனங்கள் பல வந்திருக்கின்றன. இஸ்லாத்தை துறத்தல் (ரித்தத்) எனும் சொல் ஆறு வசனங்களில் ( பகரா: 109, 217, ஆலு இம்ரான்: 100, 149, மாஇதா: 54, முஹம்மத்: 25) பயன்படுத்தப்பட்டிருப்பதுடன் இஸ்லாத்தைத் துறத்தல் எனும் விடயத்தை குறிக்கும் ரித்தத் எனும் சொல் பயன்படுத்தப்படாது, வேறு விதமாக ஒன்பது வசனங்களில் கலந்துரையாடப்படுகிறது: (ஆலு இம்ரான்: 72-73, 86-90, நிஸா: 88-89, 137, மாஇதா: 5, அன்ஆம்: 88, தவ்பா: 73-74, நஹ்ல்: 106, ஸுமர்: 65). மேற்குறிப்பிட்ட அனைத்து வசனங்களையும் கவனமான வாசிப்புக்குட்படுத்தும் போது இஸ்லாத்தைத் துறப்பதற்கான உலக தண்டனை எதனையும் அவை முன்வைக்கவில்லை. ஒரு வசனம் கூட நேரடியாகவோ மறைமுகமாகவோ உலக தண்டனையை குறிப்பிட்டுக் கூறவில்லை. மாற்றமாக தூதை எத்திவைப்பதில் கவனம் செலுத்தும் படி இறைதூதரை வழிகாட்டுகிறது. இறைதூதரது பணி “எத்திவைத்தல்” மாத்திரமே என அல்குர்ஆன் பல இடங்களில் தெளிவாகக் கூறுகிறது.

இஸ்லாத்தின் முதல் மூலாதாரமான அல்குர்ஆன் இஸ்லாத்தை துறத்தலுக்கு எவ்வித உலக தண்டனையையும் கூறாத நிலையில் அதன் அடுத்த மூலாதாரமான இறைதூதரது ஹதீஸ்கள் நோக்கி நகர வேண்டியுள்ளது.

“இஸ்லாத்தை துறத்தல்” என்ற காரணத்துக்காக கொலை செய்யப்பட வேண்டும் என்று தெளிவாக தூதரது ஏவல் எங்கும் பதிவாகியதாக இல்லை. மாற்றமாக, பிரபல்யமான இரு நிகழ்வுகள் இஸ்லாத்தைத் துறந்தவர்களை இறைதூதர் கொலை செய்யவில்லை என்பதை மிகத் தெளிவாக சுட்டிக் காட்டுகின்றன:

  1. “ஓர் அரபி இறைதூதரிடம் வந்து இஸ்லாத்தை ஏற்பதாக சத்திய பிரமாணம் செய்தார். மதீனாவில் இருக்கும் போது அவரை கடும் காய்ச்சல் பீடித்தது. நபியவர்களிடம் மீண்டும் வந்த அவர் தனது சத்திய பிரமாணத்தை மீளப்பெற அனுமதிக்குமாறு வேண்டினார். நபியவர்கள் மறுக்கிறார்கள். மீண்டுமொரு முறை வந்து தனது சத்திய பிரமாணத்தை மீளப்பெற அனுமதிக்குமாறு வேண்டினார். நபியவர்கள் மீண்டும் மறுக்கிறார்கள். மூன்றாவது முறையாகவும் வந்து தனது சத்திய பிரமாணத்தை மீளப்பெற அனுமதிக்குமாறு வேண்டினார். நபியவர்கள் மீண்டும் மறுக்கிறார்கள். பின் அந்த அரபி அங்கிருந்து வெளியேறிச் சென்றார். நபியவர்கள் கூறினார்கள்: மதீனா நகரம் தனது அசிங்கங்களை வெளியேற்றுகிறது. அதன் நல்ல பகுதிகள் மேலும் பட்டைதீட்டப்படுகின்றன (புஹாரி, முஸ்லிம்). குறிப்பிட்ட அரபி தன்னை இஸ்லாத்தை விட்டும் நீக்கிக் கொள்வதாக தெளிவாக கூறி வெளியேறிய போது நபியவர்கள் அவரது சுதந்திரத்தின் படி செயற்பட விட்டுவிட்டார்கள். கொலை செய்யவோ தண்டிக்கவோ இல்லை.
  2. ஒரு கிறிஸ்தவர் இஸ்லாத்தை ஏற்றார். அல்குர்ஆனின் சூறா பகரா, மற்றும் சூறா ஆல இம்ரான் போன்ற சூறாக்களை அழகாக ஓதினார். நபியவர்களுக்கு எழுதிக் கொடுப்பவராகவும் இருந்தார். சிறிது காலத்தில் மீண்டும் கிறிஸ்தவராக மாறினார். தான் எழுதிக் கொடுத்தவற்றைத் தவிர முஹம்மத் எதனையும் அறிபவராக இல்லை என்றும் கூறித் திரிந்தார். சிறிது காலத்தின் பின் இயல்பு மரணம் அடைந்தார். அவரை அடக்கம் செய்தனர்… (புஹாரி). இந்த ஹதீஸ் இஸ்லாத்தை துறந்து பின் இஸ்லாத்துக்கும் அதன் தூதருக்கும் எதிராக பிரச்சாரம் செய்தவர் கொலை செய்யப்படவில்லை, மாற்றமாக இயற்கை மரணமெய்தினார் என்றே வருகிறது.

இஸ்லாத்தைத் துறந்தவர்களில் சிலர் கொலை தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்ற ஹதீஸ்கள் சிலதும் இருக்கின்றன. அவர்கள் அனைவரும் அன்று சட்டத்திலிருந்த கொலை தண்டனைக்குரிய இன்னொரு குற்றத்தோடு தொடர்புபட்டவர்கள் என்பதை நாம் அது பற்றி வந்திருக்கும் ஹதீஸ்களை பின்னணி நிகழ்வுகளுடன் இணைத்துப் பார்க்கின்ற போது புரிந்துகொள்ள முடியும். இங்கு ஓரிரு உதாரணங்களை தருவது விடயத்தை மேலும் தெளிவுபடுத்தலாம்:

  1. உக்ல் மற்றும் உரைனா கோத்திரத்தை சேர்ந்த சிலர் கொலை செய்யப்படுகின்றனர். காரணம் அவர்கள் ஒட்டக இடையர்கள் பலரை கொலை செய்து ஒட்டகங்களை திருடிச் சென்றிருந்தனர். அதே நேரம் அவர்கள் இஸ்லாத்தையும் துறந்திருந்தனர். நபியவர்களது தண்டனை இஸ்லாத்தை துறத்தலுக்கானதல்ல. மாற்றமாக கொலை செய்தமைக்கானது (புஹாரி).
  2. ஹாஷிம் இப்னு சுபாபா என்பவர் தவறுதலாக மதீனாவாசி ஒருவரால் கொலை செய்யப்படவே அவரது சகோதரரான மிக்யஸ் இப்னு சுபாபா என்பவர் தன் சகோதரருக்காக பழிக்குப் பழி வாங்க மதீனா வந்தார். முஸ்லிம் போன்று நடித்தார். நஷ்ட ஈட்டையும் பெற்றுக் கொண்டார். தன் சகோதரனை கொலை செய்தவரையும் கொலை செய்தார். பின் பொய்யாக வெளிப்படுத்தி வந்த இஸ்லாத்தையும் துறந்தார். இந்நிகழ்வு பற்றி கவிதையும் கூறினார். நபியவர்கள் இவரை கொலை செய்யும்படி ஏவினார்கள் (ரியாழுர் ஸர்களி).
  3. அப்துல்லாஹ் இப்னு கதல் இஸ்லாத்தை ஏற்று மக்காவிலிருந்து மதீனா வந்தார். ஸகாத் வரியை அறவிட அவரையும் குஸாஆ கோத்திரத்தைத் சேர்ந்த ஒருவரையும் இறைத்தூதர் அனுப்பிவைத்தார். ஸகாத் தொகையை அறவிட்டதன் பின் குஸாஆ கோத்திரத்தைச் சேர்ந்தவரை கொலை செய்துவிட்டு திரட்டிய பணத்தையும் எடுத்துக் கொண்டு மக்கா திரும்பினார் (இப்னு ஹிஷாம்).

இவ்வாறுதான் ஏனைய நிகழ்வுகளும். அன்றைய சூழலில் சட்டமாக்கப்பட்டிருந்த கொலை தண்டனைக்கான குற்றமொன்றை செய்யும் போது அதற்குரிய தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. அவ்வாறு தண்டிக்கப்பட்டவர்களுள் சிலர் இஸ்லாத்தை துறந்தவர்கள். கொலைக்கான காரணம் குறிப்பிட்ட குற்றமே தவிர இஸ்லாத்தை துறத்தலல்ல என்பதையே மேலுள்ள விளக்கம் தெளிவுபடுத்துகிறது.

இன்னுமொரு ஹதீஸ் இருக்கிறது. அதனை மக்கா, மதீனா சூழல் மற்றும் அன்று நிழவிய இரு முகாம்கள் சார்ந்த முரண்பாடுகளது பின்னணியில் புரிந்து கொள்வதே பொறுத்தமானது. நபியவர்களது சூழல் அடிமைத்துவம் மிகைத்திருந்த காலம். பணக்காரர்களும் அதிகார வர்க்கத்தினரும் ஏனையவர்களை அடக்கியாளும் போக்கே அங்கிருந்தது. ஒரு சிறு தொகையினர் எல்லை மீறிய அதிகாரம் பெற ஏனையோர் அவர்களுக்கு அடிமைகளாக இருந்து பணிவிடை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். பெண்கள் பெறுமானமற்றவர்களாக இருந்தனர். அநியாயமும் அநீதியும் தலைவிரித்தாடின. சமூக ஒழுங்கின் எல்லா பகுதிகளும் முறையற்றிருந்தது.

இக்காலப்பகுதியில்தான் இறைதூதருக்கு அல்குர்ஆன் அருளப்படுகிறது. ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசத்தை உடைத்தெறியும்படி ஏவியது. பெண்களது இயல்புக்கேற்ற பொறுப்புக்களை சுமத்தியது. அதிகாரவர்க்கம், அதிகாரமற்ற வர்க்கம் என்ற பிரிவினைகளை இல்லாமல் செய்வதற்கான வழிவகைகளை மேற்கொண்டது. சுருக்கமாக கூறுவதாக இருந்தால் அன்றிருந்த சமூக ஒழுங்கை அல்குர்ஆன் கேள்விக்குட்படுத்தி மீளொழுங்குபடுத்த முனைந்தது எனலாம். இப்புதிய போக்கு இதுகால வரையிலும் தன் ஆதிக்கத்தின் கீழ் மக்காவை வைத்திருந்து தன் நலன்களை அடைந்துகொண்டிருந்த தலைவர்களை கதிகலங்கச் செய்தது. நிழவிய சமூக ஒழுங்கில் மாற்றமேற்படுவது தனது நலன்களை பாதிக்கும் என்ற வகையில் புதிய தூதை எதிர்க்க ஆரம்பிக்கின்றனர். தம்மோடு பலரையும் இணத்துக் கொள்கின்றனர். முஹம்மத் நபியை சார்ந்தவர்களை சித்திரவதை செய்கின்றனர். சிலரை கொன்றும் விடுகின்றனர். இறுதியில் நபியவர்களை கொலை செய்துவிட தீர்மாணிக்கின்றனர். மக்காவை விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்த நிலை.

நபியவர்களும் தூதை ஏற்றுக் கொண்டவர்களும் மதீனா நகரில் தஞ்சமடைகின்றனர். சொத்துக்களையும் உடமைகளையும் இழந்து புதிய நகரத்தில் குடியமர்ந்து சிறிது காலத்துக்குள்ளால் மக்கா தலைவர்கள் மீண்டும் முஸ்லிம்கள் மீது தாக்குதல்கள் நடாத்த ஆரம்பிக்கின்றனர். மக்கா தலைவர்களைச் சார்ந்த அநியாயக்காரர்கள் ஒரு பக்கமும் நபியவர்களை சார்ந்த அநியாயமிழைக்கப்பட்டவர்கள் அடுத்த பக்கமுமாக இரு அணிகள் தோற்றம் பெறுகின்றன. இக்காலப்பகுதிகளில் ஒரு அணியிலிருந்து தன்னை விலக்கி, அடுத்த அணிக்கு ஆதரவு தெரிவிப்பது முதல் அணியின் இருப்பையே பாதிக்கும் ஒரு விடயம். இச்சமூக அரசியல் சூழல் கருத்திற் கொள்ளப்பட்டே “யார் தன்னுடைய கொள்கையை மாற்றிக் கொள்கிறாரோ அவரை கொன்று விடுங்கள்” என்ற ஹதீஸைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஓர் அணியிலிருந்து இன்னோர் அணிக்கு மாறுவதென்பது முதல் அணியின் இரகசியங்கள், தந்திரோபாய திட்டங்கள், எதிர்கால வேலைத்திட்டங்கள் என்ற அனைத்தையும் சுமந்து அடுத்த அணிக்கு கடத்துகிறார் என்றே அர்த்தம். நவீன கால பரிபாஷையில் “இராஜ தந்திர துரோகம்” என்று கூறலாம். இன்று இராஜதந்திர துரோகத்துக்கென்று தண்டனை இருக்கிறது. தன்னை எல்லா வகையிலும் அடக்கியாழ முயற்சிக்கும், தன் உடமைகளை பறித்து தன்னை நாட்டை விட்டு விரட்டிய எதிரணிக்கு ஆதரவு தெரிவித்தல் என்பதும் அவ்வாறான ஒன்றுதான். சில போது அதனை விட பாரதூரமானதொன்றாக கூட கருதலாம். போராட்ட காலத்தில் எதிரணிக்கு மாறியவர் பற்றியே இறுதியாக கூறிய ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

இஸ்லாத்தைத் துறத்தலுக்கு அல்குர்ஆனோ ஹதீஸ்களோ குறிப்பிட்டதொரு தண்டனையை விதிக்கவில்லை என்பது மேற்கூறிய விளக்கங்களிலிருந்து தெளிவாகிறது. மத சுதந்திரத்தை ஊர்ஜிதப்படுத்தல் இஸ்லாத்தின் அடிப்படை இலக்குகளில் ஒன்று என்ற கருத்தை முஸ்லிம் அறிஞர்கள் பலர் வலியுருத்துகின்றனர். நாம் ஆரம்பமாக முன்வைத்த அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை ஆய்வு செய்யும்போது பின்பற்ற வேண்டிய இரு அணுகுமுறைகளையும் அல்லது அவற்றுள் ஒன்றை புறக்கணிக்கும் போது பிழையான முடிவுகள் தோற்றம் பெற வாய்ப்பிருக்கிறது என்பதையும் அழுத்திக் கூற வேண்டியுள்ளது.

(maatram.org இல் பிரசுரிக்கப்பட்ட கட்டுரை)

The post இஸ்லாத்தை துறத்தலுக்கான தண்டனை என்ன?  first appeared on Rishard Najimudeen.

]]>
https://rishardnajmudeen.com/2024/10/16/%e0%ae%87%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a9/feed/ 0